Sunday, June 9, 2013

கடற்புலிகளின் கப்பல்தளத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

முல்லைத்தீவு முள்ளிவாய்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்த கடற்புலிகளின் கப்பல் கட்டுமிடத்தை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வளங்கியுள்ளனர்.

முள்ளி வாய்க்கால் பகுதியில் மிக நீண்ட காலமாக புலிகளின் பயன்பாட்டில் இருந்ததுடன் கடற்புலிகளின் படகுகள், உற்பத்தி செய்து வந்த இந்த கப்பல் கட்டுமிடம் யுத்தத்திற்குப் பின்னர் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில் தற்போது இந்த இடத்தை மக்கள் பார்வையிட படையினர் அனுமதி வளங்கியுள்ளனர்.

படகுகள், உற்பத்தி செய்யும் மாதிரிகள் மற்றும் படகுகளின் இயந்திரங்கள் என்பன காணப்படும் இந்த இடத்தை மக்கள் பார்வையிட அனுமதித்ததால் பெரும்திரளான மக்கள் இந்த கப்பல் கட்டும் இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்

No comments:

Post a Comment