Tuesday, October 27, 2009

400 கிலோகிராம் அதிசக்கிவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு.

முல்லைத்தீவு, கரையாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கி.கி அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வவுனியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வில்லி அபயநாயக்க அவர்களின் தலைமையில் செயற்பட்ட பொலிஸ் குழுவொன்று 50 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 250 கி.கி ரிஎன்ரி ரக வெடிபொருட்களையும், 25 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சி4 ரக வெடி மருந்துக்களையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment