Wednesday, January 23, 2019

சந்தன பிரசாத்தின் விளக்கமறியல் காலம் நீடிப்பு.

11 இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் உள்ளிட்ட மூன்று பேரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment