Monday, January 2, 2012

தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.

புலிகளின் தலைமைச் செயலகம் எனும் பிரிவைச் சேர்ந்தவர் சுபன். இவர் மலேசியாவில் தங்கியிருந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். இவரின் செயற்பாட்டுக்கு மலேசியாவிலுள்ள சில தமிழ் ஆதரவாளர்களிடமிருந்து உதவி கிடைத்து வந்தது. புலி ஆதரவாளரான டாக்டர் இராமசாமி குழு வினரின் உதவி குறிப்பிடத்தக்கதாகும்.

டாக்டர் ராமசாமியின் செயலாளரான து.பவனேஸ்வரி என்ற பெண் தமிழ் மக்கள் மீது கொண்ட பற்றுகாரணமாக மேற்படி குழுவினருக்கு உதவி வந்தார். இதன் நிமிர்த்தம் இவருக்கு லண்டனிலுள்ள புலிகளின் தலைமைச் செயலக கிளைக்கும் தொடர்பு ஏற்பட்டது. தலைமைச் செயலத்தின் கொள்கைப் பரப்புரையாளரான மயூரன் என்பவர் குறிப்பிட்ட பெண்ணிடம் தவறான அணுகுமுறையை மேற்கொண்டார்.

தமிழ் மக்களின் உரிமைக்காக செயற்படுகின்றோம் எனக்கூறிக்கொள்வோ அச்செயலகத்திலிருந்து மேற்கொண்ட இழிசெயல்களை நாம் அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.

தமிழ் மக்கள் மீது பற்றுதல் கொண்டிருந்த மலேசிய யுவதி புலிகள் தமிழ் மக்களின் அவலத்தை விற்றுப்பிழைக்கும் சுயநலப்பேர்வழிகள் என்பதை அறியாது, உடம்பில் புலிச்சின்னத்தை பதித்துள்ளதை படத்தில் காண்கின்றீர்கள்.

புலிகளின் இழிசெயலினால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட யுவதி தற்போது புலிகளை பழிவாங்க ஆரம்பித்துள்ளார். அத்துடன் தான் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பதனை கவிதைகளாகவும் வடிக்க ஆரம்பித்துள்ளார். கவிதைகளில் சில கீழே தரப்பட்டுள்ளன.

இதன் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத சுபன் குழுவினர் மலேசியாவிலிருந்து தப்பியோடியுள்ளனர்.

மயூரனின் காம வெறியே இப்பின்னடைவுக்கு காரணம் என மலேசியாவில் ஆங்காங்கே ஒழிந்து நிற்கும் அவர்களின் செயற்பாட்டாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

பவனேஸ்வரியின் கவி தைகள் கீழே.

எம் தவற்றில் உன் பங்கு?

உத்தமியா என கேட்பவனே
நீ யோக்கியனா என சொல்வாயா?
ஊருக்கு ஒருத்தியை வைத்துக்கொண்டு
நீ அடித்திட்ட கூத்தினை சொல்லிடவா?

வேசி என எம்மை அழைத்தவனே
உன் வேசத்தை நானும் கலைத்திடவா?
புலி தோல் போர்த்திய நரியென்று
உண்மையை உலகிற்கு உணர்த்திடவா?

எம் சாதனை பற்றிக் கேட்பவனே
உன் சாதனையை நீ சொல்வாயா?
மங்கையர் மானத்தை விற்பவனே
உன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பாயா?

விடுதலைக்காக வீதிவரை
தமிழகம் சென்று உழைத்தவள் நான்
களத்தின் நின்றதாய் பொய் சொல்லி
பிச்சைக் கேட்டுத் தின்பவன் நீ!

காமப் பசிக்கு காதலை இரையாக்கி
காசுப் பணத்திற்கு இயக்கத்தைக் கைக்காட்டி
புறம்போக்கு நாய்களின் கால்களை நக்கி
பிணம் தின்னும் நீயும் புலியா?

துரோகி நாய் உன்னை
ஏற்பதற்கோர் குழு இருக்க
வீரப் பெண் எம்மை
புறக்கணிக்க யார் உண்டு?

