Friday, September 18, 2009

புதைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய ஆவணங்கள் மீட்பு.

மட்டக்களப்பு நாறக்கமுல்ல பிரதேசத்தில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த அவ்வியக்கத்தின் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

தோண்டி எடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில், புலிகளின் நிதிபரிமாற்றம், வங்கி கணக்குகள், உறுப்பினர்களின் விபரங்கள், புலிகளின் கட்டமைப்பின் வலைப்பின்னல் தொடர்பான தகவல்கள், மாவீரர் குடும்ப விபரங்கள் என்பன அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment