17 வயதுடைய யுவதி ஒருவரை ஏமாற்றி மாலைதீவுக்கு கொண்டு சென்று அங்கு சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முற்பட்ட இலங்கைப் பெண் ஒருவரை மாலைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜரத்னம் குகப்பிரியா எனப்படும் 24 வயதுடைய பெண் 17 வயதுடைய சிறுமி ஒருவரை மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, அங்கு அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முனைந்துள்ளார்.
மாலைதீவு ஹென்வெறு பிரதேசத்தில், ஆடம்பர மாளிகை ஒன்றில் சகா ஒருவருடன் தங்கியிருக்கும் குகப்பிரியா, சிறுமியை அழைத்து சென்ற நாளில் இருந்து அவளை, வீட்டின் அறை ஒன்றினுள் பூட்டி வைத்திருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 வயது சிறுமி மாலைதீவு அவசர பொலிஸாருக்கு அழைத்தபோது விடயம் வெளியாகியுள்ளது.
சிறுமியை பாரமெடுத்த இலங்கைத் தூதரக அதிகாரிகள் அவரை தூதரக மேற்பார்வையில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment