Thursday, September 17, 2009

ஆட் கடத்திலில் ஈடுபட்ட இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது.

அரசியல் தஞ்சம் கோரும் 80 மேற்பட்டோரை சட்டவிரோதமாக அவுத்திரேலியாவினுள் கொண்டுவர முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு இலங்கையர் மற்றும் இரு இந்தோனேசியர்களை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி அரசியல் தஞ்சம் கோருவோர் 32 பேர் அவுஸ்திரேலியாவினுள் நுழைவதற்கு படகுகளை ஒழுங்கு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிறிஸ்மஸ் தீவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டபோத நேற்று அவுஸ்திரேலிய, பேர்த் விமான நிலையத்தில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment