Thursday, October 8, 2009

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஜேவிபி அடிப்படை உரிமை மீறல் வழக்கு.

தென் மாகாண சபைக்கான ஜேவிபி யின் ஹம்பாந்தோட்டை வேட்பாளர் குழுத்தலைவர் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரத்தின விற்கு எதிராக அடிப்படை மனித உரிமை வழக்குத் தொடர்ந்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் 11 ஜேவிபி அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அவை ஒவ்வொன்று தொடர்பாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அம்முறைப்பாடுகளின் பிரகாரம் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கும், கட்சியின் பனர் ஒன்றை காட்டியமைக்கா கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கும் எதிராகவே இவ்வழக்கு தொடரப்பட்டள்ளது.

No comments:

Post a Comment