Wednesday, September 23, 2009

நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நளினி தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். நளினிக்கு ஆதரவாத மேலும் 12 கைதிகள் அவரது விடுதலைவேண்டி உண்ணாவிரதத்தில் குதித்திருந்தனர்.

இந்நிலையில், நளினியின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் உறுதியளித்ததையடுத்து நளினி உண்ணாவிரதத்தை இன்று காலை முடித்துக் கொண்டார்.

இந்திய பிரதமர் ரஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 24, 2000 தேதியன்று தமிழக அரசு அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிட்டிருந்தது.

ஆயுள் தண்டனைக் காலமான 14 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் செப்டம்பர் 11ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment