ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாடுகளின் அச்சம் சரியானது தானா என்பதை கண்டறிவதற்காக ஐ.நா. அணுசக்தி நிபுணர்கள் 2 பேர் ஈரான் சென்றனர். இந்த தகவலை ஈரான் அணுசக்தி கழகத்தின் அதிகாரி அலி ஷிர்சடியான் தெரிவித்தார். இந்த நிபுணர்கள் டெக்ரானுக்கு தெற்கே 160 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டு வரும் ïரேனியம் செறிவூட்டுவதற்கான 2-வது ஆலையில் அவர்கள் ஆய்வு நடத்துவார்கள். இந்த இடத்தை கடந்த 3 ஆண்டுகளாக ஈரான் ரகசியமாக வைத்து இருந்தது. கடந்த மாதம் தான் இந்த இடத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment