Wednesday, September 16, 2009

பதுக்கி வைக்கப்பட்டிருந்து சிகரட்டுக்கள் விசேட அதிரடிப்படையனரால் கண்டுபிடிப்பு.

பாதாள உலக்குழுவின் முக்கிய புள்ளி ஒருவரால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு பகல, இம்புல்கொட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான சிகெரெட்டுக்களை விசேட அதிரடிப் படையினர் கண்டு பிடித்துள்ளனர். பாதாளக் குழுவொன்றின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஆடம்பரமாடி ஒன்றின் நிலக்கீழ் அறைகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள சிகெரெட்டுக்களின் பெறுமதி 80 லட்சம் ரூபாய்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச பொலிஸார் தயக்கம் காட்டிவருகையில் விசேட அதிரடிப்படையினர் இவ்வாறான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment