Monday, January 14, 2019

தேர்தல் ஆணைக்குழு மஹிந்தவை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் - குமார வெல்கம

மஹிந்த ராஜபக்ஷவை தாம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக பரிந்துரைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அவர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டால் அதனை தேர்தல் ஆணைக்குழுவால் நிராகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய அரசியல் அமைப்பின் சமஷ்டி பண்புகள் முன்னிலைப்பெறுமாயின் அதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment