Friday, September 11, 2009

மாஸ்ரர்களான ஜோர்ஜ், மனோ ஆகியோர் மனிதாபினான அடிப்படையில் விடுதலை.

புலிகளியக்கத்தின் மொழிபெயர்ப்பாளரும், அவ்வியக்கத்தின் நீண்டநாள் செயற்பாட்டாளருமான ஜோர்ஜ் மாஸ்ரர் மற்றும் புலிகளின் ஊடக ஒருக்கிணைப்பாளராக செயற்பட்டுவந்த தயா மாஸ்ரர் ஆகியோர் நீதிமன்றினால் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வன்னியல் போர் முடிவடைவதற்கு சுமார் ஒரு மாதங்களுக்கு முன்னர் படையினரிடம் சரணடைந்திருந்த இவர்கள் இதுவரை காலமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் பலவற்றிற்கு பக்கபலமாக அல்லது துணையாக இருந்திருக்கின்றபோதிலும் அவர்களது மனமாற்றம், குடும்ப நிலைமைகள், உடல் ஆரோக்கியம், வயது என்பவற்றை கருத்தில் கொண்டு மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment