வவுனியா, குஞ்சிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம், திடீரென 3 சந்தேக நபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும், வீட்டிலுள்ளவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தமையால் அவர்களிடம் இருந்து பலாத்காரமாக உணவினை எடுத்து உட்கொண்டு விட்டு அவ்வீட்டின் கிணற்றில் நீராடி சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனால், வவுனியா முழுவதிலும் பாதுகாப்பு படையினர் தற்போது, தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் வவுனியா முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தகவல், சமூகவிரோதிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாமென அப்பகுதி மக்கள் சிலர், சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment