இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் வாழைச்சேனை பிராந்திய பதில் உதவி பொலீஸ் அத்தியட்சகர் ஆனந்த ரத்ன சூரிய, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயவீர மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி யூ.எல். இனாமுல்லாஹ், ஓட்டமாவடி பிரதேசபை தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், கிழக்குமாகாண சுகாதார அமைச்;சின் இணைப்பாளர் முகைதீன், வர்த்தக சங்க தலைவர் நியாஸ் ஹாஜி ஏன்போர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பெண்களும், இரத்தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் ஓட்டமாவடி கோ.ப.மே. பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 64 சுதந்திர தின நிகழ்வு ஓட்டமாவடி கோ.ப.மே. பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர், ஓட்டமாவடி கோ.ப.மே. பிரதித் தவிசாளர் ஏ.எம். நௌபர்ஆகியோர் கலந்து கொண்டதுடன் நான்கு இன மத குருமார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் தேசியக்கொடியினை முன்னால் அமைச்சரும், தேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஏற்றி வைத்தார்.
செய்தி எம்.ரி.எம். பாரிஸ் ஓட்டமாவடி
No comments:
Post a Comment