Tuesday, October 13, 2009

41 ஆண்டுகளுக்கு பிறகு விமானம் கடத்தியவர் கைது

அமெரிக்காவை சேர்ந்தவர் லூயிஸ் ஆர்மன்டோ பெனா சோல்ட்ரன். கடந்த 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் நியூயார்க்கில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை கடத்தினார். அந்த விமானம் மீட்கப்பட்டது. ஆனால், இவர் தலை மறைவாக இருந்தார். இந்த நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நியூயார்க்கில் உள்ள ஜான் எப். கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தில் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்த இவர் கைது செய்யப்பட்டார். இன்று (13-ந்தேதி) இவர் மங்கட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றார்.

No comments:

Post a Comment