தவறு நான் செய்தேன் உண்மை
தண்டனை கிடைத்திடல் நன்மை
வேசம் போடு விசமியே
உன் பங்கும் அதிலுண்டு மறவேல்!

எந்த நாயிடத்தும்
நீதி நான் கேட்கவில்லை
குறி உள்ள பெட்டையே
எம் பெண்மையில் உனக்கென்ன சந்தேகம்?

புலி என்று பூச்சாண்டி
எம்மிடமே காட்டிவிட்டாய்
இனி சிங்கத்தின் சீற்றத்தினை
பொறுத்திருந்து பார் நரியே!


நடந்தது நிஜம்தானா

நான் கண்ட கனவா?
காதல் கொண்ட நாயகன்
காதல் செய்வதையே
பொழுதுபோக்காய் கொண்டான்
அவன் காதல் செய்யவில்லை
வெறும் காமம் கொண்டான்!

காதல் என்று சொல்லி
கன்னியர் வாழ்வை அழித்தான்
இருசித்துப் பார்த்தப் பிறகு
தூக்கி எறிந்தான்!

வழி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் –அவன்
வருகைக்காக…

போனவன் வரவே இல்லை
கலவரம் கொண்டேன்
கண்ணீர் வடித்தேன் –அவனோ
சல்லாபக் கட்டிலில்
வேறொருத்தியுடன்!

தொட்ட இடம்
எரிகிறதே –தீயாய்
என்னைச் சுடுகிறதே!
கொண்ட காதல் எமனாய் மாறி
கழுத்தை இறுக்கி நேரிக்கிறதே
அவன் தந்த முத்தம் முள்ளாய் மாறி
நெஞ்சைக் குத்தி வதைக்கிறதே!

அன்பு…
அதற்காகத்தானே ஏங்கினேன்
காதலன் என்று பாராமல்
கணவனைப் போல் நடத்தினேன்

காலம் மாறிவிட்டதா?
கலிகாலம் வந்துவிட்டதா?
காதல் எனும் தெய்வத்திற்கு
கேடு வந்துவிட்டதா? –இல்லை
காதல் என்பது காமமாய்
மாறி போய் விட்டதா?

காமம் கொண்ட மிருகமே
மனதைக் கொன்ற அரக்கனே
உன் தாயும் ஒரு பெண்தான்
பெண்ணை மதிக்க மறந்தாயோ
கண்ணை இழந்து நின்றாயோ?

மணப்பாய் ஒரு பெண்ணை
அவள் செய்வாள் பதி துரோகம்
உணர்வாய் என் வலியை –பின்
வெறுப்பாய் உன் வாழ்வை!

பெறுவாய் ஒரு குழந்தை
அது பெண்ணாய் வந்து பிறக்கும்
உயிராய் நீ வளர்ப்பாய் –அவள்
வாழ்வை ஒருவன் அழிப்பான்!

காதல் துரோகியே –நீ
கண்ணிழந்து குருடாவாய்
இனிக்க வார்த்தை பேசிய நாவு
இழுத்துக்கொண்டுப் போகும்
தொட்ட உன் கரங்கள்
செயலிழந்து நிற்கும்!
எட்டிப் பார்ப்பதற்கு –உன்னை
ஈ கூட நெருங்காது!

நாசமாய் போகுமடா
உன் ஒழுங்கற்ற வாழ்வு
நீ செய்த வினைகள் எல்லாம்
எதிரில் வந்து நிற்கும்
துடிப்பாய், நீ அழுவாய்
தற்கொலை செய்ய முனைவாய்!

நிம்மதியை இழப்பாய்
பொருளெல்லாம் கரைப்பாய்
பிச்சை ஏற்றுத் திரிவாய்
தெரு நாயைப் போல்
மடிவாய்!

(வன்னிமைந்தன் என்ற நாதாரியின் கிறுக்கலுக்கு எமது பதில். உன்னைப் போல் புனைப்பெயரில் எழுத நான் கோழை அல்ல. தைரியம் இருப்பின் நேருக்கு நேர் மோது இனத் துரோகியே!)



No comments:

Post a Comment