Showing posts sorted by date for query VIII. Sort by relevance Show all posts
Showing posts sorted by date for query VIII. Sort by relevance Show all posts

Saturday, November 17, 2018

நோயுடன் வாழ்வதெப்படி? நீரழிவு தொடர்பான ஆழமான பார்வை. விளக்குகின்றார் டாக்டர் அஸ்லாம்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும், இலங்கையில் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம்.

அது மட்டுமன்றி இந்நோய் பௌதீக, சமூக, பொருளாதார ரீதியாக மற்றும் மனோ ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அண்மைக்காலத்தில் மேற்குலக நாடுகளின் பழக்க வழக்கங்களினால் கவரப்பட்டதனால், இலங்கையிலும், மற்றைய தெற்காசிய நாடுகளிலும் நீரழிவு நோய் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

அத்துடன் எதிர்பாராத விதமாக வயதில் குறைந்தவர்களுக்கும் நீரழிவு நோய் இப்போது ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே சமூகத்திலுள்ள அனைவரும் இந்நோய்க்கு எதிராக போராடுவதே இதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய வழிவகையாகவுள்ளது.

இந்த நோய் பற்றி விழிப்புணர்வு இன்றுள்ள சூழலில் மிக முக்கியமாகும். 2018.11.14ஆந் திகதி சர்வதேச நீரழிவு தினமாகும். இதனை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எம். அஸ்லம் அவர்களுடனான நேர்காணல் வாசகர்களின் பார்வைக்கு.

01. கேள்வி :- நீரழிவு நோய் என்றால் என்ன?


பதில் :- எமது உடல் அங்கமான கணையம் அல்லது சதையி (pancreas) இல் உள்ள ஒவ்வொரு Islet செல்களில் 1000 தொடக்கம் 2000 beta cells காணப்படுகின்றது. இந்த டிநவய செல்களே இன்சூலினை உற்பத்தி செய்கின்றது. நாங்கள் அன்றாடம் உண்ணுகின்ற உணவுக்கூறுகளில் காபோஹைரேட், புரதம் மற்றும் கொழுப்பு, கனிமங்கள் போன்றவை காணப்படுகின்றன. இதில் காபோஹைரேட் சமிபாட்டின் பின்னர் குளுக்கோசாக மாற்றப்படுகின்றது. இந்த குளுக்கோஸ் சாதாரணமாக 65 mg/dl தொடக்கம் 115 mg/dl குருதியில் காணப்படும். மேலும் சாப்பிட்டு 2மணித்தியாலயங்களின் பின் 140 mg/dl ஆகக் காணப்படும். சாதாரணமாக குருதியில் உள்ள குளுக்கோசின் அளவை கணையத்தினால் சுரக்கப்படும் இன்சுலின் என்கிற ஹோமோன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மற்றும் குருதியில் உள்ள குளுக்கோஸ் கலங்களினுள் செல்வதற்கு இவ் இன்சூலினே தேவைப்படுகின்றது. இன்சூலின் உற்பத்தியில் குறைபாடுகள் ஏற்படும் பொழுது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுகின்றது. அதிகாலையில் எதுவும் உண்பதுக்கு முதல் எடுக்கும் குருதியில் (8 - 10மணிநேரம் fasting ) குளுக்கோசின் அளவு 126 mg/dl அல்லது 6.9mmol/l இனை அதிகமாக காணப்படும் போது இதை நாங்கள் நீரழிவு நோய் என வரையறை செய்கின்றோம்.

02. கேள்வி :- நீரழிவு நோயின் வகைகள் பற்றி குறிப்பிடமுடியுமா?

பதில் :- முதலாவது வகை இன்சூலினில் பூரணமாக தங்கியுள்ள நீரழிவு (IDDM) எனப்படும் வகையாகும். இது ஒரு Autoimmune, Idiopathic - காரணம் கண்டுபிடிக்கப்படாத வகையைச் சார்ந்தது. சாதாரணமாக இது சிறுவர்களுக்கும் 35வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஏற்படும். இவர்களின் கணையத்தில் உள்ள beta cells கள் இன்சூலினை சுரப்பதில்லை. இவர்களுக்கு தினமும் இன்சூலின் ஊசி ஏற்றப்படுதல் வேண்டும். “பசுப்பாலை மிக சிறிய பராயத்தில் அருந்திக்கொள்வதால்” முதலாவது வகை நீரழிவை உண்டாக்கும் சந்தர்ப்பத்தினை அதிகரிக்கச் செய்யும். ஆகவே குழந்தை பிறந்து 4மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பதன் மூலம் சிறுவர்களை தாக்கும் வகை ஒன்று நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைக்கலாம்.

இரண்டாவது வகை (NIDDM) என அழைக்கப்படும். இது சாதாரணமாக 35வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். இவர்களின் கணையத்திலுள்ள Beta cells களில் இன்சூலின் சுரப்பது பாதிக்கப்படும். ஆனால் சிறிதளவு சுரக்கப்படும். அல்லது இன்சூலின் போதியளவு சுரக்கப்பட்ட போதும் அவ் இன்சூலின் பயன்படுத்த முடியாமல் காணப்படும். (predominantly insulin resistance ) இவர்களின் நீரழிவு நோயை உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகளுடன், சரியான உடற்பயிற்சி செய்வதினால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

மூன்றாவது Gestational diabetes வகையாகும். பிரசவ காலத்தின் போது தாய்மார்களுக்கு ஏற்படும் நீரழிவு நோயாகும். இது 75grm குளுக்கோசினை உண்ணக்கொடுத்து பின்னர் குருதியில் உள்ள குளுக்கோசின் அளவை சோதிப்பதன் மூலம் கண்டுபிடிக்கப்படும்.

03. கேள்வி :- நீரழிவு நோயின் அறிகுறிகள்

பதில் :-
I. அதிக தாகம், தொண்டை வரட்சி
II. சடுதியாக உடல் நிறை குறைதல்
III. அதிகளவு சிறுநீர் பல தடவைகள் கழித்தல்
IV. இரவில் பல தடவைகள் சிறுநீர் கழித்தல்
V. காயங்கள் ஏற்பட்டால் மாறுவதுக்கு அதிக நாட்கள் எடுத்தல்
VI. திடீரென கண்பார்வை மங்குதல்
VII. காரணமில்லாத உடல் களைப்பு
VIII. பாலுறுப்புகளில் அரிப்பு மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படின் நீரழிவு நோய் ஏற்பட்டிருப்பதுக்கு வாய்ப்புள்ளது.

04. கேள்வி :- எந்தவொரு அறிகுறியும் இல்லாது நீரழிவு நோய் ஏற்படுமா?

பதில் :- ஆம், மேற்குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகை நீரழிவு நோய் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய நோயாகும். இந்த நோய் “நிர்ணயம்” செய்யப்படும் போது கணையத்திலுள்ள 50வீதமான Beta cells இன் தொழிற்பாடு இழக்கப்பட்டுவிடும். இதன் பின்னரே அறிகுறிகள் வெளிப்படுத்தப்படலாம்.

எனவே, 30வயதை தாண்டிய ஒவ்வொருவரும் ஆறுமதங்களுக்கு ஒரு தடவை Daibatic screen பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்படுவதன் மூலம் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவை அளந்து தங்களது உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சியில் மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் வகை 2 நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தினை மாற்றியமைக்க முடியும்.

05. கேள்வி :- யாருக்கு நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகளவு உண்டு

பதில் :- உடற் பருமனானவர்கள், உடற்பயிற்சி, சுறுசுறுப்பற்ற வாழ்க்கை வாழ்பவர்கள், பெண்களாயின் பிரசவ காலத்தின் போது குருதியில் குளுக்கோசின் அளவு கூடிக்காணப்பட்டவர்கள். குடும்பத்தில் பரம்பரையாக (பெற்றோர், சகோதரர்கள்) வழியாக நீரழிவு நோய்காணப்படுதல், அதிகளவு மன அழுத்தம் உடையவர்கள். இன்றை காலகட்டத்தில் மனஅழுத்தம் எல்லாவகையினரையும் பாதித்துள்ளது. பிழையான பழக்க வழக்கங்கள், பிழையான நண்பர்கள் மூலமாக மன அழுத்தங்களுக்கு உட்படுபவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படுவதுக்கு வாய்ப்புள்ளது.

06. கேள்வி :- நீரழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகள்

பதில் :- முறையாக கட்டுப்பாட்டினுள் வைத்திராத நீரழிவு நோயினால் பின்வரும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதயமும் குருதிக்குளாய்களும், கண்கள், சிறுநீரகங்கள். மூளையும் நரம்புகளும், பாதங்கள் என்பனவாகும்.

07. கேள்வி :- இவ்வாறான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

பதில் :- மேற்குறிப்பிட்ட அங்கங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மருத்துவரை சந்தித்து, தேவையான பரிசோதனைகள் செய்து பரிந்துரைக்கப்படுகின்ற மருந்துகளை தவறாது உட்கொள்ளுதல் வேண்டும். கிரமமான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றில் பூரணமாக கவனம் செலுத்துதல் மிக முக்கியம்.

08. கேள்வி :- நீரழிவு நோய்க்கும் இருதய, கொலஸ்ரோல் நோய்க்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் இருக்கிறதா?

பதில் :- குருதியில் அதிக கொலஸ்ரோல் உள்ளோர் இருதய நோயினால் பாதிக்கும் சந்தர்ப்பம் அதிகம். மேலும் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுதலாக உள்ளபொழுது குருதிக்குழாய்களில் கொழுப்பு படிவதற்குரிய சந்தரப்பம் அதிகமாகவிருக்கும். இதனால் குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் கொழுப்பு படிவை குறைத்து இருதய நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

09. கேள்வி :- நீரழிவு நோயாளர்களுக்கான மருத்துவ போசணைத் (Medical Nutrition)திட்டம் எவ்வாறு அமையப்பெறுதல் வேண்டும்.

பதில் :- நீரழிவு நோயளர்களுக்கான உணவுகளை திட்டமிடும் போது கலோரிப் பெறுமானங்களுக்கு ஏற்றவகையிலும், glycemic index யையும் கருத்திற்கொண்டு உணவுகளை திட்டமிடுதல் வேண்டும். கலோரிப் பெறுமானங்கள் கூடிய உணவுகளை உட்கொள்ளும் போது உடற்பருமன் அதிகரிப்பு, குளுக்கோஸ் Intolerance கொழுப்புத் தன்மை அதிகரித்தல், இரத்தக்குழாய்களில் கொலஸ்ரோல் படிதல் மற்றும் இருதநோய் ஏற்படலாம்.

புரதம் அதிகளவு அடங்கிய மரக்கறி உணவுகள் மிகவும் பாதுகாப்பானது. சமப்படுத்தப்பட்ட saturated, polyunsaturated and monounsaturated, கொழுப்பு அமிலங்கள் சமையல் எண்ணெய்யில் காணப்படுவது நன்மை பயக்கக் கூடியதாகும்.

மேலும் மீன்களில் உள்ள எண்ணெய்கள் அதிகளவு பாவிப்பதன் மூலம் கொலஸ்ரோலின் அளவு கட்டுப்படுத்தப்படும். தற்பொழுது நீரழிவு நோயாளர்களுக்கு சிபரிசு செய்யப்பட்ட உணவானது அதிகளவு complex காபோஹைரட், குறைவான கொழுப்புத் தன்மை, போதுமான புரோட்டின் உள்ள உணவுகளாகும்.

நீரழிவு நோயாளர்களின் மருத்துவ போசணை திட்டத்தின் பிரதான அடைவாக சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் தேகாரோக்கியத்தை கட்டியெழுப்புதல். குருதியில் உள்ள குளுக்கோசின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். குருதியில் உள்ள கொழுப்பின் அளவினை பேணுதல். உடல் நிறைக்கு ஏற்றவகையில் கலோரிப் பெறுமானமுள்ள உணவுகளை வழங்குதல். இன்சூலின் எடுக்கக் கூடிய நோயாளிகள் தங்களது பிரதான உணவுகளையும், சிற்றூண்டிகளையும், நேரத்துக்கு எடுப்பதன் மூலம் குளுக்ககோசின் தளம்பல் நிலையை பேணமுடியும்.

10. கேள்வி :- இலங்கையில் நீரழிவு நோயாளர்கள் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இதற்குரிய காரணங்கள் என்ன

பதில் :- மேற்கத்திய உணவுப்பழக்கவழக்கங்களுக்குள் மாட்டிக்கொண்டமை, கிரமமான உடற்பயிற்சியின்மை, சமூக பொருளாதார காரணிகளின் பின்புலங்களால் அதிகளவு மன அழுத்தத்துக்குள் தள்ளப்படுதல் உணவிலுள்ள போசனை கலோரி, அதன் உள்ளடக்கம், கெழுப்புத் தன்மை பற்றிய தெளிவின்மை. பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டு உடனடி உணவுப் பழக்கத்துக்குள் தங்களை திணித்துக்கொண்டமை. மதுசாரம், சிகரட் பாவனை அதிகரித்தமை போன்றனவாகும்.

11. கேள்வி :- நீரழிவு நோயாளர்களுக்கு உங்களின் ஆலோசனை ?

பதில் :- வைத்தியர் பரிந்துரை செய்கிற மருந்துகளை தவறாது எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். இரத்ததில் உள்ள குளுக்கோசின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்தல் வேண்டும்.

சீனி சேர்க்கப்பட்ட எவ்வித பதார்த்தங்களையும் உண்ணாது தவிர்த்தல் இன்னும் சிறப்பு. தேனீர் அல்லது கோப்பி அருந்தும் போது அதற்கு சர்க்கரை சேர்ப்பதனை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். கொழுப்பு கூடிய உணவுகளை( பொரித்த ) குறைத்துக்கொள்ளுதல் வேணடும். பழவகைகளை அளவுடன் உட்கொள்ளுதல் வேண்டும். நார்சத்துப் பொருட்களை அளவுடன் உட்கொள்ளுதல் வேண்டும். உணவுகளை சரியான நேரத்துக்கு உட்கொள்ளுதல் அவசியம்.

அதிக வியர்வை, அதிக பசி, நடுக்கம் குருதியில் குளுக்கோஸ் குறைவாக உள்ளது என்பதுக்கான அறிகுறிகளாகும். உடற்திணிவுச் சுட்டெண்னை 18.5 – 22.9 Kg /m² க்கு பேண வேண்டும்.

இன்றைய காலத்தில் அதிகளவான நீரழிவு நோயளர்கள் தங்களை பூரணமாக குணப்படுத்த முடியும் என்று விளம்பரப்படுத்தப்படும் போலி மருத்துவ முகவர்களை நாடிச் செல்வது துர்பாக்கிய நிலையாகும்.
இன்றுவரை இந்த உலகிலுள்ள மருத்துவ முறைகளில் நீரழிவு வியாதியை பூரணமாக குணப்படுத்துவதுக்கு எந்த ஒரு மருத்துவ முறைக்கும், மருந்துகளுக்கும் சக்தி இல்லை என்பதனை மக்கள் உணர்ந்து கொண்டு, போலி வைத்தியர்களின் விளம்பரங்களை கண்டு ஏமாந்துவிடாமல் சரியான வைத்தியர்களிடமிருந்து சரியான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு இந்நோயினை பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் மிகச் சிறந்த நிவாரணமாகும்.


நேர்காணல் :-
Dr.KM. Aslam
B.Pu;ARM (UOC), BUMS (UOC)
MD (India), PGD.PUB. ADMIN (UOC)
Base Ayurvedic u;ospital - Addalaichenai

நேர்கண்டவர் :-
றிசாத் ஏ காதர்
நன்றி தினகரன் 14.11.2018

Read more...

Sunday, October 23, 2011

JR ரிடம் பார் லைசன் கேட்ட சம்பந்தன் கிலாரியிடம் என்ன கேட்கப்போறாரோ? S.S.கணேந்திரன்

அமெரிக்கா கனடா செல்லும் சம்பந்தன், சேனாதிராசா போண்றவர்கள் இன்னும் பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட வண்ணமே இருப்பார்கள். எமது பிரச்சனையும் தொடர்ந்துகொண்டே இருக்கும் பாராளுமண்ற ஆசனத்தினை மட்டுமே மையமாகக்கொண்டு செயற்படும் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியகட்சிகள் ஆரம்பகாலம் தொட்டே பிரதேச வேறுபாடு, சாதிய வேறுபாடுகளுக்கு மிகமுக்கியம் கொடுத்து செயற்பட்டார்கள் சொல்லிலடங்காத இழப்புக்களை சந்தித்ததன் பின்னரும் அதனை தொடர்ந்துகொண்டே இருக்கிண்றார்கள் என்பதே மிகவும் வேதனையான விடயம்.

சில தினகளில் அமெரிக்கா மற்றும் கனடா போண்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளையோ அல்லது வன்னி மாவட்ட பிரதிநிதிகளையோ முற்றாகத்தவிர்த்திருப்பதன் மூலம் அவர்களின் பிரதேசவாத வெறியை மீண்டும் மக்கள் முன் தாமாகவே அம்பலப்ப்டுத்தியுள்ளனர்.

இவர்களின் விஜத்தினுடன் சம்பந்தமான எந்த விடயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறும் பாராளுமண்ற உறுப்பினர்களுக்குகூட தெரியாத பரிதாப நிலையில் சக பாராளுமண்ற உறுப்பினர்கள் இருக்கிண்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சில புத்திஜீகள் அமெரிக்க விஜயத்திற்கு முன்னர் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ள விடுத்த வேண்டுகாளையும் சம்பந்தன் நிராகரித்துவிட்டார்.

இந்த விஜயத்தின் முழு விடயத்தினையும் சம்பந்தன் சேனாதிராசா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவர்மட்டுமே மிகவும் இரகசியமாக கையாளுகிறார்கள்.

இத்தகைய விடயமானது மிகவும் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமண்ற உறுப்பினர்களே அச்சம் தெரிவிக்கும் நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வன்முறையையும் சர்வாதிகாரப்போக்கையும் எடுத்துக்காட்டுகின்றது.

நான்கு சுவர்களுக்குள் அரச பாதுகாப்புடன் கொழும்பிலும் இந்தியாவிலும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த சம்பந்தன் மற்றும் சேனாதிராசா போண்றவர்களின் கீழ்த்தரமான அரசியல் வாழ்க்கையை அம்பலப்படுத்தவேண்டிய தேவையை சரியாக உணர்ந்து ஊடகங்கள் செயற்படாவிட்டால் ஏற்படப்போகும் அழிவிற்கு அவர்களும் ப ங்காளிகளாவர்.

தந்தை செல்வா அமிர்தலிங்கம் ஆகியோரின் அரசியல் வாரிசு என மார்தட்டிக் கதை சொல்லும் சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் சம்பளம் பெற்று வேலை செய்த ஒரே நபராவார். இவரது மரியாதையை காக்கவேண்டும் என்பதற்காக இவரது சம்பளக் கணக்கு விபரங்களில் எஸ்.ராஜா எனப் பெயரைப்போட்டு சேனாதியின் மானம் காத்தவரான ஆனந்தசங்கரியைக்கூட இந்த சேனாதியால் இலகுவாக மறக்கமுடியும் என்றால் வாக்களித்த மக்களையோ கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளையோ உதறி எறிவதென்பது இவருக்கு எவ்வளவு சுலபம் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

அமிர்தலிங்கம் இறந்தவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியும் பாராளுமண்ற உறுப்பினர் பதவியும் தனக்கேதரவேண்டும் என்று கட்சிக்குள் பிரச்சனையைக் கிழப்பி ஒருவாறு ஆனந்தசங்கரியின் விட்டுக்கொடுப்பால் பின் கதவால் முதற்தடவையாக பாராளுமண்றம் சென்ற சேனாதி மக்களுக்கு செய்த ஒரே நல்லவிடயம் தனது சகோதரியை தனது செயலாளர் எனக்கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச்செண்று குடியமர்த்தியது மட்டுமே.

நீலன் திருச்செல்வத்தின் இழப்பின் பின்னர் இரண்டாவது தடவையும் மீண்டும் பின்கதவால் பாராளுமண்றம் செண்றார்.

தேர்தலில் புலிகளே மக்களின் ஏகபிரதிநிதி தந்தையும் இல்லை தளபதி அமிரும் இல்லை தலைவர் சிவசிதம்பரமும் இல்லை பிரபாகரனே மக்களின் தலைவர் எனக் கூறி களம் இறங்கிய புலிகளால் உருவாக்கம் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த நிலையில் கச்சேரிக்குள் அளுது ஒப்பாரிவைத்து பின்னர் இளம்பருதியின் ஆசீர்வாதத்தோடு சிறிகாந்தாவை பின் தள்ளி கடைசிப்பாராளுமண்ற உறுப்பினரானார்.

இவரைப்பற்றி சொல்வதானால் பல மாதங்கள் தேவைப்படும். இத்தகைய போலி அரசியல் வாழ்க்கை நடாத்தும் சேனாதியின் தனிமனித வாழ்வும் மிகக்கேவலமானது என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்களுக்கு மிக நண்றாகத் தெரியும். இப்படியானவர்தான் இன்று மக்களின் பிரதிநிதியாக மக்களுக்கு நன்மை தேட அமெரிக்காவுக்கு செல்கிண்றார்.இதுதான் தமிழ் மக்களின் தலைவிதி.

அடுத்து சம்பத்தன் பக்கம் செல்வோம். எனக்குத் தெரிந்திராத ஒரு அதிர்ச்சித் தகவலை நன்பன் அரவிந்தனின் பின்னூடலினூடாக அறிந்தேன் . அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிடம் தனது தங்கு விடுதிக்கு மதுபான அனுமதி கேட்டாராம் சம்பந்தன். அதில் எனக்கு சந்தேகமே வரவில்லை காரணம் இது எல்லாம் சம்பந்தனுக்கு கைவந்த கலை. இனப்பிரச்சனை இனப்பிரச்சனை என கூறிக்கொண்டு சந்திரிக்காவிடம் குண்டு துளைக்காத வாகனத்தை வாங்கி சுகபோக வாழ்வு கண்ட சம்பந்தன் தான் செயலாளர் நாயகமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்திற்கு வருவதெண்றாலே விசேட ஜனாதிபதி கொமாண்டோ படையை அனுப்பி அலுவலகத்தை சல்லடை போட்டு சோதனை செய்த பின்னரே அலுவலகம் வருவது வழமை. அப்படியான இவர் தற்போதும் தானே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என தேர்தல் ஆனையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த பதவிகளை தக்கவைப்பது ஒன்றும் மக்கள் பிரச்சனைகள் தீர்ப்பதற்கோ உரிமை பெற்று தனி மாநிலம் அமைப்பதற்கோ அல்ல மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வங்கிக் கணக்கிளுள்ள பணத்தில் ஒரு பகுதியையும் கட்சிகுச் சொந்தமான யாழ்ப்பாண அலுவலகத்தின் பெறுமதியில் ஒரு தொகையும் தனக்கும் சேனாதிக்கும் பெற்றுக்கொள்ளும் முயற்சிதானம். இதற்கு இண ங்குகிறவர்களுக்கு செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவும் இருக்கிண்றாராம் மக்களின் பிரதிநிதி இரா.சம்பந்தனார்.

சந்திரிக்கா கொண்டுவந்த தீர்வுப்பொதியினை பாராளுமண்றத்தில் எதிர்க்கவேண்டும் எண்ற கோரிக்கை மத்திய செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவேளை தான் கட்சித் தீர்மானத்தை கவனத்தில் எடுக்கப்போவதில்லை எனது விருப்பப்படியே வாக்களிப்பேன் எனக் கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பந்தனை வாசல் வரை சென்று வெளிநடப்புச்செய்வதை தவிர்த்து கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாய் இருங்கள் எண்று தடுத்தவன் என்றவகையில் சம்பந்தனின் அரசியல் வாழ்வு எப்படியானது என்பதை நான் அறிவேன்.

பாராளுமண்றத்தில் தீர்வுப்பொதியினை தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்த்தால் தோல்விகாணும் நிலை இருந்ததினால் சந்திரிகாவின் சலுகைகளை அனுபவித்து வந்த சம்பந்தனால் அந்த நடவடிக்கையை தாங்கமுடியாமல் சந்திரிக்காவை தொடர்பு கொண்டு பாராளுமண்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் இந்த மாபெரும் தமிழ்த் தலைவன் சம்பந்தன்.

தான் அங்கம் வகித்த கட்சியின் கொள்கையையோ அல்லது தீர்மானங்களையோ கடைப்பிடிக்கத்தெரியாத சம்பந்தனுக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை அரவணைத்து செல்லக்கூடியவர் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைப்புக்கள் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையே காரணம்.

சம்பந்தனோ சேனாதியோ தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளும் அல்ல புனிதர்களும் அல்ல. தங்களுடைய குடும்பம்கள் சுகபோக வாழ்வு வாழவேண்டுமென்றால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் நிரந்தரமாக இருக்கவேண்டும் என கருதும் இவர்களை மக்கள் தொடர்ந்தும் தம் பிரதிநிதிகளாக தெரிவு செய்கின்றனர்.

மக்கள் இத்தவறினை தொடர்ந்தும் செய்யும்வரை இப்பச்சோந்திகள் தொடர்ந்தும் மக்களின் பெயரால் உலகம் சுற்றிக்கொண்டே இருப்பர். எமது பிரச்சனையும் தொடர்ந்துகொண்டே இருக்கும். VIII

Read more...

Saturday, September 24, 2011

த.தே.கூ டையே பெருகிவரும் குடும்ப அரசியல் கலாச்சாரம். கல்முனை கீரன்

யாழ்பாணத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வருகைதரும் ஒவ்வொரு தடவையும் தங்களுக்கு உணவு, உறையுள், பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்கும் சந்தர்ப்பவாத வள்ளல்களை தங்கள் கட்சி தூண்களாக கருதுகின்றனர்.

தலைமையை தக்க வைத்துக்கொள்வதற்காக புத்திஜீவிகளை ஒதுக்கி காவாலி கடப்புளிகளை உள்வாங்குகிறது.


ஈழப்போரின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுக்கும் செயற்பாடுகள் அனைத்தும் அதனை மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதாகவே உள்ளன. இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் நேசிக்கக்காரணம் அதன் கொள்கைகளோ அதில் அங்கம் வகிக்கும் தலைவர்களது தகுதிகளோ அல்ல என்பதும், ஏதோ ஒரு சக்தி கடிவாழத்தை கையில் எடுத்து அவர்களை கட்டுப்பாட்டுடன் வாழ வைத்ததே உண்மை என்பதும் புலனாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்குள் ஏற்கனவே புதைந்து கிடந்த எஜமான சிந்தனையும் ஆசாபாசம்களும் அடாவடித்தனங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. கிழக்கில் இது உச்ச நிலையிலுள்ளதென்றால் மிகையாகாது 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தமி;ழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி
பெற்ற மக்கள் பிரதிநிதி கொரவ. பியசேனவின் தெரிவில் தொடங்கி , நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளமை வரை அவர்களது தூரநோக்கற்ற செயற்பாடு தொடர்கிறது.

நூறு வீதம் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற இப்பிரதிநிதி தற்போது இப்பிரதிநிதி தற்போது தமிழ் மக்களின் பக்கம் திரும்பிப் பார்பதேயில்லையாம். ஏனெனில் தமிழ் மக்கள் தன்னை அழைத்து மாலை அணிவித்து கௌரவப்படுத்தியதில்லையாம் அதனால் தன்னை நாடி வந்து தனக்கு கௌரவமளிக்கும் முஸ்லிம் சகோதர இனத்துக்கே உதவப்போவதாக கூறுவதுடன் உதவியும் வருகிறாராம்.

அம்பாரை மாவட்ட தமிழ்பிரதேசங்களின் அபிவிருத்தி நிலை என்ன? இதற்கு ஒரு தீர்க்கமான முடிவுகளை தெரியாத தமிழ்தேசிய கூட்டமைப்பினர், ஒட்டுமொத்தமாக தமிழினத்துக்கு எவ்வாறு தலைமை தாங்க முடியும்? யாழ்பாணத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வருகைதரும் ஒவ்வொரு தடவையும் தங்களுக்கு உணவு, உறையுள், பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்கும் சந்தர்ப்பவாத வள்ளல்களை தங்கள் கட்சி தூண்களாக கருதும் இவர்கள், தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக புத்திஜீவிகள் மட்டத்திலுள்ளோரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்து விடுவதில்லை.

கட்சி கொள்கை பற்றிய சிந்தனை கட்சி தலைமைகளிடமே இல்லாத நிலையில் கல்வியறிவில் இடைநிலையிலுள்ள இத்தரகர்களிடம் இருக்குமென நினைப்பது தவறல்லவா? அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் தமது வியாபாரத்தையோ ஒப்பந்த தரத்தையோ உயர்த்துவதற்காக கட்சியையும் மக்களையும் விற்கலாம்தானே. ஆதலால் கட்சி தலைமைகள் தமது சட்டைப்பைகளையும், அரைகுறை வயிற்றையும் அவ்வப்போது நிரப்பக்கூடியவர்களையும் தங்களது பிழைப்புக்காக அதிகாரிகளின் கால்களைப்பிடித்து குறுக்கு வழியில் உளைப்போரென சமுகத்தால் இனம்காணப்பட்டோரையும் வேட்பாளராக்கி மக்களிடம் ஆணைகேட்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்.

தவறினால் மக்களின் ஆணை மாறாக அமைந்துவிடும் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றவனும் , குறிப்பறிய மாட்டாதவனுமாகிய நன்மரங்கள் மக்கள் சபைக்கு சென்று மக்களுக்காக எதுவும் செய்ய முடியமா? இந்த மரம்கள் பற்றிய அறிவு கட்சித் தலைமைகளுக்கு உண்டோ என்னவோ? ஆனால் மக்களுக்கு நிறையவேஉண்டு. ஏனெனில் இம்மரங்கள் மக்களிடையேதான் போலியாக வாழ்கின்றனர். மக்கள் இப்போது தாராளமாக சிந்திக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகளிடையே குடும்ப அரசியல் கலாசாரமும் பெருகத் தொடங்கிவிட்டது. பாராளுமன்றத்துக்கு தன்பெயரையும், மாகாண சபைக்கு தன் சகோதரன் பெயரையும் உள்ளூராட்சி சபைக்கு மக்களது பெபயரையும் முன்மொழிவதன் மூலம் வாக்களிக்கும் தமிழர்களை இழிச்சவாயர்களென நினைக்கின்றார்கள்.

இன்று புதிய கட்சிகளின் உதயத்துக்கும், சுயேட்சைகளின் தோற்றத்துக்கும் இதுவே காரணம் என்பதை உணரக்கூடிய அறிவு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடம் இல்லாமையால்தான் இந்நிலை தொடர்கிறது. ஆசாபாச போதை அவர்களது அறிவுக்கனிகளை மறைக்கிறது. இந்தப்போதைக்கும் பதிலடி கொடுக்க ஓர் இளந்தலைமுறை உதயமாகியுள்ளமை காலத்தின் தேவையே. ஆனால் அதன் விளைவு நிச்சயம் தமிழ்தேசியத்துக்கு சாவு மணியாகிவிடும் என்பதே கவலை தருவதேயாயுள்ளது.

வேட்பாளர்கள் எவரும் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது அவர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம்களின் மூலம் வெளியாகிறது. தீர்த்தக்கரையில் கடைவைத்திருக்கும் பொம்மை வியாபாரி தன் பொருளை விற்பதற்காக சொல்லும் விளம்பரம் போல், கூட்டமைப்பு வேட்பாளர் ஒவ்வொருவரும் கட்சியின் இயலுமையை கடந்து தனித்தனி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடத் தொடங்கி விட்டனர். மகுடிக்கு மூடும் பாம்பு போல் தம்மை நினைத்து விட்டார்களென மக்கள் நமட்டு சிரிப்புடன் அவற்றை வாசிப்பது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு கட்டியம்
கூறுகிறது.

ஆதலால் புத்திஜீவிகளால் இனம்காணப்பட்ட பின்வரும் விடயங்களில் அவர்கள் தீர்க்கமான முடிவெடுத்து செயற்படவேண்டும்

1. மக்களது உரிமைக்காகவும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய புத்திஜீவிகளை வேட்பாளர்களாக முன்மொழிய வேண்டும்

2. படிப்பு வாசனையற்ற வியாபாரிகளையும் அரைகுறை ஒப்பந்த காரர்களையும், உறவினர்களையும் கட்சியின் நிரந்தர உறுப்பினாராக மாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும்

3. நிறைவேற்ற முடியாத திட்டங்களை தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிடும் வேட்பாளர்களை கண்டித்து மக்கள் மத்தியில் உண்மையின்படி நடக்கக்கூடியவவர்களை முன்நிறுத்த வேண்டும்.

மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிப்பர் எனும் தவறான புரிதல் இன்னும் கூட்டமைப்பு தலைமைகளிடம் இருக்குமாயின் அவர்கள் யதார்த்தத்தை புரியவில்லை என்றே கொள்ளவேண்டும். VIII


Read more...

Friday, September 23, 2011

டிசம்பரில் போர் வெடித்தால் தாக்குதல் தளபதி லண்டனிலிருந்து வருவாரா?

அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்கும் என்று நம்புகின்றோம் எனவும் தவறினால் எம் மக்களை அணி திரட்டி அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளத் தயங்கோம் எனவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நம் இளைஞர் சமுதாயம் மிகவும் எம்முடன் அணி திரள வேண்டும் எனவும் கோருகின்றோம் என கல்முனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது பா.உ மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியபோது இந்தியாவும் , அமெரிக்காவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை செவியில் பிடித்து இழுத்து கொண்டு மேசை அருகில் விட்டு பிரச்சினையை பேசி முடி என்று கூறியுள்ளது.

ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் தமது அரசியல் சுகபோக வாழ்கை அதோ கதியாகிவிடும் என்ற நடுக்கத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பேச்சிலிருந்து உடைத்துக்கொண்டு ஓடலாம் என வழிபார்த்துக்கொண்டு நிற்கின்றது.

இதற்கு ஏதுவாக தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் , கருத்துக்களையும் வெளிவிட்டுவரும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால் அடுத்தகட்ட நகர்வை தொடர்வோம் என்று வேறு மிரட்டுகின்றது.

இவர்கள் கூறும் அடுத்தகட்ட நகர்வு என்ன? மீண்டுமொரு முள்ளிவாய்காலா? இவ்வாறுதான் 83க் முற்பட்ட காலப்பகுதிகளில் மக்களை சூடேற்றி போரை அவர்களுக்கு பரிசாக வழங்கிவிட்டு கடந்த தாங்கள் 3 தசாப்தங்களின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் சொகுசாக களித்து வந்தனர். ஆனால் அந்த யுகத்திற்கு முடிவு வந்துள்ள நிலையில் தற்போது அடுத்த கட்ட நகர்வு என்று பழையகுருடி கதவ திறடி மக்களை கிலிகொள்ள வைக்கின்றனர். அச்சமூட்டுகின்றனர்.

கடந்த 3 தசாப்பங்களில் 3 தலைமுறைக்கான இளைஞர் யுவதிகளை தமிழ் சமூகம் இழந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், மாவை, சுரேஸ், செல்வம் உட்பட அனேகரின் முழுக்குடும்பமும் இந்தியா மற்றும் கனடா ஐரோப்பிய நாடுகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே மாவை டிசம்பரின் பின்னர் நகர்த்தவிருக்கும் அடுத்த கட்ட நகர்விற்கு இளைஞர்கள் அணிதிரளவேண்டும் எனக் கேட்கின்றார். அவ்வாறாயின் லண்டனிலுள்ள மாவையின் மகன் இங்குள்ள இளைஞர்களுடன் வந்து இணைவாரா? தனது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இங்குள்ள இளைஞர் யுவதிகளின் மன நிலையை பாதிக்ககூடிய போராட்டம் என்கின்ற வார்த்தை மக்கள் முன் எழுந்தமானமாக கொட்டுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைவரும் தமது பிள்ளைகளை நாட்டுக்கு கூட்டிவரவேண்டும்.

இலங்கையிலே தமிழ் இளைஞர் யுவதிகள் செத்து மடிந்து கொண்டிருந்தபோது மாவையின் மகன் இந்தியாவிலே உல்லாசமாக இளைஞர்களுடன் காலம் களித்த ஒரு நிகழ்வை இங்கு காண்கின்றீர்கள். இவ்வாறான பல பதிவுகளை இலங்கைநெற் வாசகர்களுக்கு கொண்டுவரக் காத்திருக்கின்றது. VIII



Read more...

Tuesday, September 20, 2011

இறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.

தமிழ் மக்களின் பெயரால் காலாகாலமாக பினாமி அமைப்புக்களாவும் பினாமிகளாகவும் புலிகளுடன் இணைந்து வயிறு வழர்த்துவந்தோர் நிலைமையும் அவர்களது வருவாயும் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் தமது வருவாய்க்கு அடுத்த மூலதனமாக இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை என்ற மாயையை கையில் எடுத்துள்ளனர்.

இந்த வரிசையிலே நான் ஒரு பாதிரி சொல்கின்றேன் நீங்கள் நம்புங்கள் என புலிகளின் வன்செயலை மக்களிடம் நியாயப்படுத்தி வந்த இமானுவேல் நிற்கின்றார். உலகத் தமிழர் பேரவை எனும் பெயரில் அமைப்பொன்றினை ஆரம்பித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மக்களை கூட்டி உலகத் தமிழர் பேரவை தொடர்பாக தெரிவிக்கையில் தனது கட்சி சர்வதேசமயமான சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகளை ஏற்றிருந்தாலும் அவ்வமைப்பு சர்வதேசமயப்படுதப்படாமல், சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளுக்கு இடமளிக்காமல் செயற்பட்ட சர்வாதிகார தனிமனித ஆழுகைக்குட்பட்ட குழு என்பதனை மறைமுகமாக தெரிவித்துள்ளதுடன் பாதிரியின் வெட்டுப்பேச்சு இனிமேல் எடுபடப்போதில்லை என்பதை உணர்ந்து தான் புலிகள் போன்று ஆயுத வன்முறையில் ஈடுபடப்போவதில்லை ஜனநாயக வழியில் போராடப்போகின்றேன் என்று வேறு பல்டி அடித்துள்ளார்.

அத்துடன் உலகத் தமிழர் பேரவையின் உடனடியான இலக்குகள்

1. முகாம்களில் வாடும் எமது உறவுகள் தாயக பூமியில் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவது.

2. இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உழைப்பது.

3. ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பன தன் பேரவையின் முதன்மை இலக்குகளாக வரையறுக்கப்பட்டன

என தெரிவித்துள்ளதுடன் கனடாவில் வங்கி கணக்கொன்றையும் ஆரம்பித்து மேற்படி பணிகளுக்காக மக்ளிடம் மாதந்த நிதியுதவியையும் வேண்டி நிற்கின்றார்.

மேற்படி 3 கொள்கைளுமே நீண்டகாலம் நிலைக்ககூடிய அமைப்பொன்றுக்கான கொள்கையில்லை. முகாம்களில் வாழும் மக்களில் 95 விழுக்காடு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஏனையோரும் விரைவில் குடியேற்றப்படுவர் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், இலங்கையிலுள்ள மீள் குடியேற்ற அமைச்சையே கலைக்க முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் இவ்வமைப்பு எந்த மக்களுக்கு உதவி புரியப் போகின்றது.

அடுத்து போர்க்குற்ற விசாரணை என்பது முற்றிலுமான மாயை, இலங்கையிலே உக்கிர யுத்தம் இடம்பெறுகின்றது, அங்கே மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என மேற்குலக நாடுகள் எங்கும் மக்கள் ஓலமிட்டபோதும் திரும்பிப்பார்காக மேற்குலக அரசுகள் இப்போது போர்குற்ற விசாரணை என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கே ஒழிய நிஜத்தில் எதுவும் நடந்தேறப்போவதில்லை.

மேலும் ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற கொள்கை முற்றிலும் பதவியாசையையும் புலிகளின் ஏகபிரதிநிதித்துவ வெறியையும் பிரதிபலிக்கின்றது.

முற்றிலும் ஐரோப்பாவில் வாழும் மேற்படி அமைப்பை சேர்ந்தோருக்கு இலங்கையிலுள்ள தமிழ் மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. இந்நிலையில் இவர்களால் அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவி புரிய முடியும். ஆக தொடர்ந்தும் அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பெயரால் பணம் வசூலிப்பதே இவர்கள் நோக்கமாகும்.

இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 290000 மக்கள் தங்கியிருந்தபோது அம்மக்களுக்கு எத்தனையோ உதவிகள் தேவைப்பட்டது. ஆனால் பாதிரி போன்றவர்களால் அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அத்துடன்; தற்போது முகாம்களில் சுமார் 7000 மக்களே எஞ்சியுள்ளனர். அவர்களும் மிக விரைவில் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலே மக்கள் அகதிகளாக அவஸ்தைப்பட்டபோது அவர்களை மேலும் அவஸ்தைகளுக்குள்ளாக்கும் நோக்கில் இக்குழுக்கள் செயற்பட்டது. மக்களின் பெயரால் புலிகள் வசூலித்த பணத்தில் ஏகப்பட்ட பாகத்தை சுருட்டியுள்ள இவர்களிடம் இப்பணத்தை அங்கு அகதிகளாக அவஸ்தைப்படும் மக்களுக்கு செலவிடுங்கள் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது, இலங்கையில் எமக்கு செயற்பட முடியாது, இலங்கை அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தடை செய்துள்ளது என தெரிவித்து மக்களை நடுத்தெருவில் விட்டிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் மக்களின் நலனை கவனிக்கவென மீண்டும் பண வசூலிப்பிலிறங்கியுள்ளனர்.

அவ்வாறாயின் இலங்கையில் அன்றிருந்த நிலைமை இல்லை என்பதையும், தமக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இலங்கையில் செயற்பட முடியும் என்பதை மக்களுக்கு இவர்களால் தெரிவிக்க முடியுமா? அவ்வாறு இல்லையாயின் எதற்காக பணம் இலங்கை சென்று மக்களின் தேவைகளை கண்டறிய முடியாதவர்களுக்கு தொடர்ந்தும் எதற்கு பணம்?

வன்னியுத்தம் இடம்பெறுகையில் மக்களை புலிகள் பலவந்தமாக தமது பிரதேசங்களுள் நெருக்கியபோது, இதில் நேரடியாக சர்வதேச நாடுகள் தலையிட முனைந்தபோது, பாதிரிபோன்றோர் மக்கள் புலிகளுடன் சுயவிருப்பின்பேரிலேயே செல்கின்றனர் என சர்வதேசத்தை ஏமாற்றினர். இவர்கள் நினைத்திருந்தால் புலிகள் மக்களை விடுவிக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்க முடியும். தமது சுயலாபங்களுக்காக செய்யவில்லை.

இவர்கள் புலிகள் மக்களை பலவந்தமாக தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள் மக்களை மனித கேடயங்கiளாக பயன்படுத்துகின்றார்கள் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தால் வன்னி மக்கள் இத்தனை துயரங்களை சுமக்க நேரிட்டிருக்காது.

மேலும் வன்னியிலே ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இவ்வீடுகள் எவ்வாறு சேதமடைந்தது. இராணுவம் முன்னேறுகயையில் மக்களை பின்நோக்கி தள்ளிய புலிகள் அம்மக்களின் வீடுகளை தமது அரண்களாக பயன்படுத்தி அவ்விடுகள் மற்றும் அவற்றுக்கு அருகே தற்காலிக பங்கர்கள் மற்றும் உரு மறைப்புக்களை செய்து முன்னேறிவந்த படையினருடன் சண்டையிட்டனர் அச்சண்டையின்போதே வீடுகள் யாவும் சேதமடைந்தன.

ஆனால் இன்று அவ்வீடுகளை அரசாங்கம் திருத்திக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலும் இலங்கையிலே சண்டை ஒன்று இடம்பெறுவதற்கு வெளிநாடுகளிலிருந்து தூபமிட்டோரே இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

அவ்வாறாயின் இவ்வீடுகளை இவ்யுத்தத்திற்கு தூபமிட்ட இமானுவேல் போன்றோர் திருத்திக்கொடுக்க முன்வரவேண்டும் அல்லவா.. வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதும் , பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவெனவும் இவர்கள் வசூலித்த பணத்தில் இவ்வீடுகளை திருத்திக்கொடுப்பதற்கு இவர்கள் முன்வருவார்களா? VIII

Read more...

கொஞ்சம் 'கூழ் ' பண்ணியபடி ….. எஸ். நஸீறுதீன்

தன்னைக் காப்பாற்றச் சொல்லி கூக்குரலிட்ட இளம்பெண்ணின் ஒலிகேட்டு ஓடிவந்த நிறைமாதக்கர்பிணிப் பெண்ணைக் கீழேதள்ளி வாளினால் கழுத்தைத் துண்டாடியபின், அவளின் வயிறைக்கீறி , உள்ளிருக்கும் குழந்தையை வெளியே இழுத்தெடுத்து (தொப்புள்கொடி பிய்ந்துவர) சுவரிலே மோதிக்கொலை செய்யும் கூட்டத்தை இன்னமும், என்னமாகத்தான்,'நெறி தவறாது,நீதிக்காகப் போராடிய படைஎனப் பேசுகிற சீமான், தாமரை, சேரன், அமீர், லீனா,,,,,, என்போரும் படைப்பாளிகள்தானா?
இதைப் படிப்பது ஓரளவு நல்லது என்று நினைக்கிறேன். கையிலுள்ளதாலும், வாயாலும் இதுவரை நெருப்பையும், செந்தணளையும் வீசி மூன்று சமூகமும் இதுவரை பெற்றதுபோதுமானால், எல்லோரும் இனியாவது படித்த, படிக்கிற பாடத்திற்கு ஒப்ப மிதமாயிருப்பதுதான் நல்லது. இது உபதேசத்தின் பொருட்டு வருவதல்ல: இன்னமும் இதையே சகித்துக் கொண்டிருப்பதுதானா எனும் ஆயாசத்தில் வருகிற பந்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நண்பர் சோலைக்கிளி அதீக், (மூன்று முறை அடுத்தடுத்து கவிதைக்காக சாகித்தியப் பரிசை வென்றெடுத்தவர். என்னிடம (அடிக்கடி, (நானும் கூடப் பட்டதாரியாயிருந்தும் ), 'இந்தப் பட்டம் சுமந்ததுகள்ள அலட்டல் தாங்க முடியாததாயிருக்கப்பா' எனச் சலித்துக் கொள்வதுண்டு. அவரின் பார்வையில் எனக்கும் ஒப்புவமை இருந்ததால் தர்க்கம் வந்து வீழ்ந்ததில்லை. நமது எண்ணத்துக்கும் நிகழ்கிற நடைமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளமையால், அதில் சந்தேகங்களை இன்னமும் நான் கொண்டவனாகவே இருக்கிறேன்.

பாடசாலையின் பாடப்பரப்பு என்பதில் இந்த ' இலக்கியம் என்பது உட்படுமா?’ என்பதுவே அது. ஒருத்தரின் இலக்கியத்தரத்தை அளவிட, முன்னரேயுள்ள வேறு யாரினுடையதோ எண்ணப்பாட்டில், அல்லது வழிமுறையில் வந்த புள்ளி வழங்கும் அளவீட்டில், முன்னுள்ள ஆளுமைப் பண்புகளைத்தேடி 'விடைத்தாள்' வைத்துக்கொண்டு புள்ளியிடல் முறைமை இதற்கும் சரியான ஒன்றுதானா? இன்னமும் எனக்குக் குழப்பமாகவே இருக்கிறது. .

புத்தாக்கம் ஒன்று பழையதையும் தரித்தபடி புதிதானதென்று பேர்வாங்குவதெப்படி ?.,, ஆயினும படிப்பாளி, படைப்பாளி எனும் இரு சாராரும் வேறு வேறானவர்கள் என்பதை விளங்கப் பெரியஞானம் ஒன்றும் வேண்டியிருக்காது என்றே நம்புகிறேன்.

ஏற்கெனவே உள்ளதைப் பகுதி பகுதியாகப் பிரித்தெடுத்து, கோர்த்தெடுத்துப் பிரதிமை அல்லது நெட்டுருவில் அல்லது அப்பியாசத்தில் ஒவ்வொரு வருடமும் முந்திவருகிற முப்பதுகளுக்குப் பட்டம் கொடுக்கலாம்: படித்ததுக்குத் தக்கன வேலை கொடுக்கலாம் பதவி நிலையைச் சுட்டி . கௌரவத்தையும் கேட்டால் கொடுத்துப்பார்க்கலாம். ஏனெனில் பலாபலன்களை முன்னிட்டே(தொழில்,பணம்,அதிகாரம்,,,,) நாம் பார்க்கிற படிப்பாளிகள் இருக்கிறார்கள்.

பழக்க தோஷத்தில், வகுப்பிலுள்ள பிரம்பை எடுத்துக் கொண்டு, 'அடேய், யாரடாஅவன்? தோமஸ்அல்வாஎடிசனை, நியூட்டனை, ஐன்ஸ் தைனை விடப் பெரிய படைப்பாளி யாருளர்?' எனக் கேட்டுக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஒருபோதும். நீங்கள் சொல்கிறவர்கள் படிப்பாளிகளாக இருந்ததேயில்லை. அவர்களும் கூடப் படைப்பாளிகளே : இந்தப் பொழுது போக்குக்கும் அவர்கள் நேரமொதுககிப் பார்த்திருந்தால், தங்களையும் படிப்பாளிகள் எனச் சொல்வதைக் கேட்டு சினந்தெழக் கூடும். தங்கள் படைப்புக்காகவே தங்கள் அக, புற வாழ்வின் பெரும்பகுதிகளைச் சந்தோசமாகவே ஒப்புக்கொடுத்தவர்கள் அவர்கள் . இதை இன்னும் விரித்துச் சொன்னால், பெரும்பகுதி மக்களின் பார்வைக்குத் தெரிகிற சிலபைத்தியங்கள் எல்லோரையும்போல பணம், பதவி களின் பின்னே ஓடிக்கொண்டிருக்காமல், இசை, ஓவியம், எழுத்து, புத்தாக்கம் (அதுவே தவமாம் என்றும சொல்கிறார்கள்) என்பவற்றின் பின்னே, ‘வாழத்தெரியாததுகள்’ எனும் பட்டமும் வாங்கி வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் சொல்லலாமா? தங்களின் அகத்தேயான தேடலுக்காகவே வார்த்தையையும் வாழ்வையும் பணயம் பண்ணியவர்கள் அவர்கள் .

அதேநேரம் அவர்கள் தந்த எதுவும் இந்த உலகின் கண் இல்லாமலிருந்த ஒன்றல்ல. அது ஏற்கெனவே இங்கிருந்த ஒன்றுதான் மற்றைய யாரும் காணாதிருந்த ஒரு பார்வையை, கண்டுபிடிப்பை கண்டடைந்தவர் மறறவருக்காகப் பிரசவித்துத் தருகிறார். இதைக் காணாது ஓடிக் கொண்டிருந்தவரை, சற்று நிதானப்பட உட்காரவைத்து படையலிடடுப் பரப்பி விடுகிறார். இந்தத் தோற்றம் புதிதாயினும், ,அது படைப்பாக வெளியே பிரசுரமானதுமே அதன் மீதான அவனுக்குரிய உரிமையை, இன்பத்தை இழந்து போவதுடன், அந்த ஆக்கத்தைப் பொறுத்தவரை படைப்பாளி இறந்து போய்விடுவது -அந்தப் படைப்பைப் பொறுத்தவரை தவிர்க்க இயலாதது. படிப்பாளிக்கு இதுவெல்லாம் சரிவராத நியதிகள்.

படைப்பாளி பாரதி மாணவப் பருவத்தில் எழுதிய கவிதையை படிப்பாளி தமிழ் ஆசிரியர் தேர்ந்தேடுக்காமையும், பின்வந்த படைப்பாளிகள் 'அடடே,இதையா தேர்ந்தெடுக்கவில்லை' என அங்கலாய்ப்பதுவும் நாம்காண்கிற வரலாறு .'காணும் இடத்திலெல்லாம் காக்கைச் சிறகின் கருமை நிறத்தைக் காண்கிற’ அனுபவத்தைப் படிப்பாளி நம் பாடசாலைக் காலத்தில் விளங்கவைத்த, உண்மைக்கு அப்பாலான அகோரத்தனம் இன்னமும் காதில் நாகாராசமாய் ஒலிக்கிறது. உண்மையான . படைப்பாளிகள் இரசவாதிகள். வார்த்தைகள் இறந்து துருப்பிடித்தவைகள்தான். ஆனால்,அவர்களாலேயே, அழியாத் தங்கங்களாக அவ்வார்த்தைகளை மானிடருக்காக மாற்றித் தர முடிந்திருக்கிறது.

படைப்பாளிகளின் இடத்தைப் படிப்பாளிகள் கைப்பற்றியதனாலேயே, ‘ஈயடிக்கும் பிரதிமைகளின்' வரவு இத்தனை அதிகரித்துக் காணப்படுகிறது .கடந்த ஐந்து தசாப்தங்களாக கொழும்பு வளாகத்தின் பௌதிக பாடத்தின் பாடத்திட்டமும், வினாத்தாள் கொத்தும் மாறாதுள்ளதுபோலவே, மாற்றி மாற்றி அச்சடிக்கும் பிரதிகளையே நாம் அதிகம் காண இதுவே காரணம்.

படைப்பது வேறு, படி செய்வதுவேறு. படிப்பாளியைவிட படைப்பாளி பண்புகளிலும் மேம்பட்டவனாகவே இருக்க வேண்டும். மானிடத்தின் மீதான கரிசனையில், அவனின் பார்வைக் கோளாறைச் சரிசெய்ய, அவனின் வாழ்வைக் கொண்டாடுதலை, ஆன்மாவை கண்டடைதலை,,சக உயிரின்பாடுகளின் மீதான அனுதாபத்தை, அறம்சார் கேள்விகளினூடாக வாழும் ஆசையைச் சொல்பவனிடம் சகமனிதரிடம் அக்கறை மட்டுமே குடிகொண்டிருக்க முடியும்.

அதனால்தான்,எந்தப் பிரபல்யமான படைப்பாளியும் தன மனதுக்குத் துரோகம் செய்யாதவனாகவும், அவனின் படைப்புகள் மனித அன்பினூடு தோய்ந்து வருவதாகவும் அமைந்து விடுகிறது. கலைக்கென்றே தன்வாழ்வைக் கொடுத்து அதிலேயே இன்பம் காண்பதாகக் கூறிக் கொண்டாடுபவன் நேர்மையற்றவனாக இருத்தல் என்பது தன்விபச்சாரத்தை ஒத்தது :அவனது வாக்கும் வாழ்வும் வேறு வேறானது படிப்பாளி நேர்மையுள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை. படைப்பாளி, படிப்பாளி இருவரையும் அப்படி எதிர்பார்க்கிறோமானால் மேற்கினரைப் பின்பற்றியதால் வந்த விளைவே இதுவும்கூட.

அதாவது, நம் தொன்றுதொட்டு இருந்துவந்த படிப்பு முறைமை யிலிருந்து நம் மன, அறிவு ரீதியிலான படிமத்தை நாம் இன்னமும் கழற்றிக்கொள்ளவில்லை என்றாகிறது . நம் பழையகாலக் கல்விமுறை குருகுலம் சார்ந்தது. கற்க வருகிறசிஷ்யன் ஊழியம் செய்வதுடன், தன்னை அடிமையாகவும்பிரகடனம் செய்பவனாயிருப்பான். ஒழுக்கம், மதம், பண்டைய மதங்கள், இலக்கியம்(இதிகாசங்கள்) போர்க்கலை... கற்றுத் தேர்ந்தவனாகித் தான் புறத்தேயும், அகத்தேயும் விடுதலை அடைந்து கொள்வதே பழங்காலக் கற்றலாயிருந்தது.

ஆதலால்தான் பாடசாலையில் பாடம் படிப்பிக்கிற வியாபார ஆசிரியரைக்கூட ஓரளவு மரியாதையாக நோக்கும் காலம் நம்புறத்தே இன்னமும் மீந்து காணப்படுகிறது. அண்மையில் இலண்டனில் ஏற்பட்ட நகரக் கடைஎரிப்பின்போது பிரதமர் கமருன், பாடசாலையில் ஒழுக்கத்தை வளப்படுத்த ஆசிரியர்களுக்கு பிரம்பு பாவிக்கும் உரிமையை வழங்கினால் நல்லது என அங்கலாய்த்தது, இன்றைய கல்விப் பாடப் பரப்பையும், போட்டிப் பரீட்சையையும் வைத்துக்கொண்டே கனவுகானத்தான் கமருன் இலாயக்க்கானவர் என்பதைத்தான் பறைசாற்றுகிறது.

நம்பக்கம் ஒருத்தர் ஏதாவது தகாதது செய்யின் அருகிலிருப்பவர் உடனடியாகவே கேட்பார் 'தம்பி எந்தப் பள்ளியில படிச்சது நீங்க?” என்று. அது ஒருகாலம். இப்போது உருப்போடப்பண்ணி, ஞாபகத்திலிருக்க (அதுவும் பரீட்சைவரை)வசம்பு தின்கிற காலமிது. இன்றைக்குப் படிப்பு என்பது பணம் பண்ணவும், காலத்தை இலகுபடுத்தவுமான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. இந்தச் சிறு உதாரணத்தைப் பாருங்கள்: இந்திய மாநில நவாபுடன், வெளியே நாலுபேர்பார்க்கும்படியாக, உலாவரும்போது, பேச்சுத்துணைக்குக் கூட வந்தால் போதும், சம்பளம் வீடு தேடிவரும் என்றால், நமது படிப்பாளிகளால், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு கியுவில் நிற்க முடியும். பாரதியால், அதைச் செய்ய முடியவில்லை.

இந்திய சினிமாவில் கற்புப்படங்களைத் தருகிற ஷிரீதரைப போலவே, இலட்சிய கதாநாயகர்களைப் படைப்பாளியாகப்பிரசவித்துத் தந்த ஒருத்தர், நா.பார்த்தசாரதி. இவரின் மரணத்தின்போது, 'தன் வீட்டுவளவுக்கு இடைஞ்சல் என்று சொல்லி, அடுத்த வீடுக்காரனின் மரத்துக்கு சுடுதண்ணீர் ஊற்றியவர் இவர்' என்று சர்ச்சைப் பட்டார்கள். இந்தச் சுடுநீரைவிட, சீறிப்பாய்ந்து வரும் சுடுகிற இரத்தமயமாகிய இந்த சம்பவத்தைப் பாருங்கள். தன்னைக் காப்பாற்றச் சொல்லி கூக்குரலிட்ட இளம்பெண்ணின் ஒலிகேட்டு ஓடிவந்த நிறைமாதக்கர்பிணிப் பெண்ணைக் கீழேதள்ளி வாளினால் கழுத்தைத் துண்டாடியபின், அவளின் வயிறைக்கீறி , உள்ளிருக்கும் குழந்தையை வெளியே இழுத்தெடுத்து (தொப்புள்கொடி பிய்ந்துவர) சுவரிலே மோதிக்கொலை செய்யும் கூட்டத்தை இன்னமும், என்னமாகத்தான்,'நெறி தவறாது,நீதிக்காகப் போராடிய படைஎனப் பேசுகிற சீமான், தாமரை, சேரன், அமீர், லீனா,,,,,, என்போரும் படைப்பாளிகள்தானா? சிங்களக் கிராமத்தில் பிறந்து இராணுவத்தில் சேர்ந்தவன் (மொழியால் சிங்களம்) எவ்வித முன் விரோதமுமற்ற அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழித்த நிகழ்வை வீர வரலாறாகப் பேசிப்பேர்வாங்கிய சிங்கள இலக்கியவாதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் பிரபாகரன், யசோதா படங்கள் கூடப் போரினால் ஏற்பட்டமானிடச்சிதைவுகளைத்தானே பேசிக்கொண்டிருக்கின்றன. இதில் கூட நாம் கீழ்நிலைதானா?

வட கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் உயிரிழப்பு என்பதற்கும் அப்பால் மிகமுக்கியமான வாழ்வின் பொழுதுகளை அடகுவைத்தே வாழ்ந்த வாழ்வின் கொடூரம் மிக வன்மையான ஒன்று. அண்மைய காலங்களில் எழுதப்பட்டுள்ள, போரின் வடுக்களையும், அரசியலினூடு ஏழைச் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வுகள் சூறையாடப்பட்டதையும் முதலாளித்துவ அகோர முகத்தையும் சிங்கள மொழியில் பேசிய அளவு தமிழ் எழுத்துக்கள் பிரசவிக்கவேயில்லை. இலங்கையில் அதற்கு ஒப்பிய அல்லது மேலான படைப்பாகத் தமிழ்மொழியில் தர ஆளில்லாமலுமில்லை. நாம் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை; எழுதவே அஞ்சிக் கிடந்த காலம் அது.

கடந்த மூன்று தசாப்தங்களிலும் சொல்லாது மூடிக்கிடந்த மனவாசல்களைத் திறக்கிறபோதே, புத்திக்கும் அப்பாலாகிய வாழ்வின் கண்டுபிடுப்புக்களை நாம் காணமுடியும். அன்புமயப்பட்ட மக்களாக நம் மக்களைக்கொண்டு செல்ல முடியும் . தன்புலமை, வித்துவத்தனம் அத்தனையையுமே பூமியின்கீழ், ஆழமாய்ப் புதைத்துவிட்டு, தன் இருப்பு ஒன்றிற்காகவே கிழக்கின் நாற்பதாயிரம் விதவைகளைப் பாட மறந்து, கருணா குழுவினரைக் கொன்றபோது எட்டப்பர் ஒழிப்பெனக்கோகர்ணர் படையலிட்டது படைப்பல்ல. இலக்கியம் தருபவன் இலக்கியவாதிக்குரிய ‘அடுத்தவர் நம்ப வாழ்வதுவும்’ அவசியமானதே. இதை வலிந்துதான் அவர்களில் வரவழைக்க வேண்டுவதாயிருக்க முடியாது. அவனின் இயல்பே அதுவாக மாறிவிட்டிருக்கும் என்றே நாம் எதிர்பார்ப்போம். மனம் கோணப் பேசுவதையே பக்கம்பக்கமாகப் பேசுகிறவன் அநியாயக்கொலையைக் கிலாகிக்கிறா னென்றால், அந்தப் புதுவை/மை,காசி எதுவுமே நம் மக்களை இனியும் சென்றடைய வேண்டாம்..

யாழ் பல்கலைக்கழகம் பற்றி போராட்டகாலத்தில் 'படிச்ச பொடியனுகள்' எனும் படிப்பாளிகள்பார்வை எப்படி ஆரம்பச் சுழியாக இருந்ததுவோ அதுவாகவே துணை வேந்தர் நியமனமும்தெற்காசிய அமெரிக்க நலன் சார் பிளேக்கின் வருகையையும் இலங்கையின் அடுத்த கரும் புள்ளியாக விழ ஆரம்பிக்கிற ஒன்றாகக் காண வேண்டியுள்ளது.

படிப்பாளியாகிய கூழின் பிரச்சினையில் இலக்கியம் பேசுவதாகப் பேர்பண்ணிக்கொண்டு திரிகிறவர்கள் தூக்கி ஆடுவது பழைய பழக்கதோசத்தினாலேயாகும். தயவு செய்து விலகி நில்லுங்கள். நம் மண் பிரசவித்து அநியாயமாகக் கொல்லக் கொடுத்த படைப்பாளி செல்வியின் வார்த்தையில் சொன்னால், 'இது உயரே நின்றுகொண்டு, படைப்பாளிகளைப் பார்த்துச் சொல்லப்படுகிற' ஒன்றல்ல. ஒரு சிறுபரப்பில் மூன்று இலட்சங்களாக அடைக்கப்பட்டிருந்து, கண்ணெதிரே சக உறவுகளின் கொலை, அங்க இழப்புக்களைத் தரிசித்து மீண்ட மக்களிடம் திணிக்கப்பட்ட வாழ்வின் அச்சத்திலிருந்தான விடுதலையை, உள்ளத்திலி ருக்கிற தகைப்புகளை போக்கி ஒழுக்கம் சார் மக்களாக மாற்ற மானிட நேசம் கொண்ட படைப்பாளிகளாலேயே முடியும். அவர்களின் விமோசனமே முக்கியமானது.

இந்தப் படிப்பாளிகள், தங்கள் தங்கள் பட்டம், பதவி, சில்லறை களுக்காக மோதிக் கொண்டிருக்கட்டும். சிங்கள ,தமிழ், முஸ்லிம் படைப்பாளி களாலேயே இதுவரை விதைக்கப்பட்டு ஊன்றிப்போயுள்ள 'அடுத்தவர் நரகம்' எனும் வாழ்வின் போக்கிலிருந்து, 'ஒன்றுபட்டாலே உள்ளது வாழ்வு' எனும் நிலைக்கு மக்களை மாற்றிவைக்க முடியும். அதற்கு மூன்றின முற்போக்கு (?) சக்திகளும் ஒன்றுபட்டு பொதுப்புத்தியில் இயங்கும் நிலை இனியாவது ஏற்பட முன்நிற்போம். இந்த நுற்றாண்டின் மிகப்பெரும் பணம் பிடுங்கும் தொழிற் துறையாக மருத்துவம் ஆகியுள்ளது எனும் கூற்றுப் போலவே இலங்கையின் இலக்கிய வீச்சும் ஆகாதிருக்கப் பிரார்த்திப்போம். VIII

Read more...

Thursday, September 15, 2011

வெள்ளைசேட்டணிந்து கொண்டு மக்களை ஏமாற்றும் வேஷதாரிகளுக்கு தண்டனை என்ன?

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆனால் புலிகள் இரண்டு அல்ல நான்காகியுள்ளார்கள். இந்நிலையில் பிளவு பட்டுள்ளவர்கள் தமது கதையை தாங்களாகவே சொல்கின்றபோது அதை வாசகர்களாகிய உங்களுக்கு கொண்டுவருவதில் இலங்கைநெற் மட்டற்ற மகிழ்சியடைகின்றது.

கீழே சுவிஸ் புலிகளின் உள்வீட்டு விடயங்கள் பலவற்றை அவர்களின் உடனிருந்த சகா ஒருவர் மிகவும் தெளிவாக விளக்குகின்றார்.

சுவிஸ் நாட்டில் பேர்ன் மாநகரத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தினை கொண்டு சில விடயங்களை மீட்டிப்பார்க்க தள்ளப்பட்டுள்ளளேன். போராட்டம் என்பது ஒரு கொள்கையின் அடிப்படையில் மக்களுக்காக மக்கள் போராடுவது. எங்கள் விடுதலை போராட்டமும் அப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாவி மக்களை காக்க வீறு கொண்டெழுந்த போராட்ட உணர்வுஜீவிகளை புலிகள் ஆயிரக்கணக்கில் இல்லை லட்சக்கணக்கில் கொன்றொழித்தனர்.

புலிகள் தாங்கள் நினைத்த போக்கிற்க்கு போராட்டத்தை திசைதிருப்பிச் சென்றதன் விளைவுகளே கீழே உள்ள விடயத்தின் பலாபலன்களாக நாம் கண்முன்னே காணகூடியாதாக இருந்தது. இலங்கையிலே புலிகளின் கொடுமையினால் மக்கள் படும் துயர்களை ஒத்த துயரத்தை இங்குள்ள புலிகள் மக்களின் பணத்தில் ஏப்பம் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது நாடாத்திவிடுகின்றனர். இவ்வாறான விடயங்களை தொடர்ந்தும் மன்னிக்க முடியாது இவை அம்பலப்படுத்தப்படும்போது இவ்வாறான செயல்கள் முற்றுப்பெறலாம் என்ற எதிர்பார்புடன உங்கள் முன் உண்மைச் சம்பவத்தை எழுதுகிறேன்..

வெளிநாடுகளில் வாழும் மக்களின் பலவீனங்களை நாம் அறிவோம். தமது மண்ணில் இரத்த உறவுகளை விட்டுவிட்டு வந்து நாம் பல்கோணங்களில் மன அழுத்தங்களுடன் வாழ்வதை பயன்படுத்தி இங்கு புலிகள் இயக்கத்திற்காக பினாமிகளாக செயல்பட்டுவந்த அதிகமானோர் பல்வேறு வடிவங்களில் மக்கள் சொத்துக்களையும் பணங்களையும் சிலரின் குடும்ப பெண்களின் உடலையும் ஏப்பமிட்டு குடும்பங்களை குட்டிச்சுவராக்கி குடும்பத்தாரின் நின்மதிகளையும் தங்களின் சுயலாபத்திற்காக திருடி வாழ்க்கை நடாத்திவந்துள்ளனர். இவைகளை அனைவரும் அறிவோம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளபோதும் சென்றவாரம் இடம்பெற்ற உண்மை சம்பவம்தனை மக்கள் முன் தருகின்றேன்.

சுவிஸ் நாட்டில் புலிகளுக்காக பினாமியாக செயல்பட்ட பலர் குலம், அல்பேட், தயா, ரகுபதி, அப்புல்லா, கோட்சுதா, கருணா, மாம்பழம், சசி, லகி, கருணாநிதி, மூர்த்தி, சீலன், பரம், உதயன், காயத்ரி(ஆண்), யசோ, குட்டி, தர்மசீலன், றங்கன், இந்திரன் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். மக்களுக்க துரோகம் செய்வதில் வல்லவர்கள் என்று பட்டம் வழங்கலாம. நாட்டில் வாழும் மக்களின் புன்னகை மீட்புக்காக என்கூறி வெளிநாடுகளில் வாழும் அப்பாவி மக்களிடம் பணம் சேகரித்து, தங்களின் பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவும் சுவிசில் வீடுகள் அமைக்கவும், பிறரின் மனைவிகளை ருசிபார்க்கமே பினாமிகள் செலவிட்டு வந்துள்ளார்கள் என்பதற்கு நான் தருகின்ற உதாரணம் சான்றாகும்.

இதன் அடிப்படையில் உதயன் என்பவரும் அவர் கும்பலும் பேர்ண் மாநகரில் கடந்த 3 வருடங்களாக நடாத்தி வந்த ஒருவிடயத்தினை குறிப்பிடுகின்றேன். உதயன், யசோ, கருணாநிதி, குட்டி ஆகிய நால்வரும் ஓரே இடத்தில் தொழில் செய்பவர்கள். இவ்வேலையிடத்திற்கு அண்மையில் இவர்களுக்கு ஒரு நண்பர் இருந்துள்ளார். மிகவும் உற்ற நண்பர்கள் எனக் கருதிய அந்த நபர் மேற்படி புலிப்பினாமிகளை வீட்டிற்கு அழைதுள்ளார். 3ஆண்டுகளாக வீட்டுக்கு வந்துபோன இவர்கள் நண்பனின் மனைவியையும் தங்கள் வசம் இழுத்துக்கொண்டனர. 3 ஆண்டுகள் கணவனுக்கு தெரியாமல் நண்பனின் மனைவியும் பஞ்சபாண்டவர்க்கு பாஞ்சாலிபோல்கதை தொடர்ந்து வந்தது.

சில வாரங்களுக்கு முன்பு நண்பன் கருத்தடை மாத்திரை அலுமாரியில் இருந்ததை அவதானித்து பஞ்சாபாண்டவரின் மனைவியை அடித்து உதைத்தது உண்மைகளை அறிந்துள்ளார்.

இவையனைத்துக்கும் அப்பால் பினாமிகள் தமிழ் மக்களுக்கு தமிழீழம் பெற்றுத்தரப்போகின்றோம் என மக்களிடம் அறவிட்ட பணதின் பல இலட்சம் சுவிஸ் பிராங்குகளை நண்பனின் பெயரிலும் அவர் மனைவியின் பெயரிலும் உதயன் என்ற வெள்ளைசேட்டு பினாமி இட்டு வந்ததாக தெரிவருகிறது.

மக்கள் எத்தனையோ துன்பங்களால் இன்னல் பட்டு உழைத்த பணங்கள் வெள்ளைசேட்டு அணிந்த பினாமிகள் இவ்வாறு சீர்கெட்ட வழிகளில் செலவு செய்துள்ளனர்.

தமிழீழம் பெற்று தருவதாக மக்களிடம் பெற்ற பணங்கள் எவ்வாறு செலவிடப்பட்டது தெரியுமா?? மக்களே அறிந்து கொள்ளுங்கள் மக்களே.....


(1)குலம்.. சுவிஸில் புலிகளின் பொறுப்பாளராக திருமணமே செய்யாத பிரமச்சாரி எனக் கூறிக்கொண்டு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றியது.

(2)அல்பேட்.. மேடைகளில் பினாமிகளின் பேச்சாளராகவும் இருந்து இன்று செங்காளனில் பாரியளவில் வியாபரத்தளம் அமைத்ததுள்ளார்

(3)ரகுபதி.. பலஇலட்சங்களுக்கு அதிபதி தான் வசிக்கும் மாநகரில் வீடு கட்டியமை

(4)அப்புல்லா.. மக்கள் பணத்தைசூறையாடி சிங்களிப் பகுதிகளில் காணிகள் வேண்டியமை

(5)கோட்சுதா.. மக்களை அச்சுறுத்தி என்றும் களைபுடுங்குவோம் என்ற வாக்கியத்தை பயன் படுத்தி பல ஆயிரக்கணக்கான பணங்களை இவன் ஏமாற்றியுள்ளான் மற்றான் மனைவியுடன் குடும்பம்நடாத்துவதில் வல்லவர் பலயுக்திகளில் மக்கள் பணங்களை ஏமாற்றியமை.

(6)கருணா.. தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் இலட்சக்கணக்கான பணங்களை தனது மனைவியின் நாமத்தில் கொழும்பில் வீடுகள் வேண்டியமை

(7)மாம்பழம்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் பணங்களை வங்கிகள் மூலம் போலிபத்திங்களை வழங்கி மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்மை

(8)சசி... பலஆண்டுகளாக பினாமிகளின் தலைவனாக செயல்பட்டமை உண்டியல் சேவைக்காக சுவிஸ்நாட்டில் பேர்ன் நகரில் வியாபார தளம் அமைத்துள்ளமை இங்கு முக்கியமா குறிப்பபிடத்தக்கது

(9)லகி.. இவர் வெள்ளைசேட்டு அணிந்து மக்களிடம் பணம் வசூலிப்பதில் வல்லவர் தற்பொழுது மிக்சர் முறுக்கு சாப்பாட்டு கடை நடாத்தி வருகிறார்

(10)கருணாநிதி... பலஆண்டுகளாக பணம் வசூலித்த இவர் தனது தாய் தந்தைதனை சகோதரர்களை பத்து வருடங்களுக்கு முன்னரே. இந்தியாவில் வைத்து பராமரித்து வந்துள்ளார் தற்பொது தனது தமிழ் மக்களின் பணத்தில் மைத்துனரை சுவிஸிற்கு அழைத்துவந்து தனது இல்லத்தில் வைத்து பராமரித்து வருகிறார் மைத்துனர் பத்திரம் இல்லாமல் வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. மக்களை அச்சுறுத்துவதில் வல்லவர்.. பலவகையான யுக்திகளை பயன் படுத்துவதிலும் வல்லவர்..

(11)குட்டி.. இவர் குலத்தின் காவலாளி கைத்தடி 2004 ஆண்டு வெள்ளை சேட்டுகாரர்களினால் நடாத்தப்பட்ட nஐனீவா ஊர்வலத்தில் குலம் அவர்களுக்கு காவல் புரிந்தவர் பலரிடம் அடியும் வாங்கியவர்

(12)மூர்த்தி.. இவர் பல பொது இடங்களில் நின்று பணம் சேகரிப்பவர் கோயிலகள் கடைகள் அவரின் பணம் சேகரிப்பு நிலையங்களாகும் இவரும் பல இலட்சக்கணக்கான பணங்களை சூறையாடியுள்ளார்.

(13)சீலன்... இவரின் யுக்தி சிரிப்புக்கிடமானது. இவர் மக்களிடம் பெற்ற பணங்களில் சகோதரன் பெயரில் இலண்டனில் பெற்றோல் நிலையம் வேண்டியுள்ளார்.

(14)பரம்.. கோயில் பக்தி முத்தி கடவுளின் பணங்களை தந்திரமாக எடுத்து தனது பெயரில் பலவீடுகள் அமைத்துள்ளார்.

(15)றங்கன்... மக்கள் பணங்கள் என்றால் இவருக்கு கொள்கை ஆசை. சேகரிக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு உழைப்பதில் வல்லவர். இவர் கொழும்பில் மக்கள் பணத்தில் பெரிய மாளிகை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது

(16)இந்திரன்.. இறுதிவரைக்கும் மக்கள் மத்தியில் பணங்கள் சேகரித்தவர் விடுதலை போராட்டத்ததை பற்றி அறிஞர் போர்வையில் கதைத்து பணம் சேகரிப்பவர்

(17)யசோ... இவருக்கு வெள்ளைசேட்டு என்றால் பிடித்தமானது ஒன்றாகும். பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி பணம் பெறுவதில் வல்லவர் குலத்தின் காவலாளியும் கூட. இவர் மக்களிடம் சேகரித்த பணத்தில் இவரின் மனைவி பெயரில் இலங்கையில் பல சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

(18)உதயன்.. இவர்தான் கதையின் கதாநாயகன் பிறர் மனைவியை நண்பனின் மனைவியை அனுபவித்து விட்டு நண்பனுக்கு தனது விடையம் தெரிந்து விட்டபடியால் நண்பனையே பிறரின் துணையுடன் ஆயுதமுனையில் அச்சுறுத்திக்கொண்டு அலைபவர. பல குடும்பங்கள் பிரிவதற்க்கு இவர் காரணமானவர. மக்கள் பணத்தில் இரண்டு வீடுகளை சுவிஸில் அமைத்து வருவதாக தெரியவருகிறது.

போராட்ட உணர்வு கொண்ட மக்களே உங்களை தங்களின் சுயனலத்திற்காக பயன்படுத்தி துன்பப்படும் மக்களின் அவலம் அறியாது போராட்டம் என்ற போர்வையில் தங்களின் தலைமைகளையும் ஏமாற்றி அப்பாவி மக்களின் பணத்தை சூறையாடி ஒன்றுமறியா அப்பாவிகளின் மனைவிகளின் வாழ்வையும் சூறையாடி தங்களின் வாழ்வை வழப்படுத்தியவர்களுக்கு உங்களின் தண்டணை என்ன? எங்கள் மக்கள்தான் வெள்ளை சேட்டணிந்து ஏமாற்றி அலைந்து திரியும் வேஷக்காரருக்கு அதிகபட்ஷதண்டனை வழங்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் புலிகள் தனதும் தனது மனைவியின் பெயரிலும் வைப்பிலிடப்பட்ட பணத்தை அனுபவிக்க முடியாமல் தனது குழந்தைகளுடன் நிம்மதியாக வாழவும் முடியாமல் அலைந்து திரிவதாக அறியமுடிகின்றது.
VIII

Read more...

Tuesday, August 30, 2011

எய்தவன் இருக்க அம்பை நோவதா? கருத்துராவின் கண்ணீருக்கு யார் பொறுப்பு? பீமன்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலைவழக்கில் குற்றவாளிகள் என இந்திய நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனை ஊர்ஜிதம் செய்யப்பட்டதுடன், அதற்கான நேரமும் குறித்தாகி, அவர்கள் நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில், 8 வாரங்களுக்கான தடை உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களான நளினி - முருகன் தம்பதியினரின் புதல்வியின் அழு ஓசை, கருணையுள்ளம் கொண்ட அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஜெயிலிலே பிறந்து தாய் தந்தைப் பாசம் கிடையாமல் அங்குமிங்குமாக வளர்ந்த இவ்யுவதியின் இந்த அவலத்திற்கு காரணகர்த்தாக்கள் இந்திய நீதிமன்றும் இந்திய அரசும் என கதை சொல்லப்படுவதை அவதானிக்கின்றபோது, யுவதியும் தன் தாய்போல் கயவர்களின் வலையில் வீழ்ந்துவிட்டாரா அல்லது வீழ்ந்து விடுவாரா என்றதோர் ஏக்கம் ஏற்படுகின்றது.

இந்தியாவிலே புலிகளின் பணத்தைவைத்து நடாத்தப்படுகின்ற பித்தலாட்ட ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் இவர்களின் உயிரை நிச்சயமாக காப்பாற்றபோவதில்லை. இது புலிகளின் பினாமிகள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும் அனுதாபம் தேடுவதற்கும் மேற்கொள்ளுகின்ற விடயங்களே ஆகும். ஆயிரக்கணக்கான உயிர்கள் இறுதி யுத்தத்தில் மடிந்து கொண்டிருந்தபோதும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இந்நியாவில் மாத்திரமல்ல உலகம்பூராகவும் இடம்பெற்றது. ஆனால ராஜிவ் காந்தியின் படுகொலைக்காக பிரபாகரனின் உயிருக்கு இந்தியா கொடுத்தவிலையே அது காத்த மௌனம். அதற்கும் அப்பால் பிரபாகரனை உயிருடன் பிடிக்கும்வரை அல்லது அவன் உடலை கைப்பற்றும்வரை யுத்தத்தை ஊக்குவித்தது இந்தியா என்பது யாவரும் அறிந்த ரகசியம்.

இந்நிலையில் ராஜிவ் கொலை குற்றவாளிகளான புலிகளுடன் அல்லது புலம்பெயர் பினாமிகளுடன் நளினியின் மகள் இணைந்து கொள்வதானது எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுகின்றவிடயமாகவும் இந்திய அரசை ஆத்திரப்படுத்துகின்ற விடயமாகவும் அமையப்போகின்றது.

இன்றும் இவர்களை பாதுகாக்க இருக்கக்கூடிய ஒரே ஒரு உபாயம் புலிகள் தமது தவறுக்காக ஒட்டுமொத்த இந்தியதேசத்திடமும் மன்னிப்பு கோருவதாகும். மூன்று உயிர்கள் தமது உயிர்களை விடுவதற்கு நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றன. புலிகளின் தலைமை முற்றோடு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் தலைமை தாங்களே என உள்ளே அடிபட்டுக்கொண்டு பல குழுக்கள் உள்ளன. இக்குழுக்களால் தலைமை செய்த தவறுக்காக மன்னிப்புக்கோர முடியுமா?

இந்தியதேசம் இதை பல தடவைகளில் எதிர்பார்த்ததுடன் இதற்கான பல சந்தர்ப்பங்களை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு வழங்கினர். ஆனால், தெருவால் போன நாய் ஒன்றை தமது உறுப்பினர்கள் தவறாக சுட்டுவிட்டனர் என்ற பாணியில் துன்பியல் சம்பவம் என்று அன்ரன் பாலசிங்கம் விடயத்தை முடித்தார். பிரபாகரனால் இறுதியாக பேசப்பட்ட மாவீரர் உரையில் பிரபாகரன் இந்திய தேசத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரப்போகின்றார் எனவும், நேசக்கரம் நீட்டப்போகின்றார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆம் நேசக்கரம் நீட்டினார். ஆனால் அவரது வரட்டுக்கௌரவம் மன்னிப்புக்கோர இடமளிக்கவில்லை. அவர் மன்னிப்புக்கோராதவரை அவர் கையைப் பற்ற இந்தியா தயாராக இருக்கவுமில்லை, மேலும் ஆத்திரம் அதிகமானது.

எனவே தற்போது புலிகள் எனும் பெயரால் மூலை முடுக்குகளிலிருந்துகொண்டு அறிக்கைப் போர் செய்துகொண்டிருக்கும் காகிதப்புலிகளால் இவ்யுவதியின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களது உயிரைக் காப்பாற்றவும் முயற்சிக்க முடியும்.

தமது தலைமை செய்திருந்த இக்கொலையில் நியாயமிருக்குமாக இருந்தால் அதை நியாயப்படுத்த வேண்டும். அன்றில் தவறுக்காக மன்னிப்பு கோர வேண்டும்.

புலிகளின் பாசையில் இவ்வாறான பலிகொடுப்புக்கு பெயர் தற்கொடை. இவ்வாறுதான் தற்கொலைதாரிகளாக வெடித்து சிதறியவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள். எனவே ராஜிவ் கொலையில் நியாயம் உண்டாயின் புலிகள் தமது தரப்பில் நியாயமிருப்பதாக கூறி தற்போது தூக்குமேடையில் நிற்கின்றவர்களை காப்பாற்ற முன்வரவேண்டும்.

அதாவது மேற்படி குற்றவாளிகள் எந்த குற்றத்தையும் புரியாதவர்கள் எனவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் தமது தலைமையால் இடப்பட்ட கட்டளையையே அவர்கள் நிறைவேற்றினார்கள் எனவும், அவர்கள் நிரபராதிகள் எனவும், இதற்;கான சகல பொறுப்பையும் நாம் ஏற்கின்றோம் எனவும் இவ்யுவதியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டேனும் புலிகளின் தலைமை என தம்மை கூறிக்கொள்வோர் இந்தியதேசத்திடம் கருணை மனு விடுக்க முடியுமா?

மாறாக யுவதியை தமது சில்லுக்கழன்றுபோயிருக்கும் பிரச்சாரத் தேரிலேற்றி இழுக்க முற்றபடுகின்றனர். வன்னியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற வீடியோக்கள் சிலவற்றை தளத்தினில் தரவேற்றி வீடியோவினை பரிசோதனைசெய்வதற்கான நிபுணர்களுக்கு பணம்வேண்டுமென பிச்சைகேட்கின்ற இணையத்தளமான அதிர்வின் வங்குரோத்தை அறிந்திராத இவ்யுவதி அவ்விணையத்திற்கு பேட்டிவேறு வழங்கியுள்ளார்.

எதுவாக இருந்தாலும் இப்பேட்டியினூடாக புலிகளின் கொடுமையினை சிறுமி வெளிப்படுத்தியுள்ளார். அப்பேட்டியில் இவ்வாறு கூறுகின்றார் "நான் 12 வயதாக இருந்தபோது சிறைக்கு சென்று எனது பெற்றோரை பார்த்தபோது இவர்கள் இவ்வாறான ஒருவிடயத்தை செய்துவிட்டு, என்னை தவிக்கவிட்டுவிட்டு இந்தமாதிரி வந்திருக்கிறார்களே என்ற ஒரு வெறுப்பும் என்னிடம் தோன்றியிருந்தது. என்னுடைய அந்த சிறுவயதிலே அதை வெளிப்படையாக கேட்டுவிட்டேன் அப்போது எனது அப்பா அழுவிட்டார். அத்துடன் என்னுடைய அப்பா கேட்டார், இந்ந குண்டு வெடிப்பு 91 ம் ஆண்டு இடம்பெற்ற நேரத்தில் உன்னுடைய அம்மா ஒருமாத கர்பிணியாக இருந்தார், அப்படி இருக்கிறபோது அந்த குண்டுவெடிப்பினால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சுத்தாக்கங்கள் குழந்தையை பாதிக்கும் என யாவருக்கும் விளங்கும். எனவே எந்த ஒருதாய்க்கும் தனது முதற்குழந்தை மிக முக்கியமானது என்பதுவும் யாவருக்கும் விளங்கும் எனவே அதை அறிந்து கொண்டு உன்தாய் அந்த இடத்திற்கு போயிருப்பாள் என நீ நம்பிறயா, இல்ல உன் அப்பா நான்தான் இதை அறிந்து கொண்டு மனைவியும் குழந்தையும் இறக்கபோகுது என தெரிந்திருந்து கொண்டு அவர்களை அனுப்பிவிட்டு சும்மா வீட்டில் உட்காந்து இருந்திருப்பேன் எனவும் நம்பிறயா எனக் கேட்டார்.'" அந்தவகையில் நான் தெளிவாக கூறுகின்றேன் அவர்கள் இந்த விடயத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை என யுவதி கூறுகின்றார்.

சிறையில் உள்ள தந்தையை பன்னிரண்டு வருடங்களின் பின்பு ஒரு சில மணித்தியாலயங்கள் அல்லது நிமிடங்கள் பேசிய அவ்யுவதிக்கு தந்தையின் வாக்கியங்கள் மந்திங்களாக பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

மேலும் முருகன் தெரிவித்திருந்தது உண்மையாக இருந்திருந்தால்

இவ்விடயத்தை தெரிந்து கொண்டு மனைவியையும் குழந்தையையும் அனுப்பிவிட்டு நான் வீட்டில் சும்மா உட்காந்து இருந்திருப்பேனா?

என்கின்ற கேள்வியினூடாக முருகன் நளினியை அவ்விடத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றார் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். ஏன் அனுப்பினார் தான் சுயமாக அனுப்பியிராவிட்டால் ஏதோ ஒருசக்கியின் வேண்டுகோளின் அடிப்படையில்தானே அனுப்பியிருக்கின்றார். யார் அந்த சக்தி ஒற்றைக்கண் சிவராஜனாக இருக்கலாம் அல்லது அவனுக்கும் மேலான ஒரு சக்கியாக இருந்திருக்கலாம். ஏதோ மனைவியும் பிள்ளையும் தெய்வாதீனமாக உயிர்தப்பி வந்துள்ளார்கள். முருகன் அவர்களை அனுப்பி வைத்திருக்காவிட்டால் தனது மனைவியையும் பிள்ளையையும் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கசொன்ன அந்த சக்திமீது ஆத்திரப்பட்டாரா? மாறாக அவர்களை இன்றும் காப்பாற்றி வருகின்றார்.

அதாவது முருகன் வன்முறைமீது அதீத பற்றுக்கொண்ட புலி. புலிகள் தமது இலக்குகளை அடைவதற்காக ஒருமாத கர்ப்பிணியை குண்டுவெடிக்கும் இடமொன்றுக்கு பக்கவாத்தியத்திற்காக அனுப்பி வைப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் நிறைமாத கர்ப்பிணியின் உடலில் குண்டினை பொருத்தி தற்கொலைதாரியாக அனுப்பிய கொடியவர்கள். எனவே ஒருமாத கர்ப்பிணியை அவ்விடத்திற்கு அனுப்பியிருப்பேனா என்ற கேள்விக்கெல்லாம் இடமே இல்லை.

இதில் உண்மையில் பாதிக்கப்பட்டது நளினி என்கின்ற அப்பாவிப்பெண். இந்தியாவிலே ராஜிவ் காந்தி கொலைசெய்யப்படும்வரை இலங்கைப்போராளிகள் என்றால் அப்படி ஒரு மதிப்பு இருந்தது. அந்த மக்கள் காட்டுமிராண்டிகளை போராளிகளாகவே பார்த்தார்கள். அவ்வாறுதான் நளினியும் ஏமாந்திருக்கவேண்டும் தனது இலக்கினை அடைவதற்காகவே முருகன் காதலித்திருக்காலம். அதுவும் அவள் இந்த குண்டுவெடிப்பில் குண்டு தாரியுடன் இணைந்து போகும்போது அங்கு உயிரிழக்க நேரிடலாம் என்ற கணிப்பில் நளினியை எமாற்றி கருத்தரிக்ககூட வைத்திருக்கலாம். இவ்வாறு இந்தவிடயம் தொடர்பாக எத்தனையோ கோணங்களில் ஆராயலாம.; ஆனால் அவை நளினிக்கோ கருத்துராவுக்கோ எந்த பயனையும் தரப்போவதில்லை. ஆனால் தந்தையாக இருந்தாலும் முரு கன் தனது தாயை எவ்வாறு அடைந்தான் அவனது நோக்கம் என்னவாக இருந்தது என்பது பற்றியெல்லாம் கருத்துரா நன்கு சிந்திப்பதுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புலிகளுடன் இணைவது சிறந்தாக அமையாது.

புலிகளிடம் ஏராளமான பணம் உண்டு, தமது பிரச்சாரத்திற்காக கருத்திராவை பயன்படுத்துவதற்கு அவர்கள் கோடிகளை செலவழிக்கலாம் ஆனால் அது நிரந்தராமானது அல்ல முற்று முழுதாக சுயலாபநோக்கு கொண்டது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

கருத்துராவிற்கு நல்லதோர் எதிர்காலம் அமையவேண்மென பிரார்த்திக்கும் அதேநேரம் கருத்துரா புலிப்பினாமிகளின் சில்லுடைந்த பிரச்சாரதேர்மீது ஏறி இந்திய அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்குவதை தவிர்த்து உங்களையும் உங்களை தாயையும் இன்று அனாதைகளாக்கிய புலித்தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதே சாலச் சிறந்தாககும்.

உலகிலே இருந்திருக்கக்கூடிய போராட்ட இயக்க தலைமைகள் சகல தவறுகளினதும் பொறுப்புக்களை தாமே சுமந்து தக்க தருணத்தில் அதன் ஆதரவாளர்கள், தொண்டர்கள், போராளிகளை காப்பாற்றி வந்திருக்கின்றது. ஆனால் புலித்தலைமையோ தமது இருப்பை தக்கவைத்து கொள்வதற்காக போராளிகளை காட்டிக்கொடுத்திருக்கின்றது, நடுத்தெருவில் விட்டிருக்கின்றது. அவ்வாறு புலித்லைமையால் காட்டிக்கொடுக்கப்பட்ட நடுத்தெருவில் விடப்பட்டவர்களில் ஒருவரே கருத்துராவின் தந்தையும்.

VIII

Read more...

Sunday, January 30, 2011

சுவிஸ் கைதுகளோடு இனங்காணப்படவுள்ள துரோகிகளும் , தியாகிகளும். -பீமன்

சுவிற்சர்லாந்தின் மத்திய அரசின் நெடுநாள் கண்காணிப்பின் பின்னர் புலிகளின் காட்டுத்தர்பார் கடந்த மூன்றுவாரத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்படக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியள்ளது. சுமார் 18 மாதங்களுக்குமேலாக சகல செயற்பாடுகளையும் பின்தொடர்ந்த சுவிற்சர்லாந்து மத்திய அரசின் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு நாடுபூராகவும் 23 இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட தேடுதலில் புலிகளின் செயற்பாடுகளை சுவிற்சர்லாந்தில் முன்னெடுத்துச்சென்ற முக்கிய செயற்பாட்டாளர்கள் 10 பேரை கைது செய்தனர். இக்கைதுகள் காலம் கடந்ததாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்கள் மீள்வதற்கு சுவிற்சர்லாந்தில் போடப்பட்ட சிறந்ததோர் உறுதியான அடித்தளமாகவே நோக்கப்படுகின்றது.

மாநில சுயாட்சியின் அடிப்படையில் சிறந்ததோர் ஜனநாயக நாடாக உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்ற சுவிற்சர்லாந்தில் மாநிலங்களின் பொலிசாருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ்வவ்மாநிலங்களின் பாதுகாப்பு, குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் யாவும் மாநிலப்பொலிஸாரினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதேநேரம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வியடங்களை மத்திய அரசின் பொலிஸ் பிரிவினர் கையாள்வர். அந்த வகையில் மேற்படி கைதுகள் மத்திய பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டமையானது புலிகளின் செயற்பாடுகள் சுவிற்சர்லாந்தின் தேசிய பாதுகாப்புக்கும் , அதன் நற்பெயருக்கும், ஜனநாயக்தினை நேசிக்கும் தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பதை உணர்த்துகின்றது.

இலங்கையிலே சிறுபாண்மையினரான தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாரபட்சத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்றபோது, ஒட்டுமொத்த போராட்டத்திற்குமான மொத்தவியாபாரிகளாக தம்மை வன்முறைகளுடாக நிலைநிறுத்திக்கொண்ட புலிகள் அதற்காக பலிகொடுத்த , பலிஎடுத்த உயிர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிய புலிகள், போராட்டம் எனும் பெயரால் இலங்கையிலே தமிழ் மக்களின் உயிர், அடிப்படைஉரிமை, உடமைகளை பறித்ததுடன் நின்றுவிடவில்லை, உரிமைப் போராட்டம் எனும் பெயரால் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களை தமிழர் தஞ்சம் புகுந்த மேற்கு நாடுகள் யாவற்றுக்கும் ஏற்றுமதி செய்துவைத்தனர்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் யாவரும் , இலங்கையில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு , உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு புலம்பெயர்ந்தார்களா என்ற கேள்விக்கு விடைகாண நான் முயலவில்லை. ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பது உண்மை.

இவ்வாறான நிலையில் சகல நாடுகளிலும் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் சுவிற்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற கைது நடவடிக்கைகள் மிகவும் முன்மாதிரியானதாக நோக்கப்படுகின்றது. சுவிற்சர்லாந்தில் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுத்த முக்கிய புள்ளிகள் யாவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டமை அவர்கள் மீண்டும் தம்மை சுதாகரித்து கொள்வதற்கான இடத்தை வழங்கவில்லை.

இத்துடன் கைதுகள் முடிந்துவிட்டதா?
புலிகளின் பிரதேசத் தலைவர்கள் உட்பட புலிகள் சார்பாக வன்செயல்களில் ஈடுபட்டுவந்த சுவிஸ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த பலர் கைது செய்யப்படலாம் என நம்பப்படுகின்றது. சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநில குற்றத்தடுப்பு பொலிஸாரின் தரவுகளின் அடிப்படையில் சூரிச் மாநிலத்தில் மாத்திரம் 1370 தமிழ் இளைஞர்கள் இதுவரை தெருச் சண்டைகள் , கொலை மிரட்டல்கள் , குழுச் சண்டைகள் என பல்வேறுபட்ட குற்றச் செயல்களுக்காக சிறை சென்றுவந்துள்ளனர். இவர்களில் பெரும்பாண்மையானோர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தொடர்சியாக சுழற்சி முறையில் ஜெயிலினுள் நுழைவதும் விடுதலை பெறுவதுமாக குற்றவியல் புள்ளி விபரங்கள் காட்டுகின்றது. இவர்களில் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திட்டமிட்ட சதிகளில் ஈடுபடுவோர் மீது இறுக்கமான சட்டங்கள் பிரயோகிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ளோரில் புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் மாத்திரமே அடங்குகின்றனர். ஆனால் பிரதேச மட்டத்தில் பணம் சேகரித்தோர் அவ்வப்பிரதேசங்களின் ஒருவகை குறுநில மன்னர்களாகவும் குட்டிப்பஞ்சாயத்து தலைவர்களாகவும் விளங்கியுள்ளனர். இவர்கள் புலிகளுக்கான நிதிசேகரிப்பாளர்களாக மாத்திரமன்றி பிரதேச போலிப் பொலிஸ் அதிகாரிகளாகவும் செயற்பட்டுவந்துள்ளனர். தமது பிரதேசங்களில் தமிழ் குடும்பங்கள் அல்லது குழுக்களிடையே இடம்பெறும் பிரச்சினைகளுக்கு தீர்ப்பு வழங்கும் போலி நீதியரசர்களாவும், சந்தர்ப்பம் ஏற்படும்போது தாதாக்களாகவும், தமது தீர்ப்பை ஏற்காதவர்கள் மீது வன்செயல் பிரயோகித்த சம்பவங்களும் உண்டு. இவ்வாறான மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இவர்களில் பலர் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்படும் தறுவாயில் தமது வசூலிப்புக்களை பன்மடங்காக்கி மக்களிடம் முடிந்தவரை பெரும்தொகைப் பணத்தை பறித்துள்ளதுடன், அவற்றை பதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் நிதிசேகரிப்பாளர் ஒருவருடனான எனது சம்பாஷனை ஒன்றினை இங்கு தருகின்றேன். சுவிற்சர்லாந்தில் நான் வசிக்கும் பிரதேசத்தில் புலிகளுக்காக நிதி சேகரிக்கும் நபர் ஒருவரை சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் எதேச்சையாக ரயில் வண்டியினுள் நேர் எதிரே சந்தித்தேன். "உங்கள் ஆட்டங்கள் யாவும் முடிந்து விட்டதா?" என அவரிடம் வினவினேன். அவர் பதில் சொல்ல முடியாமல் எருமைமாடு தலையை அசைக்குமாற்போல் குறுக்கும் மறுக்குமாக இருபக்கமும் அசைத்தார். அவருடைய பதில் என்னவென்பதை என்னால் உணர முடியவில்லை. எனக்கு விளங்கவில்லை "ஆமா? இல்லையா?" எனக் கேட்டேன். "ஓம் ஓம் இழப்புத்தானே" என எனது கேள்விக்கு அப்பாற்பட்ட பதில் சொன்னார். "இழப்பா..? உங்களுக்கா..?" என வினவினேன். "மக்களுக்கு.." என பதில்சொன்னார். அது எனக்கும் தெரியும் . "மக்களின் இழப்புக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டபோது மௌனமாக இருந்தார். அதைவிடுவோம் "மக்களிடம் வாங்கிய பணத்திற்கு என்ன நடந்துள்ளது?" எனக்கேட்டேன், "அதைத்தானே எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள், ஆட்களைப் பிடிக்கமுடியவில்லையே" என்றார். ஓடியவர்களை விடுங்கள் "நீங்கள் வசூலித்த பணத்திற்கு என்ன நடந்தது?" எனக் கேட்டேன். நாங்கள் வசூலித்தவை யாவற்றையும் எமது பொறுப்பாளர்களிடம் கொடுத்துள்ளோம். எம்மிடம் எதுவுமில்லை என்றார். அவ்வாறானால் பொறுப்பாளர்களிடம் பணத்திற்கு என்னவாகப் போகின்றது என நீங்கள் கேட்கவில்லையா என வினவினேன். நாம் அவர்களிடம் கேட்டோம். உங்களுக்கு பதில் சொல்லமுடியாது. வருபவர்கள் வந்தால் பதில்சொல்வோம் என்கின்றனர் ஏன்றார்.

இறுதிக்கட்ட யுத்தம் என இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்திருந்த 2009 ஜனவரி மாதம் தொட்டு வசூலிப்பு மிகவும் களைகட்டியிருந்ததுடன், புலிகள் தோல்வியை தழுவப்போகின்றனர் என்பதையும் அவ்வியக்கம் முற்றாக அழிக்கப்படப்போகின்றது என்பதையும் நன்குணர்ந்து கொண்ட புலிகளின் நிதிகையாளுனர்கள் பலரும் தமக்கு கிடைத்தவை யாவற்றையும் சுருட்டிக்கொண்டதுடன் , தாம் பணத்தினை சுவிஸ் புலிகளின் தலைமையிடம் வழங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வாறாயின் இவர்கள் யாவரும் முற்றாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவேண்டும். விசாரணை செய்யப்படும்போது யார் யார் இப்பணத்தினை கையாண்டுள்ளனர் என்பது தெளிவாகும்.

அத்துடன் பணவசூலிப்பு , வன்செயல்கள் என்பவற்றிற்கப்பால் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் திட்டமிட்ட முறையில் பொய்ப் பிரச்சாரங்களை செய்து தவறாக வழிநடாத்தி , புலிகளை ஆதரிக்குமாறும் , அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்குமாறும் , புலிகள் சார்பாக ஆர்பாட்டங்களை நாடத்துமாறும், ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்தும், பிரச்சாரங்களை நாடாத்தியும் வந்த புலிசார்பு ஊடகங்கள் மற்றும் புலிகளின் துணைக்குழுக்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

சுவிஸ் தமிழர் பேரவை எனும் அமைப்பு ஒன்று சுவிற்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது உலகிற்கு புலிகள் சார்பாக பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதுடன், புலிகள் சார்பாக பிரச்சாரங்களை செய்து வந்துள்ளது. இவ்வமைப்பு உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு கடிதங்களை எழுதியிருந்தது. அக்கடித்தில் தமது அமைப்பு 750க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அவ்வமைப்புக்கள் யாவும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக எற்றுக்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் உலகம் தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது. இக்கோரிக்கைக் கடிதத்தில் அவ்வமைப்பின் தலைவர் நமசிவாயம் கையொப்பம் இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 30 வருடங்களாக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்திருந்த புலிகள் அமைப்பு எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றியிராத நிலையில் அவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்? எனவே தமிழ் மக்கள் புலிகளை ஏகப் பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உலகிற்கு கடிதங்கள் மூலம் தெரிவித்த மோசடிக்குற்றத்திற்காக நமசிவாயம் போன்றோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பவேண்டியவர்களாகும்.

கைதுக்கெதிரான போலிப்பிரச்சாரங்கள்.
புலிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில் உள்ள நியாயத்தையும் மறுதலிக்க முடியாத எஞ்சியுள்ள புலிகள் மறைந்திருந்து கைதுக்கு எதிரான போலிக்கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள புலிகளுக்கெதிராக சாட்சிகள் திரள்வதை தடுக்கும்பொருட்டு திட்டமிட்டவகையில் பரப்பப்படும் இக்கட்டுக்கதைகளில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் புலிகளின் பணத்தை சூறையாடும்நோக்குடன் இக்கைதுகளை மேற்கொண்டுள்ளது எனவும் , புலிகளிடம் பணம்கொடுத்து பாதிக்கப்பட்ட சிலர் இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினரால் விலைக்கு வாங்கப்பட்டு அவர்களுடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இக்கைதுகள் இடம்பெற்றதாகவும் வதந்திகளை பரவவிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள புலிகள் யாவரும் தாம் ஒழிந்திருந்து இலங்கை அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தங்களிடமிருந்த பணத்தின் பெரும்தொகையினை இலங்கையில் முதலிட்டுள்ளார்கள் அல்லது பாதுகாப்பான முறையில் அங்கு பதுக்கியுள்ளார்கள் என்பதனை அறிந்திராக புலியாதரவாளர்கள் எவ்வித ஆதாரங்களுமற்ற அக்குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகின்றனர்.

சுவிஸில் புலிகளின் பணத்தின் பெரும் தொகையினை தன தாக்கிக்கொண்டிருந்த அப்துல்லா எனப்படும் நபர், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்தியிருந்தவரும் தற்போது கொழும்பில் அரச மாளிகையில் விருந்தினராகவுமுள்ள குமரன் பத்தமநாதன் (கே.பி) என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பா மற்றும் லண்டன் கனடாவிலிருந்து இலங்கை சென்று கே.பி யைச் சந்தித்துவந்த புலிச்செயற்பாட்டாளர்களுள் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்காக தீவிரமாக செயற்பட்டுவந்து பவானி எனப்படும் பெண்ணும் சென்றுவந்திருந்தார். இப்பெண் அப்துல்லாவிற்கு நெருங்கியவராவர். இவரின் பயணமானது அப்துல்லாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருந்தாகவே தெரியவருகின்றது. இவர் அங்கு சென்று கே.பி யை சந்தித்து வந்த பின்னர் தம்மிடமிருந்த பணத்தின் பெரும்பகுதியை இலங்கைக்கு மாற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

மறுபுறத்தில் தாய்வீடு எனப்படும் நிறுவனத்தின் உரிமையாளரான கரன் என்பவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கதை ஒன்று பரவ விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் உண்மையில் கைது செய்யப்பட்டாரா? அதன் பின்னணி புரியாத புதிராகவே உள்ளது. மஹிந்த விஜயம் செய்யவிருந்த ஹோட்டல் ஒன்றில் இவர் தங்கியிருந்தபோது, மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகத்திற்குள்ளான இவர் எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டார். கரன் கைது செய்யப்பட்ட விடயம் ஹோட்டல் சிப்பந்திகளுடாக ஊடகங்களுக்கு கசிந்ததை தொடர்ந்து. அரச தரப்பில் இவர் கைது செய்யப்பட்டதான தகவல் ஊர்ஜிதமானது. பின்னர் ஊடகங்களுக்கு கரன் தொடர்பான செய்திகளை வழங்குவதை இலங்கை பாதுகாப்பு தரப்பு தவிர்த்துள்ளது. எனவே கரன் காலப்போக்கில் கே.பி போன்று இராஜதந்திரிகள் தங்கும் அரச மாளிகையிலிருந்து வெளிவரலாம் என்பது எனது ஊகம்.

காரணம் கரன் இலங்கையில் இதுவரை 190 மில்லின் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக தெரியவருகின்றது. பிரபாகரன் மே 17 இல் கொல்லப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட இவர் 2009 - 09 ம் மாதம் முதன் முறையாக பிராங்போர்ட்டிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார். தூதரகம் சார்பாக ஜேர்மனுக்கான இலங்கைத்தூதரகத்திலுள்ள அதாவுட என்பவருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது இவரின் கடையில் தொழில்புரியும் விஜயராஜா என்பவரும் உடனிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சந்திப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டின் பின்னரே இவர் இலங்கை சென்று முதலிட்டுள்ளார். எனவே சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கதுடன் இணைந்து செல்லமுடியாது என பாடம் கற்பிக்கும் புலிகள் மறுபுறத்தில் தமிழ் மக்களிடம் சுரண்டிய பணத்தினை இலங்கையில் தனிப்பட்ட தமது முதிலீடுகளை பெருக்கி வருகின்றனர். எனவே மக்கள் புலிகளின் உண்மை முகத்தினை உணர்ந்து புலிகளிடமுள்ள சகல பணம், சொத்துகளை பறிமுதல் செய்து அப்பணத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவிடப்படுவதற்கு ஒத்துழைக்கவேண்டும்.

புலிகளை எதிர்ப்பவர்கள் , அல்லது அவர்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு சாட்சியம் சொல்ல முற்படுபவர்கள் துரோகிகள் என தமிழ் மக்களுக்கு பாடம் கற்பித்து தரப்பட்டிருக்கின்றது. ஆனால் புலிகளியக்கம் முற்றாக அழிக்கப்பட்டபின்னர் கோடிக்கணக்கான பணத்தினை கொண்டிருந்த புலிகள் அப்பணத்தில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியை சுவிற்சர்லாந்தில் புலிகளுக்கு பணம்கொடுத்தவர்கள் புலிகளை நோக்கி கேட்கவேண்டும். உண்மையில் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்காக பணம் கொடுத்தவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வினை கருத்தில்கொண்டு பணம் வழங்கியவர்களா? அன்றில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பணம் வழங்கியவர்களா? இவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வின் பொருட்டு பணம் வழங்கியவர்களாக இருந்தால் சுவிஸ் புலிகளுடனான தமது அனுபவங்களை பொலிஸாருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

சுவிற்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள புலிகள் , புலிகளியக்கத்திற்கு ஆயுதங்களை வாங்கினார்கள், மேலும் அவ்வியக்கத்திற்கான நிதிஉதவியினை செய்தார்கள் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியுள்ளனர். எனவே இலங்கையில் புலிகள் மேற்கொண்ட கொலைகள் உட்பட சகல பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் சுவிஸ் புலிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது நிருபணமாகின்றது. எனவே புலிகளியக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புலிகளியக்கத்தினரால் இலங்கையில் நேரடியாக பாதிக்கப்பட்ட பலர் சுவிற்சர்லாந்து நாட்டில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இப்படியானவர்கள் நேரயாக பொலிஸாரை (+41) 0800 10 20 60 எனும் இலவச தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு சுவிஸ்புலிகள்மீது வழக்கு பதிவு செய்து இவர்களிடமிருந்து தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நஸ்டஈட்டினை பெற்றுக்கொள்ள எந்த தயக்கமும் காட்டவேண்டாம் என வேண்டப்படுகின்றீர்கள்

புலிகளுக்கு எதிராக சாட்சியம் சொல்பவர்கள் துரோகிகள் என்ற புலிகள் உருவாக்கிய அந்தப் பழங்கதையை மக்கள் மறக்கவேண்டும். அக்கதை எவ்வாறு உருவானது? போராட்ட இயக்கங்கள் தமிழருக்காக போராடுகின்றது, அவர்களுக்கு எதிராக செயற்படுவோர் துரோகிகள் என சொல்லப்பட்டது. ஆனால் புலிகள் மக்களுக்காக போராடினார்களா? இல்லை இவர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் , இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழினத்தை அதன்பெயரால் ஆயுதம்தாங்கி குறைக்கு தாங்களும் அடக்கியாண்டதே வரலாறு. எனவே இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வருவோர் துரோகிள் அல்ல என்பதையும் அவர்கள் தியாகிகளே என்பதையும் வரலாறு உணர்த்தும்.

சுவிற்சர்லாந்தில் மோசடி செய்து புலிகள் பலரின் பெயரில் வங்கிக்கடன்களை எடுத்தனர். இவ்விடயங்கள் பல இடங்களில் கணவன் மனைவிக்கு தெரியாமல் இடம்பெற்றது. மே 17 2009 இற்கு பின்னர் புலிகள் சுருட்டிய தொகைளுடன் ஓடி மறைந்தனர். அப்போது கடன்சுமை தனிக்குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டது. கடன் தொல்லை தாங்காமல் குடும்பங்களிடையே சச்சரவுகள் உருவாகி விவாகரத்துவரை சென்றுள்ளது. இந்நிலையில் இக்கடன் சுமைக்கு பொறுப்பானவாகள் யார் என்பதை தெரியப்படுத்தினால் அவர்கள் துரோகிகளா? எனவே இம்மக்களின் இச்சுமையில் பங்கெடுக்க முடியாத தமிழ் சமுதாயம் சட்ட உதவியை நாடும் நபர்கள் மீது துரோகிப்பட்டம் சுமத்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

அத்துடன் சுவிற்சர்லாந்திலே தம்மை ஜனநாயகவாதிகள் என பிதற்றிக்கொண்டு ஆழுக்கு 10 சங்கங்களை பதிவு செய்து பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒன்று உண்டு. அவர்களிடம் ஒரு வேண்டுதலை விடுக்கின்றேன். நீங்கள் பேசும் ஜனநாயகம் உண்மையாக இருப்பின் வெளியே வாருங்கள். உங்கள் சங்கங்கள் ஊடாக தமிழ் மக்களை ஒன்றிணைத்து பாதிக்கப்பட்டவர்கள், புலிகளுக்கு எதிரான சாட்சியங்கள் வழங்கவேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்துங்கள்.

நான் இவ்வாறு வேண்டும்போது சுவிற்சர்லாந்து பொலிஸார் புலிகளை சாட்சியங்கள் இல்லாது கைது செய்துவிட்டனரோ என்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டாம். புலிகள் செய்த சகல தவறுகளுக்கும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதே நியதி. எனவே புலிகளால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்று திரட்டி புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை உணர்த்த யாவரும் முன்வரவேண்டும். இன்று புலிகள் கைது செய்யப்பட்டபின்னர் சுவிற்சர்லாந்திலுள்ள தமிழர்கள் யாவருமே புலிகளா? இவர்கள் வன்முறைமீது இத்தனை காதல்கொண்ட மனிதர்களா? என பிற சமூகத்தினர் பார்க்கின்றனர்.

எனவே புலிகள் பிழைப்புவாதிகள். அவர்கள் தமிழரின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்தார்கள். புலிகளின் வன்செயல்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை, புலிகள் தமிழ் சமூகத்தை எவ்வாறு வாட்டி வதைத்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் நிருபித்துக்காட்டவேண்டும். VIII

Read more...

Saturday, January 8, 2011

வீணையால் தேசியகீதம் மீட்டுவோம். பீமன்

இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால் செரைக்கிறவன் ஒழுங்கா செரைப்பான் என்பது டக்ளஸ் அடிக்கடி கூறும் பழமொழிகளில் ஒன்று. சுட்டு விரலை மற்றவர் மீது நீட்டும் டக்ளஸ் ஏனைய மூன்று விரல்களாலும் தன்னைக்காட்டி, நான் ஓழங்காக இருந்தால் என்தலையில் செரைக்கின்றவர்கள் மொட்டையடித்துவிட்டு செல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது பொருள்.

இலங்கையில் தேசியகீதம் சிங்களமொழியில் மாத்திரமே பாடப்படவேண்டும் என்ற விடயம் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ள செய்தியை முதன்முதலில் சண்டேரைம்ஸ் ப த்திரிகை வெளியிட்டது. அச்செய்தியில் இவ்விவகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் அமைச்சரைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், இம்மாற்றம் கொண்டுவரப்படுதவற்கான காரணம் உலகில் எந்தவொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசியகீதம் பாடப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

உலகிலே சுவிற்சர்லாந்து எனவொரு நாடுண்டு. அங்கே ஜேர்மன், பிரென்சு, இத்தாலி, ரத்தோரோமன் எனும் நான்கு மொழிகள் அரச கரும மொழிகள். இந்நான்கு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுகின்றது. இவ்வாறன நிலை யில் ஜனாதிபதி இம்மாற்றத்தினை கொண்டுவருவதற்கு மேற்படி காரணத்தை கூறுகையில் அமைச்சரவையில் அமர்ந்திருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கலாநிதிகள் வாய்மூடி மௌனிகளாக இருந்தபோது, மாற்றம் ஒன்றைத்தவிர உலகில் யாவுமே மாறிவிட்டது என ஆணைக்குழு ஒன்றின் முன் சாட்சியமளித்த டக்ளஸ் எதிர்த்து பேசாமையையிட்டு இங்கிதமும் கிலேசம் கொள்ளத்தேவையில்லை. காரணம் மாற்றம் ஒன்றைத் தவிர யாவுமே மாறியுள்ளது என்ற நினைவுலகில்வாழும் டக்கிளஸ் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில தேசிய கீதம் பாடப்படும் நாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து அங்கும் ஒரே மொழியிலேயே தேசியகீதம் இசைக்கப்படுகின்றது என நினைத்திருக்கலாம்.

ஆனால் இந்தியாவிலே தேசியகீதம் கிந்தி மொழியிலேயே பாடப்படுகின்றது என வீரவங்ச அவர்களால் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டபோது, நண்பர் வீரவங்ச அவர்களே! நான் இலங்கையிலிருந்து சிறையுடைப்பில் தப்பயோடி இந்தியாவின் சூளைமேட்டுப்பிரதேசத்திலும், இந்திய சிறையிலும், அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்திக்க சென்று பிடியாணை வந்துவிடும் என்ற பயத்தில் இலங்கைக்கு தப்பியோடிவரும்வரை பல இந்திய அரச நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கின்றேன். அங்கு தேசிய கீதம் கிந்தி மொழியில் பாடப்படுவதில்லை அது பங்காளி மொழியில் பாடப்படுகின்றது என தெளிவுபடுத்தாமையையும் ப த்தோடு ஒன்று பதினொன்றாக மன்னிப்போம்.

இலங்கையில் தமிழ் அரசகரும மொழி. வட- கிழக்கு மாகாணங்களில் அது நிர்வாக மொழியும்கூட. வடகிழக்கிலே இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகளிலும் பாடசாலைகளிலும் தமிழ் மொழி தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு இலங்கையில் அரசியல்யாப்பு இடமளித்துள்ளது.

ஆனால் இதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைவிவகாரத்தில் எரிகிறவீட்டில் பிடுங்கியது மிச்சம் என டக்ளஸ் நடாத்தும் சித்துவிளையாட்டுக்கள் மிகவும் வருந்தத்தக்கது. இத்தடைவிவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது, பிபிசி யின் தமிழ் சேவைக்கு கருத்துதெரிவித்த டக்ளஸ், இந்தவிடயம் பேசப்பட்டதே தவிர எவ்வித முடிவுகளும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இக்கருத்தினை தெரிவித்து சிறிது காலத்தில் யாழ்பாணத்தில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வொன்றில் சிங்களத்திலேயே தேசியகீதத்தை பாடுவிக்க முன்னர் அது தொடர்பாக உள்ளுர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்வில் சிங்களத்தில் பாடுவதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்திருந்ததுடன், எதிர்காலத்தில் தமிழில் தேசியகீதம் தொடர்பாக பரிசீலிக்குமாறு அரசினை வேண்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிபிசி யின் தமிழ் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் பாடுவது தொடர்பாக அமைச்சரவையில் எவ்வித முடிவுகளும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்த டக்ளஸ் உள்ளுர் செய்தி சேவைக்கு தெரிவிக்கையில் தமிழில் பாடுவது தொடர்பாக மீள்பரிசீலினை செய்யுமாறு அரசினை வேண்டவுள்ளதாக தெரிவிக்கின்றார். அமைச்சரவையில் எவ்வித முடிவும் எடுக்கப்படாவிட்டால் எதற்காக வேண்டுகோள்???

இலங்கை அரசாங்கத்திடம் தமிழில் மீண்டும் தேசியகீதம் பாடுவது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கவுள்ளேன் என பாமர மக்களுக்கு ஒரு கதைசொல்லும் டக்ளஸ் அரச அதிகாரிகளுக்கு சிங்களத்தில் தேசியகீதம் பாடப்படுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்டளையிட்டவிடயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாழ்பாணத்தில் பிரதமர் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் தேசியகீதத்தினை சிங்களத்தில் பாடுவிக்குமாறு யாழ் அரச அதிபருக்கு டக்ளஸ் கட்டளை விடுத்ததாக அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேசிய கீதம் பாடப்படும் மொழி விவகாரம் குறித்து இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தமிழில் பாடுவதில் பெரும் சிக்கல் இருப்பின் தேசிய கீதத்தை இசையால் மட்டும் இசைக்க முடியுமா என்பதை பரிசீலிக்குமாறும் மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரரான நியங்கொட விஜிதசிரி அரசிற்கு பரிந்துரைத்துள்ளார்.

இப்பரிந்துரை டக்கிளசின் காதிற்கு எட்டினால் தேரர் இசையில் தேசிய கீதத்தை இசைக்க சொல்லியிருக்கின்றார். எனவே எதிர்வரும்காலத்தில் வீணைக்கு வாக்களியுங்கள் நாம் தேசிய கீதத்தை வீணையினால் மீட்டுவோம் என தேர்தல்களில் களமிறங்குவார் என நம்புகின்றேன். VIII

Read more...

Thursday, January 6, 2011

சிறிதரன் MP க்கு குற்றப்பத்திரிகை தயாராகின்றது! த:தே:கூ வின் நிலைப்பாடு என்ன? பீமன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கான குற்றப்பத்திரிகை தயாராகியுள்ளது என பொலிஸ்துறை வட்டாரங்களிலிருந்து நம்பகமாக தெரியவருகின்றது. வன்னியில் கணவனையிழந்த பெண்ணொருவர் உதவிகோரி பா.உ சிறிதரனிடம் சென்று தன் அவலங்களை கூறுகையில் அப்பெண்ணின் உடன்பாடு இல்லாமல் வீடியோ செய்து வீடியோ பிரதியை தனது சகோதரனின் இணையத்தளத்தில் வெளியிட்டு பணம்சேகரித்த தனிமனித உரிமை மீறல் குற்றத்திற்கான குற்றப்பத்திரிகை பா.உ சிறிதரனுக்கு வாசித்து காண்பிக்கப்படும் நாள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

புலிகளியக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்து புலிகளின் லெப்.கேணல் தரத்தில் மரணித்த ஒருவரின் மனைவியான கலாறஞ்சனி தற்போது வாய்பேச முடியாத குழந்தை ஓன்றுடன் வாழ்வுடன் போராடிக்கொண்டிருக்கின்றார். குறிப்பிட்ட பெண் தனது எதிர்கால வாழ்வில் நிரந்தர வருமானம் ஒன்றை பெறக்கூடிய அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளும்பொருட்டு வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சிறிதரனிடம் சென்று தொழில் ஒன்றுவேண்டி தனது குடும்ப நிலைமையை மனந்திறந்து பேசியபோது அவரின் அந்த சோகம்நிறைந்த அவலத்தினை வீடியோ செய்த சிறிதரன் அவற்றை தனது சகோரனின் இணையமான லங்காசிறி ஊடாக சந்தைப்படுத்தி பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.

பணத்தினை விட சுயகௌரவம் மேலானது எனக் கருதும்பெண் தனது சோகம் சந்தைப்படுத்தப்படுவதை முற்றாக எதிர்த்ததுடன், குறிப்பிட்ட வீடியோவினை லங்காசிறியிலிருந்து அகற்றிவிடுமாறும், தனது சோகத்தை சந்தைப்படுத்தி நிதி சேகரிப்பதை நிறுத்துமாறும் வேண்டியுள்ளார்.

கலாறஞ்சினியின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வதாக சிறிதரன் உடன்படுகின்றார். சமநேரத்தில் விடயத்தினை வேறு ஊடகங்கள் அறிந்து கொள்கின்றன. சம்பவத்தில் கலாறஞ்சினிக்கு சிறிதளவேனும் உடன்பாடு இல்லை என்பதையும் அவர் தனது எதிர்ப்பதை தெரிவிக்கும் ஒலிப்பதிவுகள் , மற்றும் சந்தைப்படுத்தலை நிறுத்துமாறு அவர் சிறிதரனுக்கு கொடுத்த கடிதம் என்பவற்றை சில ஊடகங்கள் வெளியிட்டன. சிறிதரன் லங்காசிறி கூட்டு சந்தைப்படுத்தல் வெளிச்சத்திற்கு வந்தது.

கலாறஞ்சினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியது. சிறிதரனால் கலாறஞ்சினிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், அவர் தனது தற்காலிக இருப்பிடத்தை விட்டு மறைய வேண்டிய நிலை உருவானது.

விடயம் இலங்கை புலனாய்வுத்துறைக்கு எட்டியது. கலாறஞ்சினிக்கு உடனடியாக மறைமுக பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்த புலனாய்வுத்துறையினர் அவருக்கு சட்ட ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரியவருகின்றது. அதேநேரத்தில் இலங்கை பொலிஸ் துறையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தேர்ச்சி பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் ஒருவர் தலைமையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கலாறஞ்சினியின் வாய்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இவ்விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது கலாறஞ்சனியின் மனோவலிமையில் தங்கியுள்ளது. அவலங்களை சந்தைப்படுத்தும் இப்பேர்வழிகளுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு கலாறஞ்சனி பின்நிற்பாராயின் அது முழு சமுதாயத்தையும் பீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதிகாரிகள் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் பணியை முன்னெடுத்து சிறிதரனை சட்டத்தின் முன்கொண்டுவந்து சிறையில் அடைக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாகவுள்ளது. இவ்விடயத்தில் கலாறஞ்சினிக்கு உளவியல் தாக்கங்களை கொடுக்கவும் அச்சுறுத்தவும் சிறிதரன் பல்வேறுபட்ட கீழ்தரமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்துவருவதன் மர்மம் என்னவென்று புரியவில்லை.

சிறிதரன் 10 சகோதரர்களுடன் பிறந்தவர் அவருக்கு உறவினர்கள் பட்டாளம் ஒன்றே வன்னியில் உள்ளது. அவர்களில் சிலர் இணைந்து கலாறஞ்சினியின் வீட்டிற்கு கத்தி கோடாரிகளுடன் சென்று அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறன நடவடிக்கைளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் தகுதி அல்லது பக்குவம் உண்டா?

பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனில் நின்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என சிறிதரனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனையுமா அன்றில் அரசின் உயர்மட்டக் கதவினுள் பின்கதவால் நுழைந்து பத்தோடு ஒன்று பதினொன்றாக சிறிதரனையும் மன்னித்துவிடுங்கள் என தமது வழமையான சித்துவித்தைகளை காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அப்போதாவது வன்னி மக்களுக்கு த.தே.கூ உண்மை முகம் புரியும். VIII

Read more...

Wednesday, January 5, 2011

பள்ளோத்தெக்க நிதாகத்தனங் மக்கோத்தெக்க நகிடின்டவென்னே. பீமன்.

விளங்கிறவர்களுக்கு தலையங்கம் விளங்கியிருக்கும், விளங்காதவர்களுக்க தலைகிறுகிறுக்கும் என நானும் நம்புகின்றேன். நாய்களுடன் படுத்துறங்கினால் தேள்களுடன் எழுந்திருக்க நேரிடும் என்பது ஓர் சிங்கள முது மொழி அதுவே மேலே சொல்லப்பட்டுள்ளது. நாய்களுடன் படுத்துறங்கி உடம்பு முழுக்க தேள்களுடன் எழும்பினால், தேள்கள் இரத்தத்தை குடிக்கும், கடிக்கும், கடிக்கிற இடத்தை சொறிந்தால் இரத்தம்வரும், பின்பு சொறி சிரங்கு வரும் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு.

இந்நிலைதான் அன்று புலிகளுடன் படுத்துறங்கிய அரச அதிகாரிகளுக்கு இன்று உருவாகியிருக்கின்றது. அதற்கு சிறந்ததோர் உதாரணமாக இன்று யாழ் அரச அதிபர் எமில்டா சுகுமாரன் வலம்வருகின்றார். அப்பெண்மணி வன்னியில் இருந்தகாலத்தில் புலிகளின் தாளத்திற்கு ஆடினார், இப்போது அரசின் தாளத்திற்கு ஆடுகின்றார். ஆனால் அரசின் தாளத்திற்கு அவர் ஆடியே ஆகவேண்டும். இது சட்டத்தின் நியதி. அளவிற்கு மிஞ்சி ஆடுகின்றாரா, அரசு தாளம் போட முன்பே ஆடத் தொடங்கி விடுகிராரா என்பதெல்லாம் நான் இங்கு விவாதிக்கவரவில்லை.

ஆனால் அரச பணத்தில் புலிகளுக்கு சேவகம் செய்த அரச அதிகாரிகள் யாவரும் இன்று தாம் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக அரசிற்கு நல்ல சேவகர்களாக வலம்வர எத்தனிப்பது புலிகளிடம் கற்றுக்கொண்ட பாடமாகும்.

எது எவ்வாறாயினும் கடந்த காலங்களில் யாழ் அரச அதிபர் எமில்டா சுகுமாரன் புலிகளின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும், இன்றைய நடைமுறைக்கு பொருத்தமான விடயங்கள் தொடர்பாகவும் மனம் திறந்து பேசியிருந்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் , சர்வதேச ஊடகங்கள் , புலம்பெயர் தமிழர் என்போருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தவர்கள் தற்போது உண்மைகளை மனம்திறந்து பேசுகின்றனர்.

மேற்படி அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களை வைத்தே புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்தது.

நிலைமைகள் மாறுக்கின்றபோது தமது பிழைப்பு கேள்விக்குறியாகும் பயத்தில் அதிர்வு எனும் இணையம் அதிர்ந்துபோயுள்ளதையும் ஊடக தர்மம் என்பனை காதால்கூட கேட்டிருந்ததில்லை என்பதை தனது செயலினூடாக காட்டியுள்ளது. புலிகளின் பாணியில் யாழ் அரச அதிபருக்கு நடத்தை சம்பந்தமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

புலிகள் அபாண்ட பழி , குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் வல்லவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். எவரும் தம்மிடம் இருக்கும் வரை அவர்கள் சிறந்த தியாகிகள், பொதுநலவாதிகள். ஆனால் அவர்கள் புலிகளின் சுயரூபத்தை அறிந்து எதிர்க்க முயன்றால், நடத்தை கெட்டவர்களாக , காட்டிக்கொடுப்பவர்களாக, துராகிகளாக மாறிவிடுவர்.

இதே பாணியில்தான் அதிர்வும் யாழ் அரச அதிபரின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதாவது „ எமில்டா சுகுமாரன் வன்னியில் இருந்தபோது தனது சாரதியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் அதற்காக புலிகளால் எச்சரிக்கப்பட்டமையாலேயே அவர் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றார்" என்ற வகையில் புலம்பெயர்ந்த தமிழருக்கு கதை சொல்ல வெளிக்கிட்டுள்ளார் அதிர்வுக் கண்ணன்.

புலிகள் தமிழ் மக்களுக்காக போராடப்புறப்பட்டவர்களா, எவன் எவளுடன் அல்லது எவள் எவனுடன் படுக்கிறான் என்று பார்த்து எச்சரிப்பதற்கு புறப்பட்டவர்களா என்பது எனது கேள்வி.

புலிகளுக்கு எவரையும் எச்சரிக்கும் அதிகாரத்தை அல்லது தண்டனை வழங்கும் அதிகாரத்தை யார் வழங்கியது.

தன்னை லண்டனில் ஊடகவியலாளர் எனச் சொல்லிக்கொள்ளும் கண்ணன் பயங்கரவாத இயக்கம் ஒன்று அரச அதிகாரியை நடத்தைக்காக எச்சரித்தது என கேள்விகேட்பதற்கு சட்டத்தில் இடமுண்டா? அவர் ஒர் அரச அதிகாரி. அரசியல்வாதியல்ல. பொதுவாழ்விற்கு வந்துள்ள அரசியல்வாதிகளிடமும், அரச அதிகாரிகளிடமும் ஊடகங்கள் அணுகுவதில் வித்தியாசம் உண்டு என்பதனை கண்ணன் எவ்வாறு அறிந்திருப்பார்.

ஓரு தனிநபருடைய அந்தரங்க விடயங்கள் தொடர்பான கொலைபேசி அழைப்பபை அவரது அனுமதியின்றி ஒலிப்பதிவு செய்த கண்ணன் எனும் விதுரன் தாமோதரன் மீது யாழ் அரச அதிபர் எமில்டா சுகுமாரன் அவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாது வழக்கு தாக்கல் செய்யவேண்டும். இவர்கள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுவதை எமில்டா சுகுமாரன் அனுமதிப்பாரா அன்றில் இவரை சட்டத்தின் முன்கொண்டுவந்து கம்பியின் பின்னால் நிப்பாட்டுவாரா? நிச்சயம் செய்தே ஆகவேண்டும்.

அதிர்வு இணையத்தளத்தினை நடாத்தும் கண்ணன் எனப்படும் விதுரன் தாமோதரன் கீழ்காணும் முகவரியில் உள்ளவர். இவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புபவர்களுக்கு அவரது விலாசம் கீழே தரப்படுகின்றது.

Mr.Viduran Thamodaran
4 barrar house
heartford, Herts
WD18 6GB
00447950301200
0044 787 331 4360


தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துப்பழகிய இவர் தமிழ் மக்களை எவ்வளவு மடையர்கள் என நினைத்திருக்கின்றார் என்பதற்கு தகுந்ததோர் தடயத்தை ஆதாரத்துடன் நான் இங்கு முன்வைக்கின்றேன்.

அதிர்வு இணையத்தில் எமில்டா சுகுமாரன் தொடர்பான செய்தியும், ஒலிப்பதிவும் ஒரே ULR இன் கீழ் தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அச்செய்தியை நான் இறுதியாக பார்கும்போது 33588 பேர் பார்வையிட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். உள்ளே சென்றால் Youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று உள்ளது. அதிலே உள்ள Youtube லோகோவில் கிளிக் செய்து Youtube பின் பிரதான பக்கத்திற்கு சென்றால் அந்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை தெளிவாக தெரியும். அந்த எண்ணிக்கை 5946 ஆகும். என்ன செய்வது தனது இணையத்தளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை தான் விரும்பிய கணக்கிற்கு கூட்டிப்போட்ட கண்ணனால் யூரியுப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிப்போட முடியாதே!






இந்த சிறியதோர் விடயத்தில்கூட புலம்பெயர் தமிழருக்கு புலிவால் இணையங்கள் விடுகின்ற புலுடாக்களை இதைவிடவேறு எந்த ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியும்??. புலிகள் 1 இராணுவத்தை கொண்டுவிட்டு 32 இராணுவத்தை கொண்டுவிட்டோம் என புலன்பெயர்ந்தவர்களுக்கு புலுடா விட்டால்போல்தான் இந்த புலுடாக்களும். இவர்கள் இன்னும் தமிழ் மக்கள் என்றால் ஒன்றும் தெரியாத மடைமைகள் என்ற எண்ணத்திலேயே உள்ளனர். அதனாலேயே இந்த சுத்துமாத்துக்களை செய்கின்றனர்.

ஆதாரங்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களில் சிவப்பால் வட்டமிட்ட இடங்களில் பாருங்கள். கட்டுரையை வாசித்தவர்கள் 33588 பேர். ஆனால் வீடியோவை பார்த்தவர்கள் 5936 பேர். இவ்விடயத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது. 33588 பேர் செய்தியில் கிளிக் செய்திருந்தாலும் அதிர்வின் பொய்புழுகுகளை மக்கள் அறிந்துள்ளால் அதன் வீடியோவை கிளிக்செய்யவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?

அத்துடன் எமில்டா சுகுமாரனின் ஆதரவு ஊடகவியலாளர்கள் சிலர் அதிர்வுக் கண்ணன் மீது ஆத்திரம் அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. அதிர்வுக் கண்ணனின் சகோதரி நோர்வேயிலே நெடியவனுக்காக வேலை செய்கின்ற சிவகணேஸ் என்பவரின் மனைவியாகும். இந்நிலையில் இவ்வூடகவியலாளர்கள் கண்ணனின் மனைவி அல்லது சகோதரியை தொடர்பு கொண்டு நீங்கள் நெடியவனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே தொடர்ந்தும் கண்ணன் இவ்வாறு ஊடக தர்மத்தை மீறுநெடியவனுக்கு வக்காலத்து வாங்குவதாக பேசப்படுகின்றது. உங்கள் கருத்து என்னவெனக் கேட்டு அவற்றையும் சில இணையத்தளங்களில் தரவேற்றம் செய்ய முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனவே சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதை விடுத்து இவ்வாறு ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்:


படங்ளில் மிகவும் தெளிவாக பாருங்கள் எமில்டா தொடர்பான செய்தி அதிகம் வாசிக்கப்பட்டவை எனும் பகுதியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. நாம் கட்டுரையை வெளியிட்ட கையுடன் சிலவேளை Youtube uploads மற்றும் குறிப்பிட்ட செய்திகள் காணாமலும் போகலாம்.

VIII

Read more...

Thursday, December 9, 2010

சாள்ஸ் அன்ரனி நீலச் சேட்டுடன் சரணடந்தாரா? பின்னர் நீலச் சேட்வழங்கப்பட்டதா? பீமன்.



தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் எனும் பெயரால் மக்களை ஏமாற்றி வந்த புலிகள் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களினதும் பலவந்தமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட இளைஞர் யுவதிகளினதும் உயிர்களை பலி கொடுத்து இறுதியில் இலங்கை அரசிடம் உயிர் பிச்சை கேட்டு மண்டாடியுள்ள சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களிடம் கோரக்காட்சிகளையும் மனதை, உருக்கக்கூடிய , அனுதாபத்தை தரக்கூடிய காட்சிகளையும் காலம்காலமாக காட்சிப்படுத்தி தமது இருப்பை தக்கவைத்துக்கொண்டிருந்த புலித்தலைமை இலங்கை அரசிடம் மண்டியிட்டுள்ளமை இறுதியாக வெளியான விடியோ காட்சி ஒன்றில் உறுதியாகியுள்ளது.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான போர் குற்றம் எனவும் தமிழ் மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற புலம்பெயர் புலிகள் முனைந்துள்ளனர். அதில் ஒரு தொகுதி வெற்றியும் கண்டுள்ளனர் எனக் கொள்ளலாம். இறுதியாக வெளியான வீடியோவில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கான புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஸ் கெஞ்சும் காட்சி தமிழ் மக்களின் ஒருபகுதியினரின் மனதில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழ் மக்கள் புலிகளின் இத்தளபதிகளின் நிலைகண்டு கண்கலங்குவது அல்லது அவர்களுக்காக அனுதாபப்படுவது நியாயமானதா என்பதே கேள்வி... இறுதிவரை போராடுவோம், சரணடையமாட்டோம், விலைபோக மாட்டோம் என்ற வீராப்பு வசனங்களுடன் தமிழ் இளைஞர் யுவதிகளின் விலைமதிப்பற்ற உயிர்களையும் , தமிழ் மக்களின் முழு பொருளாதாரத்தையும் யுத்தத்தில் அழித்த புலிகளின் தலைமை இறுதியாக மண்டியிட்டு உயிர்பிச்சை கேட்டுள்ளது.

சிறியதோர் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் யுத்தம் உக்கிரமடைந்து தோல்வி என்பது நிச்சயமாகி விட்ட நிலையிலும் , இறுதிவரை போராடுவோம் தற்கொலை தாக்குதல்களை நாடாத்துங்கள் என பாதுகாப்பான பங்கரினுள் இருந்த பிரபாகரன் உத்தரவிட்டார். தமிழ் மக்களின் முழுப்பொருளாதாரத்தையும் திரட்டி அமைக்கப்பட்ட விமானப்படை மற்றும் அதன் விமானிகளையும் 2009 பெப்ரவரி மாதம் 20 திகதி தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுப்பி வைத்தார். அவ்விமானங்கள் , மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலத்தில் பங்கெடுத்திருக்ககூடிய அந்த விமானிகளை பிரபாகரனால் காப்பாற்றியிருக்க முடிந்திருந்தது.

ஆனால் மறுபுறத்தில் தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசுடனும் மேற்குலகுடனும் பேரம்பேசலில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தான் என்பதை எஞ்சியுள்ள புலிப்பினாமிகள் மறைக்கமுனைந்தாலும் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வெகு காலங்கள் இல்லை. உண்மை என்பது முற்றிலும் காற்று நிறைக்கப்பட்டதோர் பலூண் போன்றதாகும். அதை நீரினூ அமிழ்த்திக்கொண்டிருந்தாலும் பலத்தகாற்று , மழை , அமுக்கம் போன்ற இயற்கை கோளாறுகள் தாக்குகின்றபோது கைவிடுபட்டு பந்து வெளிவரும் என்பது நியதி.

பிரபாகரனின் மகன் இறந்துவிட்டார் என்ற செய்தியை வெளியிட்ட இலங்கை இராணுவத்தின் இணையத்தளம் சற்று நேர இடைவெளியில் இவ்விரு படங்களையும் வெளியிட்டது. இங்கே இணைக்கப்பட்டுள்ள இருபடங்களையும் சற்று உற்றுநோக்குவோமானால் பிரபாகரனின் மகன் சாள்ர்ஸ் அன்ரனி உயிருடன் உள்ள படத்தில் காணப்படும் அதே நீலச் சேட்டுடன் இறந்து கிடப்பதை காணமுடிகின்றது. புலிகள் இறுதியில் சரணடைந்துள்ளனர் என்பதற்கான சிறியதோர் அத்தாட்சியாக இதை எடுத்துக்கொள்ளலாம். இவ்விடயத்தில் இதற்கு மேலாக நான் எந்த ஆய்வையும் தற்போது மேற்கொள்ள விரும்பவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளுகின்றவர்கள் இது எவ்வாறு நடத்திருக்கும் என்பதன் தங்கள் விவாதங்கள் ஊகங்களை இந்த ஆக்கத்திற்கான பின்னுட்டத்தில் பதிவு செய்யுங்கள்.




மேலும், புலிகள் சரணடைந்திருந்தபோதும் வெளியாகியுள்ள வீடியோவின் அடிப்படையில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் புலிகளுக்கானதோர் சீருடையில் சரணடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் புலிகளின் தலைவரின் மகனோ நீல சேட்டுடன் சரணடைந்திருக்கின்றார். இதன் பின்னணி யாது?

இலங்கை அரசுடன் தந்திரோபாயமாக ஒப்பதந்தம் ஒன்று செய்து மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் நில்பலகாய எனப்படும் நீலப்படையணியில் இணைந்து தமிழீழப் போராட்டத்தை (புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்) முன்னெடுப்பதற்காகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிமாவட்ட அமைப்பாளர் பதவியினை பெற்றுக்கொள்வதற்காகவும் நீலச்சேட்டுடன் சரணடைந்தார் என புலம்பெயர் புலிகள் அர்த்தம் கற்பித்தாலும் நாம் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.

பிரபாகரன் மகன் மாத்திரம் நீல உடையுடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை திருப்திப்படுத்த முனைந்திருக்கவில்லை. புலிகளின் முன்னாள் ஆயுதக்கடத்தல் மன்னன் கே.பி மற்றும் கிழக்கு தளபதி கருணா ஆகியோருமே நீல உடையில்தான் வலம்வருகின்றனர்.




புலிகள் இம்முறை ஏமாற்றப்பட்டிருக்கின்றார்களா என்ற விவாத்திற்கு அப்பால் புலிகளின் வரலாறு இதுவே என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். புலிகள் காலம்காலமாக சிங்கள அரசுடன் இணைந்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். அதன் ஒருவடிவமே தற்போது புலம்பெயர் தமிழரால் மேற்கொள்ளப்படும் போர்குற்ற பூச்சாண்டி. புலம்பெயர் தேசத்திலே உள்ள புலிகளில் 90 விழுக்காடு புலிகள் மகிந்த அரசுடன் இரகசிய ஒப்பந்தத்துடனேயே செயற்படுகின்றனர். சிங்கள மக்களிடமிருந்து மஹிந்தவிற்கு அனுதாபத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவே புலிகள் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். பிரபாகரன் சரணடைந்ததும் வன்னியில் நடைபெற்ற விடயங்களும் போர்குற்ற விசாரணைப் பூச்சாண்டி காட்டுகின்ற மேற்குலகத்திற்கு தெரியாத ஒன்றல்ல. நடந்து முடிந்த விடயங்களில் அவர்களும் பங்காளிகளே. சரணடைவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் மேற்குலகத்து முகவர்களும் புலம்பெயர் புலிகளும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக அவற்றை வெளியிட தயாராக இல்லை. எனவே புலிகளின் தலைமை தமது சூதாட்டத்தில் தோற்றுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் சூதாடுகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்.

இலங்கையின் ஜனாதிபதியை நிர்ணயிக்கபோவது சிங்கள மக்களே. தென்னிலங்கையிலே மஹிந்த சகோதரர்களின் செயற்பாடுகள் சிங்களமக்கள் மத்தியில் பலத்த எதிப்பலைகளை தோற்றுவித்து வருகின்ற நிலையில் அம்மக்களின் சிந்தனைகளை திசைதிருப்புவதற்கு புலிகள் மஹிந்தவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் புலிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

புலிகளிடமிருந்து இலங்கைக்கும் அதன் இராணுவத்தினருக்கும் அச்சுறுத்தல் உண்டு எனக் காண்பிப்பதனூடாக இனவாத சிங்கள வாக்குகளை இலகுவாக சுவிகரிக்க முடியும் என்ற மகிந்தவின் அரசியல் தந்திரத்திற்கு புலம்பெயர் தமிழர் தொடர்ந்தும் துணைபோக தயாரகவுள்ளனரா?

VIII

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com