Wednesday, September 28, 2011

பிரிட்டனில் 6 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள்


பிரிட்டனில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளதாக பிரிட்டிஷ் போலிசார் கூறினர். அந்த ஆறு பேரில் நால்வர் பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த ஆயுத்தமாகி வந்ததாகவும் மற்ற இருவர் அதுபற்றிய தகவல்களை வெளியிட மறுத்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

பர்மிங்ஹாமில் போலிசார் சென்ற வாரம் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது அந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் நேற்று லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத் தகவல்கள் கூறின. அந்த ஆறு பேரும் 25 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

No comments:

Post a Comment