Monday, June 10, 2013

வானிலை குறித்து பொதுமக்களுக்கு விடுத்த அறிக்கையை உடனடியாக என்னிடம் சமர்பிக்க! - ஜனாதிபதி

சீரற்ற வானிலை குறித்து பொதுமக்களுக்கும், மீனவ சமூகத்திற்கும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளாதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, குறித்த அறிக்கையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் சமர்பிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 30க்கு மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment