நாமல் குமார வழங்கிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான விசாரணைக்கு அமைவாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட குரல் மாதிரி தொடர்பான அறிக்கை, தயாரிக்கப்படுவதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கறியுள்ளது. இந்த அறிக்கை தயாரான பின்னர் அதனை நீதிமன்றத்திற்கு சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுக்காப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தொடர்பிலான கொலை சதித்திட்டம் சம்பந்தமாக நாமல் குமார வழங்கிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான விசாரணைக்கு அமைவாக, அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கடந்த 14ம் திகதி குரல் மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டது.
பெறப்பட்ட குரல் மாதிரி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் பொலிஸ் மா அதிபரை மீண்டும் அழைத்து குரல் மாதிரியை பெறும் அவசியம் இல்லை என்றும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment