இந்த திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் வவுனியா விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைத்தாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் முகமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலாவதாக மர கன்றை நாட்டியதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து, 1500 மரக்கன்றுகளை ஒரே தடவையில் நட்டு வைத்துள்ளனர்.
கிளிநொச்சி நகரை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த Earth Watchman திட்டத்தின் மூலம், வடக்கையும், தெற்கையும் இணைத்துக் கொண்டு நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, றிசாட் பதியுதீன்,வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், Earth Watchman திட்டத்தின் பணிப்பாளர் நளின் ஆட்டிக்கல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment