Thursday, January 24, 2019

அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பங்கள், தாயகம் திரும்பவுள்ளனர் - சிவஞானசோதி.

அகதிகளாக தமிழகம் சென்ற சுமார் 39 குடும்பங்கள், அங்கிருந்து மீள தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தின் உதவியுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

34 ஆண்களும், 49 பெண்களுக்குமாக மொத்தமாக 83 பேர் தாயகம் திரும்பவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment