Wednesday, September 30, 2009

கோண்டாவில் இரட்டைக் கொலை : 5 சந்தேக நபர்கள் கைது

கடந்த ஆகஸ்ட் 28 ம் திகதி கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தமுடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆலடி வீதி, கோண்டாவிலில் கடந்த ஆகஸ்ட் 28 கொலைசெய்யப்பட்ட வீரசிங்கம் சுரேஸ்குமார் (37), சுவதீபா சுரேஸ்குமார் ஆகியோரிடம் சந்தேக நபர்கள் கொள்ளையடித்திருந்த தங்க நகைகள் பலவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி மெடிவக்க தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரைணைகளை கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக குமார மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment