ஆந்திரா மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் 4 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை கப்பல் அவர்களை சுற்றி
வளைத்தது. அந்த படகுகளில் இருந்த 21 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள் விசாகப்பட்டினம் துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment