Friday, October 23, 2009

ராஜரட்ணம் புலிளுக்கான முன்னணி நிதி வழங்குனர்களில் ஒருவர். கேபி

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க FBI இனரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கோடீஸ்வரர் ராஜரட்ணம், புலிகளியக்கத்திற்கு நிதிவழங்கி வந்த முன்னணி நபர்களில் ஒருவர் என புலிகளியக்கத்திற்காக 3 தசாப்தங்கள் ஆயுதங்கடத்திலில் ஈடுபட்டவரும், பிரபாகரன் மறைவிற்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவருமான கேபி என பலராலும் அறியப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜரட்டணம் புலிகளியக்கத்திற்கு நிதிவழங்கியதான கேபி யின் சாட்சியம் தொடர்பான இரு ஆவனங்கள் அமெரிக்க புலனாய்வுத்துறையின் கையில் உள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

No comments:

Post a Comment