Showing posts with label veeman. Show all posts
Showing posts with label veeman. Show all posts

Saturday, March 9, 2019

அனந்தியின் கஞ்சிக்குள் மண்ணை தூவியுள்ள அமெரிக்காவும் முழிபிதுங்கும் ஊடகங்களும்.

மன்னார் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கை நேற்றுமுன்தினம் மன்னார் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டதுடன், அம் மனிதக் கூடுகள் சுமார் 500 வருட கால பழைமை வாய்ந்தவை என்ற விடயத்தை பத்தோடு ஒன்று பதினோராவது செய்தியாக அறிவித்து விட்டு ஊடகங்கள் மௌனமாகிவிட்டன.

முள்ளிவாய்காலில் மண்கவ்வி, வெள்ளைகொடியை தூக்கிய பின்னர் ஆயுதங்களை மௌனித்துவிட்டோம் என புலிகள் இன்றும் பம்மாத்துவது போன்றே ஊடகங்களின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது. மேற்படி விடயம் வெளியாகியபோது, மன்னார் புதைகுழி விவகாரத்திற்கு அப்பால் நாட்டில் வேறு விடயங்கள் ஏதும் இல்லை என்றபோக்கில் அதன் ஒவ்வொரு நகர்வுகளையும் பிறேக்கிங் நியூஸ் போட்டுக்கொண்டிருந்த ஊடகங்கள் இன்று நவ துவாரங்களையும் அடைத்துகொண்டுள்ளன.

இலங்கையில் ஊழல் மோசடிகளும் , நீதிமறுப்பும் மேலோங்கி நிற்கின்றது. இவற்றுக்கு காரணமான அரசியல்வாதிகள் குறுந்தேசியவாத போர்வையினுள் மறைந்து நின்று தமது கடமைகளிலிருந்து விலகிச் செல்லும்போது அதற்கான அனுசரணையினை ஊடகங்கள் முண்டியடித்து மேற்கொள்கின்றன.

மன்னார் மனித எலும்புக்கூடுகள் தோண்டப்பட்ட காலப்பகுதியில் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சராகவிருந்த அனந்தி சசிதரன் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தது. குறித்த மோசடிகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பில் பின்தொடர்ந்து அறிக்கையிடவேண்டிய ஊடகங்கள் அனந்தி சசிதரனை மனித எலும்புக்கூடுகளுள் மறைத்துக் காப்பாற்றினர்.

குறித்த எலும்புக்கூடுகள் படையினரால் கொன்று புதைக்கப்பட்டவர்களினதே என்றும் இவ்வாறான சூழ்நிலையில் தனக்கு இலங்கையில் வாழ்வதற்கு அச்சமாகவுள்ளதாகவும் அனந்தி சசிதரன் புருடா விட அவற்றை அள்ளிக்கொண்டு, ஐயோ அனந்திக்கு சரியான பயமாக இருக்கின்றதாம் என ஊடகங்களும் மக்களை பயமூட்டின.

பிரபாகரன் வன்னியில் சித்திரவதைக் கூடங்களை வைத்து மனித குல விரோத செயற்பாடுகளை மேற்கொண்டபோது அங்கு எவ்வித அஞ்சமும் இன்றி வாழ்ந்த அனந்தி சசிதரனுக்கு புதிதாக தற்போது எங்கிருந்து அச்சம் வந்தது என்றும், எலும்புக்கூட்டினை கண்டு அஞ்சும் உமக்கு எதற்கு அரசியல் என்றும் கேள்விகளை ஊடகங்கள் கேட்க தயங்கின.

சிறுவர்களை படையில் பலவந்தமாக இணைப்பதற்கு அனந்தியின் கணவன் எழிலன் தலைமை தாங்கியபோது என்றோ ஒரு நாள் குறித்த அநியாயத்திற்கு தானும் தனது குழந்தைகளும் பதில்கூற வேண்டிவரும் என்ற அச்சம் அனந்திக்கு ஏற்பட்டதில்லையா என்ற கேள்வியை அனந்தியிடம் இதுவரை எந்த ஊடகமும் கேட்டதாக பதிவுகள் இல்லை.

எனவே இவ்விடயத்திலாவது அனந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை ஊடகங்கள் அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடைமையிலிருந்து விடுபடமுடியாது.

எது எவ்வாறாயினும் மண்டையோட்டினுள் ஒழிந்து நின்று அடுத்த மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிம்மாசனம் ஏறலாம் என்றிருந்த அனந்தியின் கஞ்சியினுள் மண் தூவியதாக அமைந்துள்ளது புளோடிராவிலிருந்து வந்த அறிக்கை.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என்றனர். இந்திய இராணுவம் குடிகொண்டிருந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்தியங்கிய குழுக்கள் கொன்று புதைத்திருக்கலாம் என்றனர். புலிகளின் வதை முகாம்களிலிருந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்றனர். இவ்வாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் சுயவிளம்பரத்திற்காக தெரிவித்தபோது, அந்தந்தக் காலப்பகுதியில் தமது உறவுகளை இழந்த மக்கள் அனுபவித்திருக்கக்கூடிய உளவியல் ரீதியான வேதனைகள் தொடர்பில் அரசியல்வாதிகளோ அவர்களது அடிவருடிகளான ஊடகங்களோ கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று இருதரப்பினரும் அம்மணமாகி நிற்கின்றனர்.-பீமன்


Read more...

Monday, January 28, 2019

யாழ்பாணத்தில் கற்பழிப்புக்களும் கறுப்புச் சட்டைகளும். பீமன்.

யாழ் மாவட்டத்தில் கொள்ளையர்கள் மற்றும் காமுகர்களின் கைவரிசை அதிகரித்துள்ளமை யாவரும் அறிந்தது. பகற்கொள்ளைகள் இடம்பெறுகின்றது. கொள்ளையர்கள் தமக்கு தேவையான விதத்தில் கொள்ளைகளை மேற்கொண்டுவிட்டு கணவன் முன் மனைவியை கற்பழித்துவிட்டு செல்கின்றனர். ஆனால் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனம்தெரியாத நபர்களால் 'சுட்டுக்கொலை' என்ற பாங்கிலேயே இவ்விடயங்களை இன்று எவரும் கண்டு கொள்வதில்லை.

முன்னொரு காலத்தில் புலிகள் பட்டப்பகலில் நபர்களை சுட்டுக்கொன்றுவிட்டு செல்கின்றபோது, சுட்டுச்சென்றவனின் பரம்பரை தொடர்பான விபரம்கூட மக்களுக்கு தெரிந்திருந்தது, ஆனாலும் ஊடகங்கள் 'இனம் தெரியாத நபர்களால் வயோதிபர் சுட்டுக்கொலை' என முந்தியடித்து செய்திகளை வெளியிட்டு நீதிக்கு தடையாக நின்றனர். கொலையாளியின் பக்கத்துவீட்டுக்காரனும், நமிட்டு சிரிப்புடன் இனம்தெரியாத நபர் என்பதை ஏற்றுக்கொள்வார். அவ்வாறு ஏற்றுக்கொள்வதன் ஊடாக அவர்கள் சமூகத்தின் தியாகிகளாக கணிக்கப்படுவார்கள்.

அநியாயம் புரிந்தவனை எவராவது காட்டிக்கொடுத்தால் அவர்கள் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். ஏன் துரோகிகள், ஏன் காட்டிக்கொடுத்தார்கள், யாரை காட்டிக்கொடுத்தார்கள், எதற்காக காட்டிக்கொடுத்தார்கள், காட்டிக்கொடுத்தது சரியா என்ற கேள்வியெல்லாம் எழுப்பப்படாது. காட்டிக்கொடுத்தால் துரோகிகள். இவ்வாறுதான் கொலைகளுக்கு அன்று பச்சைக் கொடி காட்டப்பட்டது. இன்று கொள்ளைகளுக்கும் கற்பழிப்புக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இவ்வாறே பச்சைக்கொடி காட்டப்படுகின்றது.

யாழ்பாணத்தில் நன்கு அறியப்பட்ட கொள்ளையர்களை, காமூகர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை, தெருச்சண்டியர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதில் பொலிஸார் இரு பெரிய சவால்களை எதிர்கொள்ளுகின்றனர். ஒன்று தகவல்கள் பொதுமக்களிடமிருந்து கிடைப்பதில்லை. இரண்டாவது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கென்று ஒரு கறுப்புச் சட்டை கூட்டமே இருக்கின்றது.

அண்மையில் இளவாலைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு கொள்ளைக்குச் சென்ற இருவர் வீட்டிலிருந்த பணம் நகைகளை அரிதட்டினால் அரித்தெடுத்துவிட்டு, தாயை அறையொன்றில் பூட்டிவைத்துவிட்டு 17 வயது மகளை தங்களுக்கு வேண்டியவாறு இருவரும் வன்புனர்வு கொண்டுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யுவதியை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மிரண்டு நின்றனர். சாதாரண மனிதர்களால் இவ்வாறு நடந்து கொள்ள முடியாது என்று முழிகளைப் பிதுக்கும் அளவுக்கு அகோரம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கொள்ளையர்களுக்கான வேவுக்காரன் தனது வேவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடைப்படையில் பொலிஸாரினால் மடக்கிப்பிடிபட்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தெல்லிப்பளையைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் (28 வயது) மற்றும் ஏழாலையைச் சேர்ந்த இராஜகோபல் கிருஷ்ணகுமார் (30 வயது) என்ற இரு காமுகர்களே மேற்படி செயலை மேற்கொண்டனர் என்ற விடயம் அம்பலமாகியதுடன் மேலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

ரூபன் மற்றும் கிருஷ்ணகுமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, இவர்களை இயக்கும் பிரதான நபர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. அத்துடன் அந்த நபர் குறிப்பிட்ட நேரத்தில் கிளிநொச்சி பிரதேசத்திற்கு சென்றுள்ள காரணத்தினால் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் என்பன கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவிடம் வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கோள்ளைகோஷ்டி தலைவனின் மனைவியிடம் பொலிஸார் நகைக்களை மீட்க சென்றபோது, தனது வீட்டில் சீசீரிவி கமராவில் பொலிஸார் உள்நுழைவதை அவதானித்துக்கொண்டிருந்த கொள்ளைக்கோஷ்டி தலைவி பொலிஸாரை உட்கார வைத்து சட்டப்புத்தகங்கள் சிலவற்றை தூக்கி மேசையில் போட்டு கைது செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை முதலில் படிக்குமாறு வேண்டியுள்ளார்.

17 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு கொள்ளையடித்து வரும் நகைகளை உங்கள் வீட்டில் வைத்திருக்க உங்களுக்குள்ள உரிமையாது என்று பொலிஸார் கேட்டபோது, அதை பற்றி உங்களிடம் எனது சட்டத்தரணி சர்மி பேசுவார் என்று பதிலளித்துள்ளார் கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவி.

எது எவ்வாறாயினும் வீட்டை சோதனையிட்டு நகைகளை மீட்ட பொலிஸார் அவளை கைதுசெய்து பொலிசுக்கு கொண்டு சென்றபோது பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய சர்மி அவளை பிணையில் எடுத்துச் சென்றுள்ளாள். அத்துடன் பிணையில் செல்லும்போது சிறைக்கூடுகளுக்கு அருகாமையில் சென்ற கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவி கொள்ளையர்களுக்கு 'நீங்கள் பயமில்லாமல் இருங்கள் சர்மி உங்களை வெளியே கொண்டுவருவா' என்று சொல்லிச் சென்றதாக அறியமுடிகின்றது.

யாழ்பாணத்தில் இடம்பெறும் மேற்படி கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களின் பின்னணியில் கறுப்பு சட்டை போட்ட கயவர்களே உள்ளனர் என்பது பரவலாக பேசப்படுகின்றது. இவ்வாறானவர்கள் கைது செய்யப்படுகின்றபோது, அதே நிமிடத்தில் ஆஜராகும் கறுப்புச் சட்டை காரர்கள் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாணியில் விசாரணைகளை மேற்கொள்ள தடையாக நிற்கின்றனர் என்பதுடன் கொள்ளையர்களுக்கு உத்வேகத்தையும் கொடுக்கின்றனர்.

இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சமூக விரோதிகள் தொடர்பான 90 வீதமான வழக்குகள் யாழ்பாணத்தில் சிறிகாந்தாவினால் கையாளப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியற்காவலர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழ் இயக்கம் ஒன்றின் முதல்வர்தான் இந்த சிறிகாந்தா.

சட்டத்தை காக்கவேண்டியர்கள் இவ்வாறு சமூகவிரோதிகளை சட்டத்திலுள்ள ஓட்டைகளினூடாக வெளியே கொண்டுவர கங்கணம்கட்டி நிற்கின்றபோது சமூகவிரோத செயற்பாடுகள் என்றுமே ஒழியப்போவதில்லை.

மேற்படி யுவதியை கற்பழித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில கைது செய்யப்பட்டுள்ள காமுகர்களின் படங்கள் இதோ, இதை பகிர்ந்து இவர்களது சகாக்களை இனம்காண உதவுங்கள். அல்லது களவு கொடுத்த மக்கள் இப்படத்தினை கண்டால் தங்களுடைய வீடுகளில் கொள்ளையடித்தது இவர்கள்தான் என்று அடையாளம் கண்டால் பொலிஸ் நிலையத்தில் முறையிடமுடியும்.



Read more...

Friday, January 11, 2019

ஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள் பல்வேறு கோணத்தில் எதிர்த்தன. இவ் எதிர்ப்புக்கு பின்னணியில் இருக்கும் இரண்டு பிரதான காரணகர்த்தாக்களாவன

ஒன்று குறுகிய அரசியல் லாபம்.

இரண்டாவது அப்பதவிக்காக போட்டியிட்டோர் அது கிடைக்காமையால் ஒழிந்திருந்து மேற்கொள்ளும் சூழ்ச்சிகள்.

மேற்படி இரு குழுவினரின் இணைச் சதியாக இன்று ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஹர்த்தாலின் வெற்றி தோல்வி சம்மந்தமாக பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மக்கள் அடைந்தது யாதென்பது பேசப்படவேண்டியதாகும்.

தொழுகையை கைவிட்ட இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களை பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை மிக முக்கியமானதாகும். அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை ஒரு பூரண விடுமுறை நாளாகவுள்ளது. இலங்கைபோன்ற இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற சில நாடுகளில் இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைக்கேற்றவாறு வெள்ளிக்கிழமையை வடிவமைத்துக் கொண்டுள்ளனர்.

அவர்கள், வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலும் 11 மணியுடன் தமது வியாபார ஸ்தலங்களை பூட்டி மிகுதி அரை நாளையும் தொழுகைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்வர். அவ்வாறு 11 மணியின் பின்னர் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் பிற அலுவலகங்களை பூட்டாத முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் மீது ஒரு சமூக வெறுப்பு ஏற்படும். இது இஸ்லாத்திற்கு அல்லது அல்லாகுத்தாலாவுக்கு செய்கின்ற பிரதிக்கடனாகக்கூட கணிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இன்று ஹிஸ்புல்லாவிற்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு 'அல்லாகுத்தாலாவா அன்றில் ஹிஸ்புல்லாவா' என்ற நிலைக்கு முஸ்லிம் வர்த்தகர்களை தள்ளிவிட்டிருந்தது.

கிழக்கின் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அல்லாகுத்தாலாவிலும் மேலானவர், அவருக்கு எதிரான ஹர்த்தாலை அல்லாகுத்தாலாவை புறந்தள்ளி வைத்து நாம் காப்போம் என்ற நிலைக்கு கிழக்கின் வர்த்தகர்களை கொண்டு சென்றுள்ளது. அவர்கள் கடைகளை அடைத்து தொழுகைக்கு செல்லாது ஹிஸ்புல்லாவிற்கு எதிரான ஹர்த்தாலை தோற்கடித்துள்ளனர். எனவே அல்லாகுத்தாலா கொடுக்கின்ற பாரிய கொடைகளிலும் பார்க்க கிழக்கின் வர்த்தகர்களுக்கு ஹிஸ்புல்லா கொடுக்கவேண்டும். கொடுப்பார் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோரது எதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கலாம். காரணம் என்னவென்றால் இனவாத அரசியல் என்பது திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் மீள்சுழற்றி மாதிரி (றீசைக்கிளிங்)



தொழிலைக் கைவிட்ட தமிழர்கள்.

இன்று ஹிஸ்புல்லாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அறிவிப்பு விடுத்தவர்கள், குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள அன்றாடம் உழைத்து உண்ணும் (கூலித் தொழிலாளிகள் முதல் வியாபாரிகள் வரை) பட்டாளி வர்க்கத்தின் அடுப்பில் பூனை படுக்க விட்டுள்ளனர். இந்த மக்களின் இன்றைய நாள் வருமானம் பூச்சியம். இன்றைய சாப்பாட்டுக்கு அவர்கள் கடனாளிகளாயிருப்பர். ஆனால் அந்த கடனை அடைப்பதற்கு எவரும் எந்த வழியையும் காட்டப்போவதில்லை என்பது மாத்திரம் வரலாற்றில் நாம் கற்றுக்கொண்ட பாடம்.



ஹிஸ்புல்லாவும் எதிர்ப்பவர்களும்.

ஹிஸ்புல்லா ஒரு அப்பழுக்கற்ற அரசியல் விபச்சாரி என்பது மாத்திரமல்ல சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாஷையில் சொல்வதானால் ஊழலின் மொத்த வடிவம்.

இன்று ஹிஸ்புல்லா மீதான எதிர்ப்பானது, அவர் ஒரு முஸ்லிம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இடம்பெறுகின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.

கடந்த காலங்களில் எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் நின்றபோதும், மன்சூர் மற்றும் அஹமட் போன்ற பழைய அரசியல்வாதிகளை தமிழ் மக்களே பாராளுமன்றுக்கு அனுப்பினர். அவர்களும் அவ்வாறே அந்த மக்களுக்கு நியாயமாக நடந்துள்ளனர். அவர்கள் எந்தக்கட்டத்திலும், தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக அந்த மக்களின் பிரதிநிதி என்ற ஸ்தானத்திலிருந்து விலகிச் சென்றதில்லை.

ஆனால் பல தடவைகளில் கணிசமானளவு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அல்லது புலிகளின் உதவியுடன் ஒருசில பகுதி தமிழ் மக்களை வாக்களிக்காமல் பண்ணி பாராளுமன்று சென்ற பின்னர் அதே பலத்தை வைத்து கோயிலை இடித்துக் கொண்டினேன், சுடலையை தரை மட்டமாக்கினேன் என்று மன்சூரோ அல்லது அஹமட் போன்றோரோ என்றும் கூக்குரல் இட்டதில்லை.

எனவே இங்கே தமிழ் மக்கள் ஹிஸ்புல்லாவின் நியமனம் தொடர்பாக அச்சம் கொள்கின்றார்கள் என்றால் அது காரணமற்றது என்று யாராலும் எழுந்தமானமாக சொல்லிவிடமுடியாது.

இருந்தபோதும் ஹிஸ்புல்லாவின் நியமனத்திற்கு எதிராக ஊழையிடுகின்ற கருணா மற்றும் யோகேஸ்வரன் போன்றோர் உண்மையில் ஹிஸ்புல்லாவின் நியமனம் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற உணர்வில்தான் மக்களை தூண்டுகின்றார்களா? என்பதுதான் கேள்வி.

கருணா இன்று தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி, தன்னை ஓர் தமிழ் பக்தன் எனக் காண்பிக்க முற்படுகின்றார், முஸ்லிம்களுக்கு எதிராக கருத்திடுவதன் ஊடாக தனது வாக்கு வங்கியை நிரப்ப முடியும் என எண்ணும் கருணாவின் முஸ்லிம்களுடனான உறவு என்பது மக்கள் அறியவேண்டியதாகும்.

கருணாவின் மிகச் சிறந்த நண்பர்கள் என பத்துப்பேர் கொண்ட பட்டியலை எடுத்தீர்களானால் அதன் முதல் 9 பேரும் முஸ்லிம்களாக இருப்பார்கள். கருணாவின் உறவினர்களில் கருணா மிகவும் நேசிக்கின்ற உறவினர்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், அவர்களிலும் முதல் 9 பேரும் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பது நான் அறிந்த விடயம். கருணாவின் சகோதரி ஒருவர் முஸ்லிம் நபர் ஒருவரை திருணம் செய்து இன்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார். அந்த முஸ்லிம் குடும்பம் கருணாவினாலும் அவரது இதர குடும்ப அங்கத்தவர்களாலும் மிகவும் நேசிக்கப்படுகின்றது. இவ்வாறு கருணா அச்சமூகத்துடன் உறவு கொண்டாடிக்கொண்டுதான் முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களை ஏவி விடுகின்றார். இது கண்டனத்திற்குரியவிடயமாகும்.

எனது கற்பனைக்கெட்டியவரை ஹிஸ்புல்லா பதவியேற்கப்போகின்றார் என்பதை அறிந்தவுடன் அவரை வாழ்த்திய முதலாவது நபராக கருணாவே இருந்திருப்பார். கருணா பேசுகின்ற விடயங்களை இவ்வாறு ''நீ என்னை பேசு'' என ஹிஸ்புல்லாவே தடம் போட்டுக்கொடுத்திருப்பார். அதன் பிரதிபலிப்பை நாம் இன்று காண்கின்றோம். தேர்தலில் ஹிஸ்புல்லாவை தோற்கடித்த முஸ்லிம் சமூகம் ஏன் இன்று ஜூம்மாவுக்கு செல்லாமல் ஹிஸ்புல்லாவிற்காக வரிந்து கட்டி நிற்கின்றது. கருணா மற்றும் யோகேஸ்வரன் போன்ற அரசியல் அனாதைகளின் இனவாதம் முஸ்லிம்கள் மத்தியில் சரிந்து கிடந்த ஹிஸ்புல்லாவின் செல்வாக்கினை நிமிர்த்தி நிறுத்தியுள்ளது.

ஆனால் முஸ்லிம் மக்கள் உணரவேண்டிய விடயம் ஒன்று உள்ளது. ஹிஸ்புல்லா ஒன்றும் முஸ்லிம் மக்களின் சேவகனோ அன்றில் அவர் முஸ்லிம்களுக்காகவே தமிழ் மக்களை நிந்திக்கின்றார் என்பதெல்லாம் வெறும் பொய். இதே ஹிஸ்புல்லா புலிகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டவர். புலிகள் மோட்டார் சைக்கிளில் வந்து முஸ்லிம்களை சுட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, புலிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தவர்.

ஹிஸ்புல்லா மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்த விவகாரம் மாட்டியபோது அவர் ஆடிய நாடகம் அருவருக்கத்தக்கது. அவ்விடயம் தென்பகுதியில் சூடுபிடித்தபோது, தான் குண்டு துளைக்காத வண்டியில் வருவேன் நீங்கள் எனது வண்டிக்கு சுடவேண்டும் என நாடகம் போட்டவர்தான் ஹிஸ்புல்லா. அவ்வாறே புலிகளும் ஹிஸ்புல்லாவின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். சந்திரிகா மேலதிக பாதுகாப்புக்கு உத்தரவிட்டார். அத்துடன் மோட்டார் சைக்கிள் தொடர்பான விசாரணை கோப்பு தூக்கி வீசப்பட்டது.

எனவே ''அரசியல் காவாலிகளின் இறுதிப்புகலிடம் தேசப்பற்று'' என்ற ஜவகர்லால் நேரு அவர்களின் கூற்றை மக்கள் ஏற்று எமது அரசியல் காவாலிகள் தொடர்பில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.




Read more...

Friday, December 21, 2018

ஐந்தறிவுள்ள நாய்க்கும் புலிகள் மீது காழ்ப்புணர்ச்சியா? பீமன்

கடந்த மாதம் மட்டக்களப்பில் இரு பொலிஸாரில் ஒருவர் அரைநித்திரையிலும் ஒருவர் கடமையிலும் இருந்தபோது கோழைத்தனமாக கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்தின்பேரில் இருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை உறுப்பினனான அஜந்தன் என்பவனின் மனைவி ஓரிரு தினங்களுக்கு முன்னர் தனது கணவனை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணா விரதமொன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விபச்சாரிகள் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் பேசுவதாக கொலையை அரசியலாக்கியிருந்தமையையும் அவதானிக்க கூடியதாகவிருந்தது. அதேநேரம் இரு அப்பாவி இளைஞர்கள் கண்மூடி திறப்பதற்குள் எவ்வித காரணங்களும் இன்றி தீய நோக்குடன் கொல்லப்பட்டமையின் பின்னணி, அது இலங்கையின் எதிர்காலத்திற்கு உருவாக்ககூடிய அச்சுறுத்தல் தொடர்பாக எவ்வித கரிசனையும் அற்றோர் "கைது செய்யப்பட்டுள்ளோர் வெறும் அப்பாவிகள்" என்ற பொறுப்புணர்வற்ர கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதையும் காண முடிகின்றது.

இக்கருத்துக்களின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளோர் போதிய ஆதாரம் இன்றித்தான் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பதை அறியும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனருடன் பேசியதிலிருந்து குறித்த நபர்கள் எழுந்தமானமாக கைது செய்யப்படவில்லை என்ற ஒரே ஒரு தகவலை மாத்திரம் தற்போதைக்கு வெளியிடமுடியும். கொலை இடம்பெற்ற சுற்றுவட்டத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற ஒரு பையும் ஜக்கட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பையையும் ஜக்கட்டையும் பின்தொடர்ந்து சென்ற மோப்பநாயின் அடையாளம் காட்டலுடனேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை சம்பவம் இடம்பெற்ற சுற்றுவட்டத்திலுள்ளவர்களும் அஜந்தனின் கிராமத்தவர்களும் நன்கறிவர். ஆனாலும், மோப்ப நாயின் அடையாளம் காட்டுதலில்தான் அவன் கைது செய்யப்பட்டான் என்பதை நன்கறிந்திருந்த ஊடகங்களோ அன்றில் சமூகவலைத்தளத்தினரோ இந்த நியாயமான கைதின் பின்னணியை வெளிப்படுத்தாமை அவர்களது நயவஞ்சகத்தனத்தை காண்பிக்கின்றது.

இவ்விரு கொலைகளும் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பதனை நாட்டு மக்கள் உணரவேண்டும். வெளிப்படையாக சொல்வதானால்: இனவாதத்தையும் யுத்தத்தையும் வைத்து சுகபோகமும் ராஜயோகமும் அனுபவிக்க விரும்பும் தரப்புக்களின் கூட்டுச்சதியே இக்கொலையாகும். இன்னும் தெளிவாக சொல்வதானால் தெற்கிலே ஒரு தரப்பிற்கு மீண்டும் இலங்கையிலே புலிப்படை அல்லது புலிசார் வன்செயல் தேவைப்படுகின்றது மறுபுறத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கும் புலம்பெயர் புலி எச்சங்களுக்கும் தாங்கள் செயற்பாட்டில் உள்ளோம் என புலம்பெயர் தேசமெங்கும் தமது பைகளை நிரப்ப இலங்கையில் யுத்தம் தேவைப்படுகின்றது.

மேற்குறித்த இரு தரப்பினரதும் தேவைகளை நிறைவேற்ற முன்னாள் புலிகள் கூலிப்படையாக செயற்படுகின்றனர். இக்கூலிப்படைகள் இரண்டு அப்பாவி உயிர்களை பலியெடுத்திருக்கின்றார்கள். அந்த அப்பாவி உயிர்கள் தொடர்பாக அடிமனதிலிருந்து எவரும் கவலை வெளியிடுவதாக இல்லை மாறாக கொலைஞர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

முள்ளிவாய்காலில் பிரபாகரன் மண்டியிட்டதன் பின்னர் புலிகளின் ஒரு தொகுதியினர் எவ்வாறு இலங்கை இராணுவத்தினருக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் கூலிப்படையாக செயற்படுகின்றார்கள் என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஊதியம் பெறும் புலிகள்

புனர்வாழ்வு முகாம்களிலிருந்தபோது தமது தேவைகளுக்காக பயன்படக்கூடியவர்கள் என படையினர் இனம்கண்ட சிலரை இன்றும் குறித்த அரசியல்தரப்பு பயன்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்க கடந்த காலங்களில் பகிரங்க மேடைகளில் தெரிவித்த விடயங்கள் பிரதானமானவை. சம்பிக்க ரணவக்க பகிரங்க மேடை ஒன்றில் பேசும்போது இவ்வாறு கூறினார்:

" புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதிகளான ராம் , நகுலன் போன்றோருக்கு கோத்தபாய ராஜபக்ச பாதுபாப்பு அமைச்சின் நிதியத்திலிருந்து மாதந்தம் ஊதியம் வழங்கினார். கிழக்கில் எமது குழந்தை தேரர்களை கொன்ற கொலைகாரர்களுக்கு நாம் பணம் வழங்குவது எவ்வாறு நியாமாகும் என்பதை நான் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டேன், அப்போது மஹிந்த கூறினார், அவர்கள் எமக்கு கிழக்கில் தேர்தல்காலங்களில் உதவுவார்கள் அதற்காக நாம் அவர்களை பயன்படுத்தவுள்ளோம் என்றார். அவ்வாறே வடக்கிலும் முன்னாள் புலிகளுக்கு பாதுகாப்பு நிதியிலிருந்து நிதி வழங்குகின்றனர். மறுபுறத்தில் சிவில் பாதுகாப்பு பிரிவு என்ற ஒன்றை உருவாக்கி பாதுகாப்பு அமைச்சினூடாக அவர்களுக்கு தொழில்களை வழங்கி சம்பளம் வழங்குகின்றனர். இது தொடர்பாகவும் மஹிந்தவுடன் பேசியபோது, அவர்கள் வடக்கில் தேர்தல்வரும்போது எமக்கு வேலை செய்வார்கள் என்றார் மஹிந்த"

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் போலிப்புலிகள் அமைப்பு

புனர்வாழ்விலிருந்து வெளியேறிய புலி உறுப்பினர்களை கொண்டு புலனாய்வுப் பிரிவினர் ஒரு போலிப் புலிகள் அமைப்பை உருவாக்கினர் என்றும் அவ்வாறானதோர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொடர்ந்தும் புலிக்காச்சல் இருக்கின்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதாகும் என்றும் களனிப்பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச-

அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக புலிகள் மீண்டும் சக்திபெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட உள்ளநாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ளவர்களை புலனாய்வுப் பிரிவினர் இனம்கண்டு கொண்டார்கள். அவ்வாறே புலம்பெயர் தேசத்தலிருந்து கொண்டு இங்கு புலிகளமைப்பை உருவாக்க நினைக்கின்றவர்களையும் இனம் கண்டு கொண்டார்கள்.

அத்துடன் எமது அதிகாரிகள் மேற்படி போலிப்புலிகள் அமைப்பை வைத்து கண்டறிந்தவற்றை பாதுகாப்பு சபைக்கு அறிக்கையிட்டனர். தூரதிஷ்டவசமாக பாதுகாப்பு சபையிலிருந்த யாரோ ஒருவர் ஊடாக மேற்படி போலிப்புலிகள் அமைப்பை இயக்கிய எமது புலனாய்வுத்துறை அதிகாரிகளின் விபரங்கள் பத்திரிகைக்காரர்களது கைகளில் கிடைக்கப்பெற்று அவை பிரசுரமாகியுள்ளதன் ஊடாக அந்த அதிகாரிகளின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச கவலை தெரிவித்திருந்தார்.

சம்பிக்க மற்றும் வீரவன்ச ஆகியோரது வெளிப்படுத்தல்களிலிருந்து புலிகள் எவ்வாறான கூலிப்படைகள் என்பதையும் அவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக எந்த குற்றச்செயல்களையும் புரிந்துவிடுவார்கள் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். புலிகள் அமைப்பு அதன் வரலாறு முழுவதும் கூலிப்படையாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. யாழ்பாணத்தில் அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து கொழும்பில் லலித் அத்துலத்முதலி இந்தியாவில் ரஜீவ் காந்தி என புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கொலையையும் கூலிக்கு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பது நிருபணமகியுள்ளபோதும் தமிழ் மக்கள் அதை நம்ப மறுப்பது பேராபத்தானது. புலிகள் பேசுகின்ற விடுதலைப்போராட்டம் தமிழ் தேசியம், தமிழ் உணர்வு என்பன வெறும் போர்வையாகும். தமிழ் மக்கள் இந்த உண்மைகளை ஏற்க மறுக்கும் வரை புலிகளும் புலிசார் பினாமிகளும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டே இருப்பர்.

புலம் பெயர் புலிகளுக்கான கூலிப்படை

புலம்பெயர் புலிகளின் கட்டமைப்பில் 2002 ல் தான் வெடிப்பு விழுந்தது. ஆனாலும் புலிகளின் தலைமையகம் வன்னியில் பலமாக இருந்ததனால் அவர்கள் வெடிப்புக்களை பிளவு நிலைக்கு செல்லாமல் இரும்புக்கரம்கொண்டு அடக்கி காத்தார்கள். 2009 மே க்கு பின்னர் உள்ளிருந்த ஒவ்வொரு வெடிப்பும் நிரந்தரமானது பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். அந்த மோதல் ஒன்றும் கொள்கை ரீதியானது அல்ல ஒவ்வொரு தரப்பிடமுமிருந்த மக்கள் சொத்தை எவ்வாறு தங்கள் பைகளுக்குள் அமுக்குவது என்பதில்தான்.

மக்களின் சொத்தை முழுசாக விழுங்கி உழைக்காமல் இத்தனை சொத்துசேர்த்தவர்களுக்கு அந்த ருசி விடவில்லை. தொடர்ந்தும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் எவ்வாறு பிடுங்கலாம் என்ற வியூகங்களைத்தான் வகுத்தார்கள். அதற்காக போர்குற்ற விசாரணை, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல்கொடுத்தல், நாட்டிலுள்ள முன்னாள் புலிகளுக்கு உதவுதல் போன்ற போலித் திட்டங்களை வகுத்தார்கள். இத்திட்டங்களைக் காட்டி இலங்கைலுள்ள முன்னாள் புலிகளை வளைத்துப்போட்டார்கள்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு புலிகள் இன்னும் உள்ளார்கள் எனக் காண்பித்து அவர்களிடமிருந்து தொடர்ந்தும் பணம் பறிப்பதற்குமான திட்டத்துடனே இன்றும் செயற்பட்டு வருகின்றனர். இதன் பிரகாரமே இலங்கையிலுள்ள முன்னாள் புலிகளுக்கு பணத்தினை கொடுத்து பல்வேறுபட்ட தீய செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவித்தல், அசாதாரண நிலைமைகளை ஆங்காங்கே உருவாக்கல், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் அமைப்புக்களை உருவாக்கி செயற்படுதல். அதனூடாக புலிகளின் செயற்பாடுகள் இலங்கையில் உள்ளதாக புலம்பெயர் தமிழரின் காதில் பூ சூடுதல் போன்றனவே அந்த செயற்பாடுகள்.

புலம்பெயர் தேசத்தில் புலனாய்வு முகமூடிகள்.

இது இலங்கையில் செயற்பட்ட ஆழ ஊடுருவும் படையணியிலும் ஆபத்தான கட்டமைப்பு. யார் ? எங்கு ? எந்த வேஷத்திலிருக்கின்றார்கள் என்பது அவர் அவர்களுக்கு மாத்திரமே தெரியும். 2009 மே யில் சரணடைந்தவர்கள்தான் இன்று அவ்வாறு புலம்பெயர் தேசமெங்கும் ஆழ ஊடுருவியிருக்கின்றார்கள்.

இது எவ்வாறு சாத்தியம் என்று யாரும் கேட்கலாம். முக்கிய புள்ளிகள் பலர் 2009 க்கு பின்னர் வெளிநாடுகளில் மிதந்தனர். எவ்வாறு இவர்கள் வெளியே வந்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் இராணுத்தினருக்கு ஐப்பது லட்சத்திலிருந்து 1 கோடி ரூபா வரை பணம் கொடுத்து வந்தார்களாம் என்று சொல்லப்படுகின்றது. இங்குதான் அந்த சமாச்சாரமே இருக்கின்றது, இலங்கை இராணுவக் கட்டமைப்பு 2009 இல் அவ்வளவு ஓட்டைகள் உள்ள கட்டமைப்பாக இருக்கவில்லை. சிலவேளைகளில் தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை அவ்வாறிருந்திருக்கலாம். ஆனால் 2009 மே யில் புலனாய்வுத்துறை அவ்வாறானதோர் ஓட்டையை உருவாக்கியது. பணம் படைத்தவர்கள் ஒருசிலரை பணம்வாங்கிக்கொண்டு விடுவதுபோல் பாசாங்கு செய்து விடுவித்ததுடன் அதே ஓட்டையினூடு அதேவேஷத்துடன் தங்களது முகமூடிகளையும் அவ்வாறே விட்டுவிட்டது. அத்துடன் புனர்வாழ்வின் பின்னரும் விசுவாசிகள் சிலரை அனுப்பி தனது முகமூடிப்படையணியை புலம்பெயர் தேசத்தில் பலப்படுத்தி கொண்டுள்ளது.

தற்போது இவர்கள் பல்வேறு பணிகளை செய்கின்றனர். புலம்பெயர் தேசத்திலுள்ள புலிசெயற்பாட்டாளர்களை இனம்காணுதல், நாட்டிலுள்ள புலிச்செயற்பாட்டுக்கு தயாரானவர்களை இனம் காணுதல், அவர்களை கொண்டு தமது ஏஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றுதல் என்பனவே அவர்களது பிரதான பணி. (மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டைக்கொலையும் அவ்வாறானதாக இருக்கலாம்)

இவ்வாறானதோர் சூழ்நிலையில் புலம்பெயர் தேசத்திலிருந்து வருகின்ற கொந்தராத்துக்களை நிறைவேற்றுபவர்களின் நிலைமை கைத்தீன் போட்டு வளர்க்கப்படுகின்ற சேவலின் கதையாக முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.

கையாலாகா காவல்துறை.

2009 ல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 2015 தை மாதம் எட்டாம் திகதி வரை பயங்கரவாதிகளின் மீள்எழுகை அன்றில் ஒருங்கிணைவு தொடர்பாக எந்த கேள்வியும் இருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். ஆனாலும் 2015 தை மாதம் எட்டாம் திகதிக்கு பின்னர் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வோருக்கான தளத்தை வழங்கவில்லை என்று வாதிடமுடியாது. உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம் புலிகளின் அநியாயங்களை நியாயப்படுத்துவதற்கும், பேச்சு சுதந்திரம் மீண்டும் புலிகள் ஒன்றுகூடுவதற்கு பகிரங்க அழைப்பு விடுப்பதற்கும் , எழுத்துச் சுதந்திரம் புலிகளின் புகழ் பாடுவதற்கும் , ஒன்றுகூடும் சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூறுவதற்கும், கொண்டாடுவதற்கும் பயன்பட்டது.

மேற்படி செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை கொடுக்கும் என்றும் இச்செயற்பாடுகளுக்கு எதிராக நிச்சயமாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாயவேண்டும் என்றும் காவல்துறையினரை கேட்டபோது அவர்கள் அச்சட்டத்தை பயன்படுத்த முடியாதவர்களாக அரசியல்வாதிகளின் ஆணைக்கு கட்டுப்பட்டு நின்றனர். மைத்திரபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்கான கைமாறாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு கட்டுப்போடப்பட்டுள்ளது.

கிட்லரின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டிய தம்பதியினருக்கு சிறைத்தண்டனை.


உலகிலே பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகள் பொதுவான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை.

அண்மையில் பிரித்தானியாவில் தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லரின் பெயரை வைத்த தம்பதியினரில் மனைவிக்கு 5 ஆண்டுகளும் கணவனுக்கு 6 ஆண்டுகளும் சிறைவிதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்த கிட்லரை மேற்குல நாடுகள் இன்றும் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாகவே பார்கின்றனர். அவர் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் உருவாவது அல்லது அவரை நினைவு கூறுவது கிட்லரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக அமையும் எனக் கருதும் அவ்வரசுகள் கிட்லர் சார்பு அமைப்புக்கள் யாவற்றையும் தடை செய்து மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகின்றது. அந்த வரிசையில் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லர் என்ற பெயரை சூட்டியமைக்காகவே தம்பதியினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

இவ்வாறான நடைமுறையை செயற்படுத்துவதற்கு இலங்கை பொலிஸாருக்கு போதியளவு சட்டத்தில் அனுமதி உள்ளபோதும், அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளின் அனுமதியை நாடி நிற்பார்களாயின் பயங்கரவாதத்தை ஒருபோதும் துடைத்தெறிய முடியாது.

கொலை மிரட்டல்

கனடாவிலுள்ள வானொலி ஒன்றிற்கு தகவல் வழங்கிய அஜந்தனின் மனைவி ஒருசில நாட்களில் தனது கணவன் விடுதலை செய்யப்படாவிட்டால், பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்கொலை என்பது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் ஒருவர் தற்கொலை செய்து இறந்துவிட்டால் அத்துடன் அந்த கதை முடிகின்றது. உயிர் தப்பினால் அபராதம் செலுத்தவேண்டும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அதற்கு அப்பாலும் இங்குள்ள பாரதூரமான விடயம் யாதெனில் அவர் நான்கு சிறார்களை கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றார். எனவே உயிராபத்துக்குள்ளாகி நிற்கும் சிறார்களை முதலில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு தாயிடமிருந்து பிரித்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன், தாய் இலங்கை பிரஜையாக நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டிருக்கின்றார் என்பதையும் அவர் அதற்கு கட்டுப்பட மறுத்தால் அதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதன் ஊடாகவே நற்பிரஜைகள் உள்ள நாடு ஒன்றை எம்மால் காண முடியும்.


Read more...

Thursday, December 13, 2018

அரச பணிகளுக்கு ஆட்சேர்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் மீது பாரபட்சம். சம்பந்தனின் பித்தலாட்டம் ஆரம்பம். பீமன்.

கிழக்கு மாகாண சபைக்கு முகாமைத்துவ உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான போட்டிப்பரீட்சையும் இடம்பெற்றுள்ளது. பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், வெட்டுப்புள்ளிகள் இனரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்தகவல்களின் அடிப்படையில் சிங்களவர்களுக்கு 105 , முஸ்லிம்களுக்கு 120 , தமிழர்களுக்கு 130 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்றைய அரசியல் ஸ்திரத்தன்மையின்மையில் தள்ளாடும் வயதிலும் தளராது ரணில் விக்கிரமசிங்கேவிற்காக களமாடிக்கொண்டிருக்கும் திருமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிங்கமாக சீறிப்பாய்ந்து கிழக்கு மாகாண ஆழுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இவ்விடயத்தில் பாதக விளைவுகள் ஏதும் ஏற்படுமுன்னர் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆழுனரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐயா விடயம் தொடர்பாக காலோசிதமாக செயற்பட்டமை பாராட்டுதற்குரியது. எதிர்காலத்திலும் இவ்வாறு செயற்படவேண்டும். (அதாவது வருகின்ற தேர்தல் முடிந்த பின்னும்.) ஆனாலும் இக்கடிதத்தின் உள்நோக்கம் தொடர்பாக ஒரு சந்தேகமும் உள்ளது. அச்சந்தேகம் யாதெனின் திடீரென வேலையற்ற தமிழர்கள் மீது ஐயாவுக்கு அக்கறை ஏன் வந்தது என்பதுதான் அந்த சந்தேகம். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உடனடியாக அதன் மொழிபெயர்ப்பு தமிழ் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆக இது எதிர்வரும் தேர்தலுக்கான அதிரடி ஆட்டமா என்பதுதான் எனது நேரடிக்கேள்வி.

இனரீதியான பாகுபாட்டுக்கு அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கியிருப்பார்களாயின் அது முற்றுமுழுதான சட்டமீறலாகும். பாரபட்சத்திற்கு அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்குவது என்பது அவர்கள் அரச சேவையில் இணைந்து கொள்ளும்போது மேற்கொண்ட 'எச்சந்தர்ப்பத்திலும் பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டேன'; என்ற உறுதி மொழியை மீறுவதாகும். அத்துடன் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இன ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயற்பாடுகளின் கீழ் பாரிய தண்டனைக்குரியவையாகவும் அமையலாம். எனவே இவ்விடயத்தில் உண்மையான அக்கறை இருக்குமாக இருந்தால், ஆழுனருக்கு கடிதம் எழுதியதுடன் நிறுத்திக்கொள்ளாமல், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டைனை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் இவ்வாறான இன ஒடுக்குமுறைக்கு அல்லது பாரபட்சத்திற்கு எந்த அரச அதிகாரியும் துணியாத ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவேண்டும்.

பாராளுமன்றில் தங்களது வர்க்கத்தைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவின் உரிமை மீறப்பட்டுள்ளதாக உணர்ந்தபோது, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் , பிரதமர் நியமனம், அமைச்சரவை நியமனம் என்பவற்றை வரலாற்றில் என்றும் நடந்திராத வகையில் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த சம்பந்தன் ஐயாவால் முடியுமென்றால், தனக்கு வாக்களித்த மக்களின் உரிமை மீறப்படுகின்றபோதும் நீதிமன்று செல்வதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொள்வதற்கும் முடியுமாக இருக்கவேண்டும்.

இரா சம்பந்தன் அவர்கள் ஆழுனருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதி.

10 டிசம்பர் 2018


கௌரவ.ரோஹித்த போகொல்லாகம
ஆளுநர்
கிழக்கு ஆளுநர்
ஆளுநர் செயலகம்
உவர்மலை
திருகோணமலை

கௌரவ ஆளுனர் அவர்கட்கு,

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக
மேற்குறித்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்துள்ள தகவல்களை பாதக விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர்,நீங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

1. கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14ம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.

2. விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்ட போது,இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை. எல்லா விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

3. ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியிலான அடிப்படையில் பின்வருமாறு அமையும் என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிங்களவர் 105
முஸ்லிம்கள் 120
தமிழர்கள் 130

4. ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு,இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும். எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும்

5. அண்மைக்காலங்களில் கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகமாகும். 30 வருடங்கள் நிலைத்த ஆயுத போராட்டமானது,வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது, இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது. இந்த பின்னணியில்,3ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும் இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும் நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை
எதிர்க்கட்சி தலைவர் இலங்கை பாராளுமன்றம்

Read more...

Thursday, November 22, 2018

செஞ்சோலையில் வழர்ந்த பெண் கணவனற்று ஓட்டை குடுசையில்! பாய் விரிக்கக் கேட்ட சிறிதரனின் சகா வேழமாலிகிதன்! பீமன்.

இது கார்த்திகை மாதம் பொதுவாக தமிழர்களில் பெரும்பாலானோரின் போலி வெளிப்படும் மாதம். இந்த மாதத்தில் ஒரு உண்மையும் வெளிப்பட்டுள்ளது. அந்த உண்மையாதெனில், கார்த்திகை மாதத்தில் யாருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்களோ, அந்த அவலங்களின அடையாளம் ஒன்றை விபச்சாரியாக்கி மரணத்தின் விளிம்புக்கு கொண்டு சென்று விட்டிருக்கின்றான் சிறிதரனின் சகாவான வேழமாலிகிதன் எனப்படும் கரைச்சி பிரதேச சபை தவிசாளரான தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி பிரபலம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட கோணேஸ்வரியின் கதை மிக சோகமானது. சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த அவள் தனது சகோதரர்களுடன் செஞ்சோலையில் சேர்க்கப்படுகின்றாள். அந்த சகோதரர்களில் மூவர் பின்னாட்களில் புலிகள் இயக்கத்தில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு மரணிக்கின்றனர். ஒருவர் மட்டக்களப்பில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னாட்களில் புலிகளியக்தத்தில் இணைந்துகொண்ட கோணேஸ்வரி அவ்வியக்கத்தையே சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கோணேஸ்வரியின் கணவனும் இணைகின்றார். புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான கோணேஸ்வரி சகலரையும் பறிகொடுத்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் புதியதோர் சவாலான வாழ்கையை தொடங்குகின்றாள்.

கிளிநொச்சியில் திருநகர் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இடிந்து நொருங்கியுள்ள கட்டிடங்களுள் தகரங்களால் மறைப்பொன்றை உருவாக்கி கோணேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்கை எனும் போராட்டத்தை தனிமையில் ஆரம்பிக்கின்றாள். அவள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகள் சாதாரணமானவை அல்ல. குழந்தைகளை வழர்க்க வழியற்ற அவள் உதவிகேட்டு கிளிநொச்சி பா.உ சிறிதரனிடம் ஏதாவது வாழ்வாதார உதவி கிடைக்குமா என்று சென்றபோது அவளுக்கு நடந்துள்ள அவலத்தை கோணேஸ்வரின் குரலிலே நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.



வாழ்வாதாரம் கேட்டுச் சென்ற கோணேஸ்வரியின் நிலைமையை அவதானித்துவர சிறிதரனால் வேழமாலிகிதன் அனுப்பப்பட்டுள்ளான். அங்கு சென்ற அவன் ஓரிருநாட்களின் பின்னர் அவளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நடுச்சாமத்தில் அவளிடம் செல்ல முற்பட்டதன் நோக்கத்தை அறிந்த கோணேஸ்வரி பயத்தின் நிமிர்த்தம் தனது பாதுகாப்பிற்காக அட்டம்பக்கத்திலுள்ளவர்களுக்கு விடயத்தை கூறியதால் தற்போது பழிவாங்கப்படுகின்றாள்.

கோணேஸ்வரியை குடியிருக்கும் காணியிலிருந்து வெளியேற்றுவதற்கு வேழமாலிகிதன் தமிழ் வாக்காளர்களால் வழங்கப்பட்டுள்ள கரைச்சி தவிசாளர் பதவியை எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதை இக்கடிதத்தில் கண்டு கொள்ள முடியும்.




கோணேஸ்வரி குடியிருக்கும் காணிக்கு பின்னால் கதையொன்று உண்டு. கோணேஸ்வரியின் சகோதரனால் கொள்வனவு செய்யப்பட்ட அக்காணிக்கான சட்டபூர்வமான ஆவணம் கோணேஸ்வரியிடம் இல்லை. அதற்கான காரணம், புலிகள் போலி அரசாங்கத்தை நிகழ்த்திய காலத்தில் அவர்கள் ஒரு காணிப்பதிவேட்டை காத்து வந்தனர். ஆனால் அரச காணிப்பதிவேட்டில் அது பதியப்படவில்லை. எனவே கொள்வனவு செய்யப்பட்ட காணி சட்டப்படியாக பெயர் மாற்றம் பெறவில்லை. எதுவாக இருந்தாலும் காணியை 28 லட்சத்திற்கு விற்ற அழகரட்ணம் குடும்பத்தினர் தங்களது மனச்சாட்டியின் பிரகாரம் கோணேஸ்வரிக்கு எவ்வித பிரச்சினையும் இதுவரை கொடுக்கவில்லை.

ஆனால், தனது காம முகத்தை அம்பலப்படுத்திய கோணேஸ்வரியை பழிவாங்க முற்பட்டுள்ள வேழமாலிகிதன், காணியை விற்றுள்ளவர்களுக்கு காணிப்பதிவிலுள்ள குறைபாட்டையும் சட்டரீதியாக காணியை அவர்கள் மீண்டும் விற்கலாம் என்ற விடயத்தையும் எடுத்தியம்பியுள்ளதுடன், அக்காணியை தானே ஒரு கோடி ரூபாவிற்கு விற்றுத்தருவதாகவும் அவாகளுக்கு ஆசை காட்டியுள்ள அதேநேரம், காடையர்களை கொண்டு கோணேஸ்வரியினை அக்காணியிலிருந்து விரட்டியடிக்கவும் முயன்றுள்ளான். நள்ளிரவில் அவளது குடிசையினுள் நுழைந்த காடையர்கள் அவளது குடிசையினையும் பாத்திரங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் அவர்களின் குரல்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்கின்ற தமிழரசுக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு செய்கின்ற சேவை இதுதான? நான்கு சகோதரர்களையும், கணவனையும் யுத்தத்தில் இழந்து தனது குழந்தைகளை பாதுகாக்க வழியில்லாது உதவி கேட்டு வாசற்படிக்கு வந்தவளை பாயை விரிக்க கேட்கின்றனர். சிறிதரனாலும் அவனது சகாக்களாலும் மேற்கொள்ளப்படும் முதலாவது அடாவடித்தனம் இதுவல்ல. வன்னி மக்களுக்கு இது பரீட்சயப்பட்ட ஒன்றாகிப்போய்விட்டது. சிறிதரனின் ஊடக பலம் யாவற்றையும் மறைத்துவருகின்றது. அதற்கும் அப்பால் அந்த ஊடகபலத்தை கொண்டு எந்த அநியாயத்தையும் நியாயப்படுத்த முடியும் என்ற மமதையில் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சிறிதரனின் ஊடக பலத்திற்கு அஞ்சி கைகட்டி மௌனிகளாக நிற்கின்றனர்.

ஆனால் கோணேஸ்வரி விடயத்தில் தமிழரசுக் கட்சியினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அன்றில் இத்தனைகால தவறுகளுக்கும் ஒரே நேரத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்! அதற்காக செய்தற்கரிய அத்தனை காரியங்களையும் செய்வதற்கு மக்கள் திரள்வார்கள் என்பதனை தமிழரசுக் கட்சியினருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

Read more...

Tuesday, October 30, 2018

ஏலத்தில் விடப்பட்டுள்ள தமிழ் - முஸ்லிம் அரசியல் பெருந்தலைகள். பீமன்

இலங்கையில் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அனைவரும் கூறிக்கொள்கின்றனர். இது எதிர்பாராத மாற்றமா அன்றில் எதிர்பார்த்த மாற்றமா? மக்களை பொறுத்தவரையிலும் இன்றைய காலகட்டத்திலும் இது எதிர்பார்த்த மாற்றமாகவே கருதப்படுகின்றது.

கடந்த மூன்றரை வருடங்களாக ஆட்சியை கைப்பற்றிருந்த நல்லாட்சி என்று பெயர் சூடப்பட்டிருந்த அரசாங்கத்தால் மக்களுக்கு எவ்வித நலனும் இடம்பெறவில்லை என்ற கருத்து உருவாகி, இவ்வரசாங்கம் தொலைந்து போக வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் வந்தபோதே மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

புதிய பிரதமர் நியமனம் தொடர்பாக பல்வேறுபட்ட விளக்கங்கள் கூறப்படுகின்றது. நியமனம் சட்டவிரோதமானதும், அரசியல்யாப்பினை மீறுவதுமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாராளுமன்றின் விசுவாசத்தை பெற்றுக்கொள்ளக்கூடியவர் என ஜனாதிபதி கருதுகின்ற ஒருவரை பிரதம மந்திரியாக நியமிக்கலாம் என அரசியல் யாப்பு கூறுகின்றது.

விசுவாசத்தை பெற்றுக்கொள்ளுகின்றவர் யார் என்ற கேள்வியை கேட்டால் „ பெரும்பாண்மையை கொண்டிருக்கின்றவர்" என்று எடுத்துக்கொள்கின்றார்கள் அல்லது வாதிடுகின்றார்கள். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுகின்றவர் பெரும்பாண்மையை பாராளுமன்றில் நிரூபிக்க வேண்டும் என்று அரசியல் யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் „பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை" என்று பதில் வருகின்றது. ஆகவே மஹிந்த ராஜபக்ச பெரும்பாண்மை இன்றி பிரதமராக நீடிக்கலாம் என்பது அவர் தரப்பு சட்ட வல்லுனர்களின் விளக்கமாகவுள்ளது. ஆனால் பெரும்பாண்மை இன்றி எவ்வாறு பாராளுமன்றில் நீடிக்க முடியும்? நம்பிக்கையில்லை பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டால் பெரும்பாண்மை இல்லாத பிரதமரின் நிலை என்னவாகும்?

இந்த நிலையில் பாராளுமன்றை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, இலங்கை தமிழரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை சபாநாயகரை கேட்டுள்ளது. பாராளுமன்றை 16 ம் திகதி வரை பிற்போட்டுள்ளார் ஜனாதிபதி. ஜனாதிபதியின் மேற்படி உத்தரவை மேவி சபாநாயகர் பாராளுமன்றை கூட்டினால் என்ன நடக்கும் என்பதுதான் யாவரும் கேட்கின்ற கேள்வி.

பிரதமர் யார் என்பது, தொடர்பான தீர்ப்பு சிலநேரம் உச்ச நீதிமன்றினால் தீர்மானிக்கப்படலாம். மேற்படி விவாதங்களின் பிரகாரம் மஹிந்தவே பிரதமர் என்பது தீர்ப்பாகவும் அமையலாம். ஆனால் அடுத்த கட்டப்பிரச்சினை யாதெனில், வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம். வரவு செலவுத் திட்டம் நிறைவேற 113 வாக்குகள் வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 ஆசனங்களுடன் இன்று அரசுடன் இணைந்து கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களுடன் சேர்த்து 101 அத்துடன் ஈபிடிபி யும் சேர்ந்தால் 102 ஆசனங்கள் மாத்திரமே மைத்திரி-மஹிந்த தரப்பினரிடம் உள்ளது.

இந்நிலையில்தான் தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைகளை மொத்தமாகவோ அன்றில் சில்லறையாகவோ கொள்வனவு செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளார் பொதுஜன பெருமுனவின் இயக்குனர் என்று அறியப்படுகின்ற பசில் ராஜபக்ச. ஆட்களை வாங்குவதில் பசிலுக்கு நிகர் இலங்கையில் எவரும் இருக்கமுடியாது என்பதற்கு கடந்த 48 மணித்தியாலயங்களில் வடிவேல் சுரேஸ் அடிந்த அந்தர் பல்டிகள் தெளிவுபடுத்துகின்றது.

மஹிந்த ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்தவுடன் அவரை சனிக்கிழமை சந்தித்த வடிவேல் சுரேஸ், மஹிந்த ராஜபச்சவிற்கு தனது ஆதரவு என்றார். மறுநாள் அலரி மாளிகைக்கு சென்ற வடிவேல் சுரேஸ், ரணில் சேர் உங்களை நான் விட்டுட்டு போவேனா? நான் அங்கே சென்றது அவர் முதல் எனக்கு செய்த உதவிகளின் நிமிர்த்தம் ஓர் வாழ்த்துச் சொல்லத்தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை சேர். நீங்கள் அப்பிடி ஒன்று கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் தானே என்ர தங்கச் சேர் என்று தலையில் நெட்டியும் முறித்துக்கொண்டு வெளியே வந்து அலரிமாளிகை வாசலில் மேற்சொன்னவற்றை அப்படியே ஊடகங்களுக்கும் கூறியதுடன் நின்றுவிடவில்லை தான் தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டினார்.

ஆனாலும் பஸில் ராஜபக்ச, சலித்து விடவில்லை. ஆத்திரப்படவில்லை. தொலைபேசி அழைப்பெடுத்து பிளெடி ராஸ்கல் என்று பேசவும் இல்லை. சாதுரியமாக அழைத்து ஜனாதிபதி மாளிகையில் விட்டு அமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்யவைத்துள்ளார். இதுதான் பசிலின் முளைச்சலவை செய்யும் சக்தி.

பஸிலின் சூத்திரத்தை நன்கு அறிந்தவர்கள்தான் நமது முஸ்லிம் அமைச்சர்கள். மாட்டோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு விலையும் சலுகைகளும் அதிகரிக்கும் என்பது அவர்களுக்கு தெரியும், இந்தப்பேரம்பேசல் அவர்களுக்கு ஒன்று புதிது கிடையாது. அந்த அடிப்படையில்தான் தற்போது அவர்கள் ஐ.தே.க யுடன் நிற்பதாக பாசாங்கு செய்கின்றார்கள். நான் அடித்துக்கூறுகின்றேன். அது இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு மாத்திரமே.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரவுப் ஹக்கீம் சொல்லியிருந்த ஒருவிடயத்தை கவனிக்க வேண்டும். ஹக்கீம் எதிர்கட்சியில் உட்காருவதற்கும் தயங்கமாட்டாராம் என்பது அந்த செய்தி. உண்மையில் அவர் எதிர்கட்சியில் உட்காருவேன் என்பதல்ல அதன் அர்த்தம். தற்போது எதிர்கட்சியில் இருக்கின்றவர்கள் விரைவில் ஆழும் கட்சியில் உட்கார்வார்கள் அப்போது அவர்களுடன் நானும் உட்காருவேன் என்பதுதான் அதன் பொருளாக அமைந்திருந்தது.

தலைகளை மாற்றி ஆட்சியை மாற்றும் பேரம்பேசல்கள் இடம்பெற்றபோது, ரவி கருணாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் 23 பேர் ராஜபக்ச பக்கம் தாவவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே ஹக்கீம் மேற்படி விடுகை விட்டிருந்தார். ஆனாலும் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினருடனான பேரம்பேசலில் எட்டமுடியாமல்போன சில விடயங்களுக்கு அப்பால் ரவியை ஏற்றுக்கொள்வதில் பொதுஜன பெருமுன வினரிடம் எதிர்ப்பு காணப்படுகின்றது.

அந்த எதிர்ப்பு ஒன்றும் ரவியுடன் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது. எதிர்வரும் தேர்தலில், பொதுஜன பெருமுன வினரின் தேர்தல் பிரச்சாரத்தின் பேசுபொருளாக அமையப்போவது, பிணைமுறிக் கொள்ளையேயாகும். எனவே குறித்த பகல் கொள்ளையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் பதவி பறிக்கப்பட்ட ரவி கருணாநாயக்கவை தம்பக்கம் வைத்துக்கொண்டு எவ்வாறு அதற்கு எதிராக பேசமுடியும் என்ற குழப்பம் உள்ளே காணப்படுகின்றது. இந்நிலையிலேயே ரவியை விடுத்து ஏனையவர்களை ஒவ்வொருவராக எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் பஸில் ராஜபக்ச.

ரவி கருணாநாயக்க தலைமையில் 23 பேர் கட்சி தாவுகின்றார்கள் என்பதை அறிந்தவுடன், நீங்கள் அழைக்காவிட்டாலும் நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம் என்று மஹிந்தவிற்கு கூறியிருந்த ஹக்கீம் மற்றும் ரிசார்ட் தரப்பினர் தற்போது தங்களைது தலைகளை ஏலத்தில் விட்டுள்ளனர். தாவாமல் தடுப்பதற்கு ரணிலும், தாவுவதற்கு பஸிலும் தற்போது ஏலத்தில் நிற்கின்றனர்.

முஸ்லிம் மக்களை பொறுத்தவரை தமது தலைவர்கள் தேவையான தரப்பிடம் பணத்தை வாங்கி தங்கள் மடியை நிரப்பிக்கொள்ளலாம். அம்மக்கள் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தங்கள் தலைவர்கள் எதிர்கட்சியிலிருந்து, கூக்குரலிடுவதைக்கேட்டு தமிழரைப்போல் கைதட்டுவதற்கும் விசிலடிப்பதற்கும் அவர்கள் முட்டாள்கள் அல்ல. நேரடியாக கூறின், தமது தலைவர்கள் ஆட்சியில் பங்கெடுக்கவேண்டும் அதனூடாக பிரதேச அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளுக்கு வருடாந்தம் அரச வேலைவாய்ப்பு மற்றும் அரச சலுகைகள் யாவற்றையும் பெற்றுத்தரவேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்பார்ப்பு.

ஹிக்கடுவ , திகண , அம்பாறை வன்செயல்கள் யாவும் ரணில் விக்கிரமசிங்கவினால் மஹிந்தவையும் முஸ்லிம் மக்களையும் பிரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி எனக்கூறும் முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் அரசில் தமது தலைவர்கள் உடனடியாக பங்கெடுக்கவேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

இந்தப்படிப்பினையிலிருந்து தமிழ் மக்கள் தமது தலைமையையும் தாம் வழிநடாத்த தவறிவிட்டோம், தமது வழிக்கு எதிர்காலத்தில் தலைமையை கொண்டுவரவேண்டும் என்று உணரத்தொடங்கியுள்ளனர் என்பதை சமூக வலைத்தள பதிவுகள் எடுத்துக்கூறுகின்றது.

உணர்சிச்சி மாயையில் சிக்கியுள்ளவர்களையும் அவர்களது விதண்டாவாதங்களையும் கண்டுகொள்ளாது, முஸ்லிம் மக்கள் எவ்வாறு தமது தலைமையை வழிநாடாத்துகின்றார்களோ அவ்வாறு, இன்று தமிழ் மக்களும் தமது தலைமை அரசில் பங்கெடுக்கவேண்டும் அதற்கான பேரம் பேசலில் இறங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

ஏன் பட்ஜெட்டிற்கு ஆதரவளிப்பதாயின், அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுகின்ற பாரிய குற்றமிழைத்துள்ளோரை விடுவிப்பதற்கு இணங்கவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்குமாறு புலிகள் தரப்புக்கூட த.தே.கூட்டமைப்பினருக்கு அழுத்தம் பிரயோகித்திருந்ததை குறிப்பிடலாம்.

ஆனால் இக்கருத்துடன் நேரடியாக மோதாத தமிழ் இளைஞர்கள் வர இருக்கின்ற அரசுடன், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு என்கின்ற சாத்தியமில்லாத நிபந்தனைகளை விடுத்து நடைமுறைச் சாத்தியமான நிபந்தனைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணையவேண்டும் என்று வேண்டுகின்றனர்.

ஆனால் அரசு கவிழ்ந்தபோது நமிட்டு சிரிப்புடன் ஊடகங்கள் முன்தோன்றிய சுமந்திரன் நாங்கள், மஹிந்த தரப்பிற்கு நிபந்தனை விதித்துள்ளோம் : வரையப்பட்டுள்ள அரசியல் யாப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, ஐ.நா வின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழிகளை தந்தால் பரிசீலிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு தெரிவித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது தமிழ் மக்களிடமிருந்து வரும் அழுத்தத்திற்கான பதிலாக, தாம் இவ்வாறு பேசியிருக்கின்றோம் என்ற செய்தி. இரண்டாவது, அது நிறைவேறாத பட்சத்தில், ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கம் எமது தேவைகளை பூர்த்தி செய்ய தயாராகவிருந்தபோது, ஜனநாயக விரோதமாக மஹிந்த தரப்பு ஆட்சியை கைப்பற்றி ரணிலை முடக்கிவிட்டார்கள், சர்வதேசம் கொதித்துப்போயுள்ளது எனவே தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆணையை ரணில் விக்கிரமசிங்கே யிற்கு வழங்கவேண்டும் என பழைய கள்ளை புதிய பிளாவில் தமிழருக்கு பருக்கி போதையேற்றலாம் என்பது.

சுமந்திரன் தரப்பு மேற்படி நிபந்தனைகளை வைத்தற்கான காரணமும் மிக தெளிவானது. மஹிந்த தரப்பினர் ஐ.நா வின் பிரேணையை முழுமையாக எதிர்கின்றனர். அப்பிரேரணையை நிறைவேற்ற அல்ல பரிசீலிக்கவே தாங்கள் தயாரில்லை என்று அறிவித்துள்ள நிலையில் சாந்தியமில்லா நிபந்தனையை விதித்து வெளியேறிக்கொள்ள முடியும் என்பதாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசொன்றே இலங்கையில் இருக்கவேண்டும் என்று மேற்குலகம் விரும்புகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்குலகின் ஏவலாளிகள். எனவே சூத்திரத்தை சிறுபிள்ளையாலும் விளங்கிக்கொள்ளமுடியும்.

எனவே தமிழ் தலைமையின் தலைகள் உள்ளுர் ஏலத்தில் இல்லை என்பது தெளிவு. ஆனாலும் ஓரிருவரை தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறாமலும் இல்லை. எது எவ்வாறாயினும் மேற்குலகினால் வழங்கப்படவுள்ள தொகையை பிரித்துக்கொள்வதில் பங்காளிக்கட்சிகள் நேரடியாக போர்க்கொடி தூக்கியுள்ளது.

அக்கட்சிகளின் தலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் தங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை அவர்களே முடிவுகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இம்முறை நாங்கள் அதற்கு அனுமதிக்கமாட்டோம் முக்கிய முடிவு எடுக்கின்றபோது நாமும் அதில் சம அந்தஸ்த்துடன் பங்கு கொள்ளவேண்டும் என்ற செய்தியை சொல்லியுள்ளனர்.

அதாவது நீங்கள் தொகையை வாங்க செல்லும்போது, நாங்களும் உங்களுடன் வரவேண்டும் எவ்வளவு வாங்குகின்றீர்கள் என்பதை நாமும் அறிந்தால்தான் அதை சரியாக பங்கிட்டுக்கொள்ள முடியும் என்ற அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவ்வச்சுறுத்தலுக்கு உறுதுணையாக கடந்த தேர்தலின்போது இந்திய றோ விடம் அள்ளி எடுத்துவிட்டு தமக்கு கிள்ளி கொடுத்த கதையை ஊடகங்களுக்கும் கசிய விட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இருக்கின்றார். மஹிந்த சம்பந்தனிடம் வேண்டிய ஒரே ஒரு வேண்டுகோள் „வாக்கெடுப்பை பகிஸ்கரியுங்கள் தேவையானதை தருகின்றோம்" என்பதாகும் . மஹிந்த ராஜபக்சவை சரியாக புரிந்து கொண்ட ஒரே ஒரு இராஜதந்திரி எரிக் சொல்கைம். சொல்கைம் புலிகள் மீதான விமர்சனங்களை விரித்து வைத்தபோது, பிரபாகரன் அரசியலில் ஒரு சூனியம், எதுவுமே விளங்காத ஒரு மூர்க்கன். அவர் மஹிந்த ராஜபக்சவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நிலைப்பதற்காக எதையும் வழங்ககூடியவர். அவரிடமிருந்து நிறையவே பெற்றிருக்கலாம். ஆனால் பிரபாகரனால் அது முடியாமல் போய்விட்டது. அவருக்கு அரசியல் சூனியம் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் எனது கணிப்பும் அவ்வாறே. மஹிந்தவுடன் சாத்தியமான விடயங்களை தமிழ் தரப்பு பேசுமாக இருந்தால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். காரணம் மஹிந்த தமிழர் தரப்புக்கு எதாவது செய்தால் அதைக்கண்டு சிங்கள மக்கள் மிரளவும் மாட்டார்கள், சிங்களவர்களை எவ்வாறு கையாள்வது என்பது மஹிந்தவிற்கு நன்கு தெரியும்.

எனவே மஹிந்தவை கையாளும் விடயத்தை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பே மேற்கொள்ளவேண்டும். காரணம் அரசுடன் இணைந்துள்ள உதிரிகளால் பேரம் பேச முடியாது. அவர்கள் தங்களது சொந்த நலனுக்காகவே இத்தனை காலமும் இணைந்து இருந்துள்ளார்கள். எனவே அவர்கள் வேண்டினாலும் அது எவ்வளவு தூரம் கணக்கிலெடுக்கப்படும் என்பது சிந்திக்கவேண்டிய விடயமே.

Read more...

Sunday, October 7, 2018

போதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியின் (தற்)கொலை விவகாரம். போதாநாயகிக்கான நீதி „கல்லில் நார் உரிப்பதாகத்தான்' அமையப்போகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் காமுகன் ஒருவனால் குதறப்பட்ட பச்சிளம் பாலகியான வைஷ்ணவியின் கொலையை திசைதிருப்பி, அவருக்கான நீதிக்கு இன்றுவரை தடைக்கல்லாக நின்றுவருகின்ற செத்தவீட்டு இணையம், போதாநாயகியின் கொலையாளியையும் நீதி மற்றும் மக்கள் தீர்ப்பிலிருந்து தப்ப வைக்க தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

„திருமலையில் கர்பிணி விரிவுரையாளர் கொலையில் அதிரடி திருப்பம்!! வெளியான மற்றுமொரு தகவல்'



எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது ஜேவிபி இணையம்.




போதாநாயகி மூன்று மாத கற்பிணியாகையால் தலைசுற்றில் கடற்கரைக்குச் சென்று „இடிவித்தானுள்' வீழ்ந்து தவறுதலாக இறந்து விட்டார் என மக்கள் மனங்களை மாற்றி விசாரணையை திசை திருப்ப முடியும் என்ற நயவஞ்சகத்திட்டத்தில் இறங்கியுள்ளது ஜேவிபி நியுஸ். அந்த இழிசெயலுக்காக ஊர் பெயர் இல்லாத ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் என்று „வேலிக்கு ஓணான் சாட்சி' என்ற கதை சொல்ல முனைகின்றது செத்தவீட்டு இணையம்.

ஆனால் இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட பதிவாளராக கடமையாற்றுகின்ற திரு. கனகசபாபதி வாசுதேவா அவர்கள் உடற்கூராய்வு பரிசோதனை தொடர்பான விளக்கமொன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை (Psychological Autopsy)

எம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

சாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of dead) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of dead) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermined) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது.

உதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .

அவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்
1. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்
2. இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்
3. இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.


மனிதநேயம் கொண்டோர் இவ்வாறு போதாநாயகிக்கு நீதிவேண்டும் எனக் கோருகின்றபோது, ஜேவிபி நியூஸ் கொலை விசாரணையையும் கொலைக்கு நீதிகோருவோரையும் திசை திருப்ப முனைவதற்கான காரணம் யாது என்று சற்று வினவுவோமானால், விடை நிலாவைப் பார்ப்பது போன்று தெட்டத்தெளிவானது. ஜேவிபி இணையத்தளக்காரனின் தம்பி சிறிதரன். பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அவர் தற்போது வட மாகாண முதல்வராக போட்டியிடுவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். போதாநாயகியின் கொலையாளி என அவரது குடும்பம் மற்றும் சுற்றத்தாரால் குற்றஞ்சுமத்தப்படுபவரான செந்தூரன் சிறிதரனின் சகா. அவர் தேர்தல்காலங்களில் சிறிதரனுக்காக நேரடியாக பிரச்சார வேலைகளில் இறங்குபவர். இப்போது வாசகர்களுக்கு ஜேவிபி நியூஸ் இன் நோக்கம் விளங்கியிருக்கவேண்டும்.



போதாவின் (தற்)கொலை தொடர்பில் அவரது தாயாரால் நேரடியாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள போதாவின் கணவரான செந்தூரன், தனது மகளை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரை ஒரு முழுநாளும் அறையொன்றில் போட்டு பூட்டி வைத்திருந்தாகவும் , அவருடைய பணத்தை சூறையாடியதாகவும் ஊடகங்கள் முன்னிலையில் குற்றஞ்சாட்டினார் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் நீதித்துறை இவனை கண்டு கொண்டதாக இதுவரை இல்லை.

தாயாரின் கூற்றுப்படி செந்தூரன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். குறைந்தது விரிவுரையாளர் போதாநாயகி இறந்ததிலிருந்து இருவாரங்களுக்கு அவரது உள்-வெளி அழைப்புக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும். கடந்த இருவாரங்களில் போதாவுடன் செந்தூரனுக்கிருந்த தொடர்பு மற்றும் அவன் அவரை துன்புறுத்தியுள்ளானா என்பதை உரையாடல்களை ஆய்வுசெய்வதன் ஊடாக கண்டறியப்படவேண்டும்.

மேலும் செந்தூரன் 19, 20 ம் திகதிகளில் தனது அலுவலகத்தில் விடுமுறை பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறாயின் அவன் எங்கிருந்தான். திருமலைக்கு வந்திருந்தானா என்பதை அவனது தொலைபேசி இருந்திருக்கக்கூடிய கோபுரங்களை வைத்து கண்டறியவேண்டும். சிலவேளைகளில் இக்கொலைக்கு அவன் திட்டமிட்டிருந்தானாக இருந்திருந்தால் தனது தொலைபேசியை தன்னுடன் கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் வேறு ஒரு தொலைபேசியை நிச்சயமாக பயன்படுத்தியிருக்கவேண்டும். அது எந்த தொலைபேசி என்பதை போதாவின் இறுதி இருநாட்கள் அழைப்பு விபரங்களினூடாக கண்டு பிடிக்க முடியும்.

அவ்வாறு கண்டு பிடிக்கின்றபோது, போதாநாயகியை யார் கடலுக்கு அழைத்துச்சென்றது என்றும் அவர் எவ்வாறு ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது தெளிவாகலாம். மிகவும் சனநடமாட்டம் உள்ள ஓர் கடற்கரையில் எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் விடயம் நடந்தேறியிருக்கின்றது என்றால் அது ஒரு விபத்தாக நடைபெற்றதாக தீர்ப்பாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்பது மாத்திரம் தெளிவு.

அதேநேரம் கொலையில் சந்தேகம் உள்ளதாக செந்தூரன் தெரிவித்தது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும், திசைதிருப்பும் நோக்கத்திற்காக அவ்வாறான யுக்தியை பயன்படுத்தியிருந்தால் அதற்காகவும் அவன் தண்டிக்கப்படவேண்டும்.

மறுபுறத்தில் மேற்குறித்த கயவன் தன்னை ஓர் உணர்சிக்கவிஞனாகவும் தமிழ் தேசியவாதியாகவும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் குற்றவியல்கோவை , அரசியல் யாப்பு மற்றும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இனவாதத்தை தூண்டுகின்ற கருத்துக்களுக்கு எதிரான சட்டம் என்பவற்றை மீறும்வகையில் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்துள்ளான்.

இவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அமைச்சுப்பதவியை பறிகொடுத்த விஜயகலா தெரிவித்த கருத்துக்களிலும் பாரதூரமானவை. அவை பிரிவினையை தூண்டுபவை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவை, இனங்களிடையேயான சகவாழ்வுக்கு குந்தகமானவை. ஆனால் செந்தூரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. அவ்வாறு பார்க்கின்றபோது, இவ்வாறான போலித்தேசியவாதிகளை இலங்கை அரசே இயக்கி வருகின்றது என்பதும் அவர்களின் பாதுகாவலர்களாக பொலிஸ்துறை செயற்படுகின்றது என்பதும் தெளிவாகின்றது.

செந்தூரன் மீது நடவடிக்கை வேண்டுமென அவரது குடும்பத்தினர் வேண்டினர். பல்கலைக்கழக சமூகம் தெருவில் இறங்கி நின்று வலியுறுத்தியது. இவ்விடத்தில் இலங்கை அரசின் அரவணைப்பு அல்லாத சாதாரண நபர் ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை சற்று கற்பனை பண்ணி பார்கின்றபோது, இலங்கையில் தேசியம் பேசுகின்றவர்களுக்கு இலங்கைப் பாதுகாப்புத்துறை பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதுடன் தமிழ் தேசியத்தின் யோக்கியமும் புரிகின்றது.

தமிழ் தேசியபோர்வையால் தமிழ் ஊடகங்கள் குற்றவாளிகளை மறைக்க முற்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக திரு இளஞ்செழியன் உள்ளார் என்றும் குற்றவாளிகள் இலகுவாக அவரிடம் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதும் போதாநாயகிக்காக நீதி கோருவோரது நம்பிக்கை. ஆனால் இலங்கை காவல்துறை குற்றவாளி சார்பாக செயல்படுமாக இருந்தால் இக்குற்றத்தை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலைக்கு கொண்டு செல்லுமா என்பதும் கேள்வியே.

Read more...

Friday, August 31, 2018

யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்தார் விக்கி.

பளை பிரதேசத்தில் யூலிப்பவர் மற்றும் வீற்றாப்பவர் எனும் நிறுவனங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய சாகவென அறியப்படுகின்ற ஐங்கரநேசன் மீது மோசடிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நீதியரசர் விக்கினேசுவரன் ஓடியொழித்துள்ளமை நேற்று வடமாகாண சபை கூடியபோது நிருபணமாகியுள்ளது.

குறித்த இரு காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும் 2 வருடங்கள் மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்கியமைக்காக2933.8 மில்லியன் ரூபாய் (293 கோடி ரூபா) நிதியைப் பெற்றுள்ளது. 2 வருடத்தில் 293 கோடி ரூபாய் மிகை லாபம் பெறும் நிறுவனத்திடமிருந்து 2 கோடி ரூபாய் மட்டுமே வருடம் ஒன்றுக்கு சமூகக்கடப்பாட்டு நிதியாக பெறப்பட்டுள்ளது.

இந்நடைமுறையானது முற்றிலும் தவறானது என்றும் குறித்த நிறுவனங்களிடமிருந்து மொத்த லாபத்தில் குறித்ததோர் விகிதாசாரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படல்வேண்டும் என்ற முன்மொழிவுகள் வைக்கப்பட்டபோது அவற்றை முதலமைச்சர் எழுந்தமானமாக நிராகரித்து சட்டத்துக்கு புறப்பான முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான பகிரங்க கேள்வி அறிவித்தல் விடப்பபட்டு அதிக வருமானத்தை மாகாண சபைக்கு வழங்கக்கூடியதோர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்காமல் குறித்த இரு நிறுவனங்களிடமிருந்தும் பெருந்தொகைப் பணத்தை முதலமைச்சர் மற்றும் ஐங்கரநேசன் உட்பட்டோர் பெற்றுக்கொண்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் கணக்காய்வு அறிக்கையில் :

* குறித்த நிறுவனங்களுடன் மாகாண சபை செய்துள்ள ஒப்பந்தத்தில் பிரதம செயலாளர் கையொப்பமிட்டிருக்கவில்லை.

* காற்றாலை அமைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காணி நோக்கம் குறிப்பிடப்பட்டு காணி ஆணையாளரிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை.

* ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் மாகாண சபையின் அனுமதி பெறப்படவில்லை.

* நிறுவனங்களுக்கான அனுமதிக்கான சட்டரீதியான கேள்வி மனுகோரப்படவில்லை.

போன்ற பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குறைபாடுகள் தொடர்பில் நேற்று கூடிய சபையில் விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முற்கூட்டியே அறிவிக்கப்பட்டபோது , இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என சபையின் தவிசாளரை எழுத்துமூலமாக முதலமைச்சர் கோரியதன் ஊடாக விவாதத்திற்கு எடுத்துக்கொண்டால் மேற்படி குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் நிரூபணமாகும் என்பதை அவர் அறிந்து வைத்துக்கொண்டே இந்த தவறை புரிந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தம் முதலமைச்சரின் இல்லத்தில் வைத்தே இடம்பெற்றமையும் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் நியாயமாக நடந்துகொள்வார் என எதிர்பார்த்த தமிழ் மக்களில் பலர் விக்னேஸ்வரன் மோசடிப்பேர்வழி என்பதை நம்ப மறுத்தே வந்தனர். ஆனால் நேற்றைய விவாதத்தில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை புருவத்தை உயர்த்தப்பண்ணியுள்ளது.

நேற்று குறித்த விவாதம் ஆரம்பமாதற்கு முன்னர் சபையின் தவிசாளர் விக்னேஸ்வரனால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றை வாசித்தார். அக்கடிதத்தில்:
நான் வேறு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதால் இன்றைய சபை அமர்வுகளில் பங்கெடுக்க முடியாது என தெரியப்படுத்தியிருந்தார்.



(முதலமைச்சர் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என எழுதிய கடிதத்தின் பிரதி)

இவ்விடயத்தில் விக்னேஸ்வரன் தவறிழைத்திருக்காவிடின் அவரால் சபையோர் முன்தோன்றி தன்னை நிரபராதி என நிரூபித்திருக்க முடியும். எதுஎவ்வாறாயினும் முதலமைச்சர் விடயம் தொடர்பில் பதிலளிக்கும் பொருட்டு எதிர்வரும் 11ம் திகதி கூடவுள்ள அமர்வில் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் பேசப்படும் என்றும் அப்போது முதலமைச்சரிடமிருந்து சில கேள்விகளுக்கு பதிலெதிர்பார்க்கப்படுமென்றும் அவை முதல்வர் அறிவித்துள்ளார். அதேநேரம் அடுத்த அமர்விலும் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமல் தவிர்பார் என்றும் அடுத்த அமர்வே வடமாகாண சபைக்கான இறுதி அமர்வாக அமையும் என்றும் நம்பமுடிகின்றது.

விக்னேஸ்வரனின் முகத்திரை கிழித்து கே.சயந்தன் சபையில் தெரிவித்ததாவது:

மாகாணசபை உருவாக்கப்பட்ட சில மாதங்களில் பளையில் ஒரு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு எங்களுடைய அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிடுகிறார்கள் என எனக்கு தகவல் கிடைத்தது.

அதனை நான் முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை பெறுமாறு முதலமைச்சர் எனக்கு கூறினார். அதற்கமைய நான் சில நிபுணர்களை அணுகி கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூவர்ணப்படங்களுடன் அப்போதைய அமைச்சர் ஐங்கரநேசனின் செய்தி ஊடகங்களில் வந்திருந்தது.

„வடமாகாணத்திற்கு வரும் பெருமளவான முதலீட்டை அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார்' என அந்தச் செய்தி அமைந்திருந்தது.

இங்கே நான் கேட்பது மின்சார சபையின் கீழ் உள்ள பல கம்பனிகள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தயாராக இருந்தார்கள். அதுவும் இந்த யூலிப்பவர், பீற்றாப்பவர் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்திற்கு அறவீடு செய்யும் நிதியிலும் பார்க்க மிக குறைவான நிதியில் செய்ய தயாராக இருந்தார்கள். அப்படி இருக்கையில் எந்த கேள்வி கோரலும் இல்லாமல் தனியே இந்த நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது எப்படி?

மிகப்பெரியளவில் வருமானம் பெறும் நிறுவனத்திடமிருந்து எமது மக்களுக்குக்கிடைத்த நன்மைகள் என்ன? என கேள்விக்கணைகளை தொடுத்தார்.
இக்கேள்விகளுக்கு எதிர்வரும் 11ம் திகதி விக்னேஸ்வரன் பதிலளிப்பாரா?


ஐங்கரநேசனின் முகத்திரை கிழித்து அஸ்மின் சபையில் தெரிவித்ததாவது:

வெளிப்படை தன்மை பற்றி பேசும்போது கண்காய்வு அறிக்கையை இந்த சபையில் எடுக்கவேண்டாம் என முதலமைச்சர் எமக்கும் சபைக்கும் கடிதம் எழுதியதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

குறித்த நிறுவனத்தினர் '2 பெட்டிகள் நிறைய காசு கொண்டுவந்தார்கள் அப்பன்' நான் அவற்றை பெற்றுக்கொள்ளவில்ல என எனக்கும் சக உறுப்பினர் எஸ்.சுகிர்தனுக்கும் ஐங்கரசேன் அப்போது கூறியிருந்தார்.

அதேபோல் 40 மில்லியன் ரூபாய் செலுத்தி தனது மகளை ஐங்கரநேசன் எவ்வாறு வெளிநாட்டில் படிக்கவைத்தார்? என்பதற்கான ஆதாரங்கள் யாவும் எங்களிடம் உள்ளன என்றார் அஸ்மின் .

இதனை மறுதலித்த மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன், நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. என்னுடைய மகளை எங்கே படிக்க வைக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன். அதை குறித்து கவலைப்படவேண்டாம் என்றார்.

நான் எப்படி பணம் செலுத்தினேன் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால் அதனை இப்போது வெளிப்படுத்துங்கள். மேலும் 2 பெட்டி நிறைய காசு கொண்டுவந்தார்கள் என நான் எப்போதும் -எங்கேயும் கூறவில்லை – என்றார்.

தொடர்ந்தும் உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தங்கள் சொத்து விபரங்கள் குறித்து வெளிப்படுத்தவேண்டும்.

இந்த இடத்தில் நான் கேட்கிறேன், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என முழங்கினார்.

யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்துள்ள விக்கி வருவாரா 11ம் திகதி தருவாரா பதில்?

பீமன்.


Read more...

Sunday, June 3, 2018

பதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்

கடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில டாண் ரிவி யின் இயக்குனர் குகநாதன் அவர்களால் தொகுத்து புத்தகமாக்கப்பட்டிருக்கின்றது. „மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக ... „ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் அறிமுகமும் மீளாய்வும் இன்று சூரிச் நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் தமிழர் போராட்டத்தில் இடம்பெற்ற வஞ்சகங்கள், தவறுகள், சறுக்கல்கள், தந்திரங்கள், தொடர் தோல்விகள் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட கட்டுரைகள் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு சுகு அவர்கள் இலங்கை அரசு, புலிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி சுட்டுவிரலை நீட்டுகின்ற அதே தருணத்தில் தங்களது வரலாற்றுத்துரோகங்கள் மீது எவ்வித மீள்பார்வையையோ அன்றில் சுயவிமர்சனத்திற்கு வழிவிட்டுள்ளமையையோ அவதானிக்க முடியவில்லை.

இந்நிலையிலேயே இன்றைய புத்தக மீள்அறிமுக நிகழ்வில் சமகால அரசியல் களநிலைதொடர்பில் சுகு எனப்படுகின்ற திருநாவுக்கரசு சிறிதரன் பேசவுள்ளார்.
இந்நிலையில் அவர் பின்வரும் விடயங்களுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்கின்றோம்.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கட்டாய ஆட்சேர்ப்பினை இலங்கையில் அறிமுகம் செய்துவைத்த முன்னோடிகள் என்ற பெருமை ஈபிஆர்எல்எப் என்ற இயக்கம் அங்கமாக இருந்த த்றீஸ்டார் என்ற அமைப்பினையே சாரும். இந்நிய-இலங்கை ஒப்பந்த காலத்தில் ஈபிஆர்எல்எப் னர் மேற்கொண்ட கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் அடாவடித்தனங்களே புலிகளமைப்பிற்கு பெரிதும் ஆதரவைத்தேடித்தந்திருந்தது. மேலும் புலிகள் சக அமைப்புக்களை தடை செய்து அவர்களை கொலைசெய்து ஏன் சிலரை உயிருடன் டயர் போட்டு எரித்து புலிகள் தமது மனிதவிரோத செயற்பாடுகளை வெளிக்காட்டியிருந்தனர். மக்கள் புலிகள் மீது வெறுப்புக்கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் த்றீஸ்டார் வடகிழக்கிலாடிய பேயாட்டம் புலிகள் இவ்வமைப்புக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை சரியானதே என்ற நிலைக்கு மக்களை இட்டுச்சென்றது. இந்த வரலாற்று உண்மைதொடர்பில் புத்தகத்திலுள்ள 129 கட்டுரைகளில் எந்தக்கட்டுரையிலும் தகவல்களில்லை.

ஈபிஆர்எல்எப் இனரால் பலவந்தமாக சிவில்பாதுகாப்பு படைக்கென இணைக்கப்பட்ட இளைஞர்களை நடுத்தெருவில் கைவிட்டு இந்திய இராணுவத்துடன் தப்பியோடியபின்னர் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் கொத்துக்கொத்தாக கிழக்கிலங்கையில் கொன்றுகுவிக்கப்பட்டனர். இவ்விளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஈபிஆர்எல்எப் பினரது பதில் என்ன ?

தமிழ்ப்பாசிஸம் மற்றும் அதற்கு துணைபோன ஊடகங்கள், அவற்றின் வறட்டுத்தன்மை தொடர்பில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சமாதான காலத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஊடகங்கள் „இனம்தெரியாதோர்' என்ற பதம்கொண்டு வெள்ளைபூசியதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வயோக்கியத்தனத்தின் பிதாமகனாக செயற்பட்ட சிவராமிற்கு விழாவெடுக்கும் ஊடகவிபச்சாரிகளுடன் சுகு கள்ளதொடர்பு வைத்திருக்கின்றார் என்பது சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற புத்தகவெளியீட்டில் அம்பலமாகியதுடன் இன்று இடம்பெறவுள்ள சுகுவின் புத்தக அறிமுக நிகழ்விலும் புலிப்பாசித்திற்கு தீனிபோடுமொருவரே பிரதான பாகம் வகிக்கின்றார். எனவே சுகுவின் எழுத்துக்கும் செயலுக்குமிடையிலான முரண்பாடு தொடர்பில் விளக்கம் தேவைப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ்பாசிஸத்தின் முகவர்கள் என தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்ற சுகு, த.தே.கூ வின் வாசல்படியில் சீட்டுக்கேட்டு தவம்கிடக்கின்றார். சீட்டுக்கிடைத்துவிட்டால் சுகுவும் பாசிஸத்தின் ஏஜன்ராவார் என்பதில் எவ்வித ஐயமும் காட்டாததன் பின்னணிபற்றியும் எதிர்பார்கின்றேன்.



Read more...

Friday, March 2, 2018

டாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்! பீமன்.

உளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில் கனடா சென்றார். அங்கே தமிழரின் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவில் இறங்கிய அவர் கீழ்கண்டவாறு தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.:

எனது முழுப்பயணத்தைப்பற்றி எழுதுவதானால் அல்லது பேசுவதானால் அதற்கு வருடங்கள் தேவைப்படும். பல்வேறு பாடங்களையும், அவதானிப்புக்களையும், புரிதல்களையும் தந்ததோர் பயணமாகவே ரோறொன்டோவுக்கான பயணம் அமைந்திருந்தது. அவற்றில் சில முக்கியமான புள்ளிகளை குறிப்பிடுகின்றேன் என தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார்.

தமிழ் நாட்டிலிருக்கின்ற எங்களுக்கு எல்ரிரிஈ என்பது ஒர் கதாநாயக அமைப்பு என்றும் பிரபாகரனே தமிழ் மக்களின் இறுதி அடையாளச்சின்னம் என்றும்தான் தெரியும். ஆனால் நான் ரொறொன்டோவில் இறங்கியதிலிருந்து சந்தித்த ஒவ்வொரு தமிழரிடமிருந்தும் ஒவ்வொரு புதிய கதையை படித்துக்கொண்டேன். இலங்கைத் தமிழர்களின் கதை பல பக்கங்களைக்கொண்டது. அவர்களில் பலர் நடந்து முடிந்தது எவ்வித பலனையும்தராத யுத்தம் என்று உணர்கிறார்கள். பணம் புகழ் அதிகாரம் என்பவற்றின் மீது பிரபாகரன் கொண்டிருந்த பேராசை காரணமாக அவன் மக்களை கொன்றுகுவித்து, பயங்கரவாதமயமாக்கி, துஷ்பிரயோகம்செய்து ஒர் சமூகவிரோதிக்கான பரிபூரண சின்னமாக விளங்கினான் என அம்மக்கள் என்னிடம் அழுத்தம்திருத்தமாக கூறினார்கள். பல தாய்மார் தமது மகன்மார் யுத்தவெறிக்குள் பலாத்காரமாக தள்ளப்படுவதிலிருந்தும் பெண்பிள்ளைகள் கற்பழிப்புக்களிலிருந்தும் தப்புவதற்காக நாட்டைவிட்டே ஓட நிர்பந்திக்கப்பட்டோம் என மிகுந்த மனவுளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

நாம் தற்கொலையை ஓர் சாகசமாக ஏற்று அதைப்போற்றி வாழ்த்துப்பாடும் ஒர் கலாச்சாரத்தை கொண்டுள்ளளோம். ஆனால் எமது வளர்ந்துவருகின்ற சமுதாயம் இவ்விடயத்தை ஓர் தலைசிறந்த செயற்பாடாக கற்றுக்கொள்கின்றது என்ற அபாயத்தை நாம் மறந்து விடுகின்றோம். நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய விடயம் இதுவல்ல..

கியூபாவிற்கு சென்று வந்தவர்கள் பிடல் கஸ்ரோ ஒரு புனிதமான புரட்சியாளன் என்று சொல்கின்றார்கள். ஆனால் அவரும் ஒரு போலி கதாநாயகன்தான். பருவமடையாத பெண்பிள்ளையை தாய் கூட்டிக்கொடுக்கிற நிலையில் அந்நாட்டின் வறுமை உள்ளது. ஆனால் பிடல்கஸ்ரோ இவ்விடயத்தில் எதுவும் செய்யவில்லை. அவர் தொலைக்காட்சியில் தோன்றியபோது அவ்வப்போது அவரின் மூஞ்சியில் மக்கள் துப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்னைப்பொறுத்தவரை ஷாலினி அவர்கள் எதுவும் புதிதாக தெரிவிக்கவில்லை. புலிகள் என்று தமது கோரமுகத்தை தமிழ் மக்கள் மீதும் சகபோராளி அமைப்புக்கள் மீதும் காண்பிக்க முற்பட்டார்களோ அன்றே மேற்படி குற்றச்சாட்டுக்கள் நிருபணமாகியிருந்தது. அண்மையில் கனடாவில் திரையிடப்பட்டிருந்த „சொர்கத்தில் பிசாசுகள்'; என்ற குறும்படத்தில்கூட தமிழ் சமூகத்திடமிருக்கின்ற வன்செயல்நாட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ரெலோ இயக்கத்தை தடை செய்த புலிகள் அவ்வியக்க உறுப்பினர்களை கைது செய்து அவர்களை உயிருடன் ரடயர்போட்டு எரித்த காட்சியை நேரடியாக கண்ட ஒருவரின் நடிப்பில் : புலிகள் ரெலோ அமைப்பினரை உயிருடன் டயர் போட்டு எரித்தார்கள். அங்கே இளைஞர்களின் உயிர் தீக்குள் துடிதுடித்துக்கொண்டிருந்தது. புலிகள் எரிகின்ற டயர்களுக்கும் உயிர்களுக்கும் காவல்நின்றார்கள். யாழ் தமிழ் சமூகம் காவல்நின்றவர்களுக்கு குளிர்பாணம் கொடுத்து உற்சாகமேற்றிக்கொண்டிருந்து என்று குறிப்பிட்டதுடன், யாழ் சமூகத்திடம் வன்முறைக்குணாம்சம் போராட்ட இயக்கங்கள் உருவாக முன்பிருந்தே இருந்திருக்கின்றது என்றார்.

இலங்கையில் புலிகள் கருத்துச்சுதந்திரத்தை தமது இரும்புக்கரம் கொண்டு நசுக்கி துவம்சம் செய்திருந்தாலும்; புலம்பெயர்தேசத்தில் பயங்கரவாதத்திற்கு வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுக்கொண்டேயிருந்தது. ஷாலினி விடயத்தில் புலி-வியாபாரிகளின் அடக்குமுறை அவரின் முகநூல் கணக்கை முடக்கி அவரது குரல்வளையை நசுக்கிவிடலாம் என்ற முயற்சிவரை சென்றுள்ளமை தொடர்பில் விசாரணை செய்கின்றபோது, பழ நெடுமாறன், வைகோ, சீமான் என பல்வேறு இந்திய அரைகுறைகளை அழைத்து வியாபாரத்தை விஸ்தரித்துக்கொண்டிருக்கின்ற தமிழீழ வியாபாரிகட்;கு டாக்டர் ஷாலினியினுடனான அனுபவம் தெருவால்சென்ற பாம்பை சீலைக்குள்ளே விட்டதாக தென்படுகின்றது. தலைவர் வருவார்! தருவார் தமிழீழம்! என தமிழீழ மாத்திரை விற்பனை செய்கின்ற வியாபாரிகட்கு டாக்டரின் அறிக்கை தமிழீழ-மாத்திரை வியாபாரத்திற்கு சீல் வைக்கும் நிகழ்வாக உணரப்பட்டுள்ளது.

வியாபார நஷ்டத்திற்கு காரணமானவர்கள் என்று கருதப்பட்டோர் அத்தனைபேர்மீதும் காழ்புணர்ச்சி தீர்க்கப்படுகின்றது. கனடாவில் செயற்படுகின்ற ஒர் பெண் இழிசெயலர்களால் சிடுமூஞ்சித்தனமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணை இலக்கு வைத்தவர்கள் அம்பாறை மாவட்ட மத்தியமுகாம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கற்பழித்து கொல்லப்பட்ட கோணேஸ்வரியை மீண்டும் திரைக்கு கொண்டுவந்துள்ளனர். சுமார் இரண்டரை தசாப்தங்களாக கோணேஸ்வரியை வைத்து உண்டியல் குலுக்கும் கோணங்கிகளிடம் கோணேஸ்வரியின் அயலூர்காரனாகிய நான் கேட்கும் கேள்வி யாதெனில்: உங்கள் உண்டியல் குலுக்கலுக்கு உறுதுணையாய் நிற்கின்ற கோணேஸ்வரியின் குடும்பத்திற்கு இதுவரை உண்டியல் பணத்தில் எத்தனை பைசா வழங்கியுள்ளீர்கள்? அவரது குழந்தைகள் அனுபவித்த துன்பத்தில் எதாவது பங்கு கொண்டுள்ளீர்களா?

மேலும் தமிழ் சமூகம் கடந்தகால வன்முறை அனுபவங்களை மறக்கமுடியாதவர்களாக அதன் தாக்கங்கள் அவர்களை மனநோயாளிகளாக்கியுள்ளது என்பது ஷாலினி அவர்களால் மாத்திரம் முன்வைக்கப்பட்ட கருத்துக்கிடையாது. மேற்குலக நாடுகளில் பல்வேறுபட்ட வன்செயல் சார்ந்த செயற்பாடுகளுக்காக நிதிமன்றங்களில் குற்றவாளிகளாக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக வாதாடிய வக்கீல்கள்: 'தமிழ் மக்கள் கடந்துவந்த பாதை கடினமானதும் வன்முறை கலந்ததுமாகவும் இருந்திருக்கின்றது. அவர்கள் இவ்வனுபவங்களினால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதன் தாக்கமே இவர்களை வன்செயலுக்கு தூண்டுகின்றது என்பதை கருத்திற்கொண்டு அவர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள்'; என நீதிமன்றுகளில் மனுச்செய்யப்பட்ட தருணங்களில் மன்றுகள் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை கிணற்றுத்தவளைகள் எவ்வாறு அறிந்திருக்கப்போகின்றார்கள். ஏன் இன்றுவரை மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பலருக்கு மேற்படி காரணத்திற்காக மனிதாபிமான ரீதியில் தங்குமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை வன்செயலின் போஷகர்கள் அறிந்திருக்கவில்லையா? அவ்வாறயின் புலி-வியாபாரிகள் பயங்கரவாதம் நியாயப்படுத்தப்படவேண்டுமென்பதற்காக சலுகைகளை தமிழர் இழக்கவேண்டும் என விரும்புகின்றார்களா?

இறுதியாக இந்தியத் தேர்தல்களில் இலங்தைத்தமிழர் விவகாரம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது என தெரிவித்துள்ள ஷாளினி. எதிர்வரும் காலங்களில் இவ்விடயம் தொடர்பாக பேசுபவர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் தான் தமிழர்களின் உண்மைக்குரல்களை செவிமடுத்துள்ளதாகவும் எச்சரித்துள்ளார். அத்துடன் 'ரஜீவ் காந்தியினால்தான் தமிழர்களாகிய நாம் இன்று இலங்கையில் வாழ்கின்றோம்' என தமிழர்கள் சிலர் தெரிவித்ததாவும் குறிப்பிட்டுள்ளதுடன் இனிமேலும் நாம் ஒருபக்க கதையை மாத்திரம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது, விடயத்தை ஆழமாக படிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆம். இலங்கையில் 13ம் திருத்தச்சட்டத்திற்கு வழிவகுத்த ராஜீவ்காந்தி அவர்களின் செயற்பாடும் இன்றுவரை தமிழ்நாட்டு மக்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காட்டிவருகின்ற அக்கறையும் தரம்தாழ்த்த முடியாதது எனச் சிரம்தாழ்துகின்ற அதேநேரத்தில் இந்தியாவிடம் நாம் கற்றுக்கொண்ட கசப்பான பாடங்களையும் ஷாலினி அறிந்தாகவேண்டும்.

இந்தியாவின் வெளிவிவகாரக்கொள்கையானது இலங்கையின் இறையாண்மையை உதாசீனம் செய்வதாகவே இருந்துவந்துள்ளது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என இந்தியா தீர்மானித்துள்ளது. டாக்டர் பலேக்கர் 1948ம் ஆண்டு எழுதிய „இந்தியப்பாதுகாப்பு' எனும் புத்தகத்தில் இலங்கை அரசு சுதந்திரம் கிடைத்தபோதும் தனது வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையை முன்வைத்தாலோ அல்லது தன்னை நடுநிலைமை என்று சொன்னாலோ அல்லது இந்தியாவின் ஜோதியாக இருந்தாலோ அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்தாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகின்றபோது இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அதற்கு ஆசிய ஜோதி நேரு அவர்கள் வழங்கிய முன்னுரையில் அக்கருத்து சரியானது என்று ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் நாங்கள் 'அணிசேரா' (non-aligned) கொள்கையை கடைப்பிடித்து எமது இறைமையை நிலைநிறுத்துவோம் என்ற செய்தி இந்தியாவிற்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் இலங்கையில் தனது காலை நிலையாக பதிப்பதற்கு அல்லது இலங்கை அரசை அடிபணிய வைப்பதற்காக இலங்கையில் தமிழ் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய இந்தியா, அவ்வமைப்புக்களின் வளர்ச்சி கண்டு மிரண்டது. இலங்கையில் தமிழீழம் உருவாவது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான முன்னுதாரணமாகும் என்ற கருத்தை தமிழ் அமைப்புக்களுக்கு எடுத்துக்கூறி இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என தனது இரட்டை முகத்தை வெளிக்காட்டியது.

அத்துடன் நின்றுவிடாது தமிழ் அமைப்புக்களின் ஒட்டுமொத்த பலத்தை நொருக்கியது. அமைப்புக்களுள் உள்மோதல்களை உருவாக்கி அவற்றை பலவீனமாக்கியதுடன் இயக்கமோதல்களுக்கும் தூபமிட்டது. இவை தொடர்பான வரலாறு புத்தகங்களாகவே எழுதப்படமுடியும்... எனவே இந்தியா இட்;ட 13 என்ற பிச்சையில்தான் இலங்கையில் தமிழர்களின் இருப்பு உறுதியானது என்ற மமதையை இந்தியா ஒடித்துக்கொள்ளவேண்டும்.

Read more...

Friday, January 19, 2018

கொசுக்கடி தாங்க முடியவில்லை. பீமன்

இலங்கையிலே தேர்தல் ஒன்றுக்கான அறிவித்தல்..
ஆசனங்களுக்கான அடிபாடு..
இதோ பிரிந்து செல்கின்றோம்..
அங்கே ஜனநாயகம் புரியாது கிடையாது...
சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்கள்..
கூட்டமைப்புக்கு எதிர் கூட்டு அமைக்கிறோம்..
இல்லை இல்லை நாங்கள் ஒற்றுமையைத்தான் விரும்புகின்றோம்..
பிரிந்து சென்று தனித்தனியே போட்டியிடுவதையும் விரும்புகின்றோம்..
எங்களை ஏமாற்றி விட்டார்கள்..
பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடாத்தி காத்திருந்தோம்..
சரிவரவில்லை.. சரிவந்தது...
என்ற செய்திகள் பழைய செய்திகளாகி, தமிழ் தேசியத்தை உலகுக்கு உணர்த்த த.தே.கூ வுக்கு ஒற்றுமையாக வாக்களியுங்கள் என்ற செய்தி வந்தபோது எலும்புத்துண்டுகளை பங்கிட்டுக்கொள்வதற்கான இழுபறி தற்காலிகமாக நிறைவு பெற்றுருக்கிறது என்ற பெருமூச்சுடன் இந்நிலைமையை இவ்யுகத்தில் மாற்றமுடியாது சசித்துக்கொண்டு வாழ்வதுதான் சிறந்தது என்று முடிவு செய்திருந்தேன்.

ஆனாலும், குழம்பின குளத்தில் குறட்டை பிடிக்கிறத்துக்கு கரப்பை தூக்கிட்டு வெளிக்கிட்டுருக்கிற முகநூல் கொசுக்களின் பதிவுகள் மீண்டுமொருமுறை கோலைத்தூக்க தூண்டியுள்ளது. முகநூல் கொசுக்கடி தாங்கவே முடியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை கைவிட்டது போதாதென்று சமஸ்டியையும் கை விட்டுவிட்டார்களாம். ஓற்றையாட்சிக்குள் தீர்வுக்கு இணங்கி விட்டார்களாம். தீர்வில் எப்படிப்பட்ட விடயங்கள் உள்ளடக்கம்பெறவேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்க்கப்படவில்லையாம். இடைக்கால அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்க வில்லையாம். ஆனால் புலிகள் தாங்கள் முன்வைத்த இடைக்கால நிர்வாக அலகு தொடர்பான முன்மொழிவை மக்கள் பார்வைக்கு வைத்தார்களாம், வன்னியில் ஊற்ரெடுத்த ஜனநாயகப் பேராறு இந்துசமூத்திரத்தில் சங்கமித்து பாக்குநீரிணை எங்கும் பரவியோடியதாக வல்லூறுகளின் இரைச்சல் காதை குடைகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் மீது எனக்கு கருத்தொருமைப்பாடு கிடையாது என்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாக புலிகளுக்கு ஜனநாயகம், சரி-பிழை, வெளிப்படைத்தன்மை, மக்கள் மயமாக்கம், கொள்கை என்கின்றவை தொடர்பில் பேசுதற்கு அருகதை உண்டா என்பதே.

பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரை ஒன்றில் தமிழ் மக்கள் என்றுமே தமிழீழம் கோரியதில்லை என்றும் அவர்கள் நியாமானதோர் தீர்வையே எதிர்நோக்கி நிற்கின்றனர் என்றும் கூறியதனூடாக புலிகளின் தமிழீழக் கோட்பாடு கைவிடப்பட்டிருந்தது என்பது மட்டுமல்ல சமஸ்டி என்ற பிடியும் தளர்ந்திருந்ததை அன்று யாவரும் அதிர்சியுடன் நோக்கியிருந்தாலும், சுவருக்கும் காதுண்டென்று புலிகள் உருவாக்கியிருந்த பீதியால் மக்கள் வாய் திறக்கவில்லை. இன்று ஜனாநாயகம் பேசுகின்ற புலிகள் அன்று ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கான பேச்சுரிமையைக்கூட தடைசெய்திருந்த வண்ணம் அது.

ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் உயிரழிவை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது என சர்வதேச சமூகம் ஓர் சமாதானத்திற்கான வழியைதேடுவதில் முனைப்புடன் செயற்பட்டு தீர்வுவொன்றுக்கான தேடுதலை மேற்கொண்டபோது, புலிகள் முன்வைத்த முழுக்கோரிக்கையும் யாது? பதில் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் „தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்பதாகும்.

தமிழ் மக்களின் „ஏக" பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரவேண்டிய தேவையிருந்திருந்தால் அதற்கான கோரிக்கையை தமிழ் மக்களிடம் முன்வைத்து தேர்தலொன்று மூலமாகவே அதை அடைந்திருக்கவேண்டும். மாறாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சமாதானப்பேச்சென்ற போர்வையில் பூட்டிய குளிரூட்டிய அறைகளிலிருந்து இதை கோரியதன் பின்னால் இருந்திருக்கக்கூடிய பிற்போக்குத்தனத்தை இன்றும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகளை நிர்ணயிக்கின்ற சக்தி அல்லது அதிகாரம் இருந்திருக்குமாகவிருந்தால் அது ஏன் காலாகாலமாக வடகிழக்கில் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் கட்சிகளிடம் தோல்வியை தழுவிக்கொண்டது? தனக்கு விரும்பிய பிரதிநிதிகளை தானே நியமித்துக்கொண்டு அமளி துமளி அற்ற பாராளுமன்றொன்றை நடாத்திச் சென்றிருக்கலாம் அல்லவா?

இதைவாசிக்கின்ற முகப்புத்தக புலிவீரர்கள் நாங்கள் அவ்வாறு எதையும் கேட்வில்லை என்றும் தமிழ் மக்கள் சார்ந்த கோரிக்கைகளையே முன்வைத்தோம் என்றும் அவை இணையங்களில் இன்றும் உள்ளது என்ற வாதத்தையும் முன்வைக்கலாம். ஆம் புலிகள் முன்வைத்த கோரிகைகள் இணையத்தில் உள்ளது. ஆனால் அது சதாரண தமிழ் மக்கள் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியில் இல்லை. வடகிழக்கில் தனித்தமிழில் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பிறமொழி பெயர்பலகைகளைக்கூட அடித்து நொருக்கி ஐஸ்கீறீம் போன்ற ஆங்கிலச் சொல்லுக்கு „குளிர் கழி" என புதிய சொற்களை அறிமுகப்படுத்திய புலிகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தீர்வு சம்பந்தமான முன்மொழிவின் தமிழாக்கத்தை மக்களுக்கு வழங்க மறுத்ததன் பின்னணி தெட்டத்தெளிவானது.

இலங்கை அரசாங்கத்துடன் சுமார் ஐந்தாண்டுகள் பேச்சு நடாத்திய புலிகள் அரசாங்திடம் கோரியது புலிகளுக்கான இடைக்கால நிர்வாக சபையே. அதற்கான முன்மொழிவில் :

* இடைக்கால சுயாட்சி அதிகாரசபை வட-கிழக்கின் 8 மாவட்டங்களையும் உள்ளடக்கும் அதில் முஸ்லிம்கள் உரித்துடையவர்களாக இருப்பார்கள்.

* இடைக்கால நிர்வாக சபைக்கான அறுதிப்பெரும்பாண்மையான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் புலிகளுக்கு வழங்கவேண்டும். (தேர்தல் மூலம் மக்களுக்கு அல்ல)
பிரதம அதிகாரியை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ( புலிகளால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்? )

* ஐந்து வருடங்களுக்கு வடகிழக்கில் தேர்தல் ஏதும் இடம்பெறமுடியாது. (வடகிழக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்க கூடாது)

* வடகிழக்கில் மனித உரிமைகள் ஆணையகம் ஒன்று நிறுவப்படும். அதற்கான உறுப்பினர்களையும் அலுவலர்களையும் இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்களே தெரிவு செய்வர். (அதாவது சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு நாங்கள் ஒரு டம்மியை உருவாக்குவோம். )

* இடைக்கால நிர்வாக சபையானது வடகிழக்கை ஆழுகின்ற சகல அதிகாரங்களையும் கொண்டிருப்பதுடன் சகல விதமான வரிகளை அறவிடுவதற்கும் வரிகளை விதிப்பதற்குமான அதிகாரங்களை கொண்டிருக்கும் (அதாவது வன்னியிலிருந்து புலிகளின் கப்பம் பெறுதல் நடைமுறையை சட்டரீதியாக்குவதற்கு சிறிலங்கா அரசு அதிகாரம் வழங்கவேண்டும்.)

* வடகிழக்கிற்கு ஒர் தனியான நீதி நிர்வாக அலகொன்று உருவாக்கப்படும். அந்த நீதிநிர்வாக அலகே நிறுவப்படுகின்ற இடைக்கால நிர்வாக சபை தொடர்பான பிணக்குகளை கையாளும். ( அதாவது புலிகளின் விளையாட்டு நீதிமன்றுகள் சட்ட ரீதியாக்கப்படும். இலங்கை அரச அதிகாரமும் அந்த நீதிமன்றுக்கு கட்டுப்படவேண்டும்)

* வடகிழக்குக்கான வரவுசெலவுத்திட்டத்தை இடைக்கால நிர்வாக சபையே தயாரிக்கும். அதற்காண பணத்தை மத்திய அரசு ஒதுக்கவேண்டும். நிதியை நிர்வாக சபை கையாளும். (புலிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்)

* வடகிழக்கிற்கான புனர்நிர்மானப்பணிகளுக்கான நிதியும் இடைக்கால சபைக்கே வழங்கப்படவேண்டும் (மிச்சத்தை புலிகள் பார்த்துக்கொள்வார்கள்)

* இடைக்கால நிர்வாக சபை உள்நாட்டு வெளிநாட்டு அன்பளிப்புக்கள் மற்றும் கடன்களை நேரடியாக பெற்றுக்கொள்ள அதிகாரங்களை கொண்டிருக்கும். (வெளிநாடுகளில் தமிழரிடம் பலவந்தமாக பறிக்கும் பணத்தை தங்குதடையின்றி வன்னிக்கு கொண்டுவர சிறந்த வழி)

* பணத்திற்கான கணக்காய்வு அறிக்கை கணக்காளர் நாயகத்தினால் தயாரக்கப்படும. ஆனால் கணக்காளர் நாயகத்தை இடைக்கால நிர்வாக சபையே நியமிக்கும் (புலிகள் நியமிக்கும் கணக்காளர் நாயகத்தின் அறிக்கை எப்படியிருக்கும்?)

இவ்வாறு 23 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. புலிகளின் குறித்த எழுத்துமூலமான கோரிகையை ரணில் விக்கிமசிங்க மிகவும் புத்திசாலித்தனமாக (பாலசிங்கத்தின் பாஷையில் நரித்தனமாக) பயன்படுத்தினார். கோரிக்கையின் எழுத்துமூலத்தை முக்கியமான சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் அனுப்பி வைத்த ரணில் புலிகள் என்ன கேட்கிறார்கள் என்று புரிகிறதா என சர்வதேசத்தின் மனச்சாட்சின் கதவுகளை தட்டினார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளை செயலிழக்க செய்ய எனக்கு இந்தநாட்டின் அரசியல் யாப்பு அதிகாரமளிக்கவில்லையே! இதை நான் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்று அப்பாவிப்பிள்ளை போல் ஆலோசனை கேட்டார். நீங்கள் உங்கள் நாடுகளில் புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்துள்ளீர்கள். ஆனால் எங்களை பயங்கரவாதிகளுக்கு அதிகாரத்தை கொடு என்கின்றீர்கள். இந்நாட்டின் பிரதமராக நான் எவ்வாறு சகல கட்சிகளதும் உரிமைகளை பறித்து ஒரு கட்சிக்கு அதிகாரம் வழங்கமுடியும் என்று ஒரு கொஞ்சம் காரசாரமாகவும் தூக்கிப்போட்டார். பெரிதுபடுத்தவேண்டாம் நாங்கள் அவர்களுடன் பேசுகின்றோம் இணங்கா விட்டால் அடிபோடுவதுதான் ஒரே வழி என்றது சர்வதேசம். ஐயா அடிபோடுறதா? அவர்கள் பிராந்திய வல்லரசையே அடித்து விரட்டிய ராணுவம். என்னிடம் பலமான ராணுவமும் இல்லை ஆயுதங்களும் இல்லை என ரணில் கையை பிசைந்தார். கவலையை விடுங்கள் சகலதும் கிடைக்கும் என்றனர். புலிகளின் தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டது.

புலிகளின் முன்மொழிவை தூக்கிக்கொண்டு வன்னிக்கு பறந்தது சர்வதேசம். மிஸ்டர் பிரபாகரன் என்ன கேட்கிறீர்கள் என்று விளங்கவில்லை. இது மக்களுக்கான தீர்வா அல்ல உங்களுக்கான தீர்வா என்று காரசாரமாக கேட்டது. பிரபாகரனோ மசியவில்லை என்ன ஐசே பேசுகின்றீர்கள்? „மக்கள் என்றால் புலிகள், புலிகள் என்றால் மக்கள்" என்பது உங்களுக்கு தெரியாதா என்றார். சர்வதேசமும் விட்டபாடில்லை முன்மொழிவை ஜனநாயகப்பண்புகளுக்குட்பட்டதாக எந்தத்தரப்பிற்கும் பின்னடைவு அற்றதாக மாற்றுமாறு புலிகளின் கழுத்தில் கையை வைத்தது. புலிகளது முழி பிதுங்கியது. ரணில் குள்ள நரி என்று பாலசிங்கம் ஒப்பாரி வைத்தார். சர்வதேசத்தின் அணுங்குப்பிடியில் மாட்டி விட்டதை புலிகள் உணர்ந்தனர். மாற்று வழியைத்தேடினர்.

அத்தருணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக இருவர் போட்டியிட்டனர். ரணிலை எதிர்த்து மஹிந்த போட்டியிட்டார். சர்வதேச செல்வாக்குள்ள ரணிலை தோற்கடித்தால் சர்வதேசத்தின் பிடியிலிருந்து தாங்கள் விடுபடலாம் எனவும் சர்வதேச தொடர்புகள் அற்ற மஹிந்தவின் காதில் பூச்சுத்தலாம் எனவும் கருதிய புலிகள் மஹிந்தவை வெல்ல வைப்பதற்கு பேரம் பேசினர். கோடிகள் மாறப்பட்டது. வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. வாக்களித்தால் கைவெட்டப்படுமென எச்சரிக்கப்பட்டது. அவ்வாறு வாக்களித்த ஓரிருவரின் கைகளும் வெட்டப்பட்டது.

புலிகளின் கனவு பகற்கனவானது. முள்ளிவாய்காலில் ஏகப்பிரதிநிதித்துவம் நிறைவுபெற்றது. ஆனால் புலிவால்கள் இந்த உண்மையை மறைக்க எத்தகைய முயற்சிகளை செய்தாலும் உண்மைகள் என்றும் அழியாது. நன்றி.

புலிகள் கோரிய இடைக்கால நிர்வாக சபைக்கான முன்மொழிவின் முழுவடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை யாவரும் வாசித்தறியலாம்.


Wherefore, the parties, namely the Liberation Tigers of Tamil Eelam and the Government of Sri Lanka, hereby agree to the following provisions:

1/ Interim self-governing authority
An interim self-governing authority (ISGA) shall be established comprised of the eight districts namely: Amparai, Batticaloa, Jaffna, Kilinochchi, Mannar, Mullaitivu, Trincomalee and Vavuniya in the north-east, until a final negotiated settlement is reached and implemented.
Representatives of the Muslim community have the right to participate in formulation of their role in the ISGA.

2/ Composition of the ISGA
2.1 The ISGA shall consist of such number of members as may be determined by the parties to this agreement.
2.2 The composition of the ISGA shall be:
2.2a Members appointed by the LTTE,
2.2b Members appointed by the GOSL, and
2.2c Members appointed by the Muslim community in the north-east.
2.3 The number of members will be determined to ensure:
2.3a An absolute majority of the LTTE appointees in the ISGA
2.3b Subject to (a) above, the Muslim and Sinhala communities in the north-east shall have representation in the ISGA.
2.4 The chairperson shall be elected by a majority vote of the ISGA and shall serve as the chief executive of the ISGA.
2.5 The chairperson shall appoint the chief administrator for the north-east and such other officers as may be required to assist in the performance of his/her duties. The chairperson shall have the powers to suspend or terminate any such appointment.
3/ Elections
The provisions of Clauses 2.2 and 2.3 shall continue until elections for the ISGA are held. Such elections shall be held at the expiry of five years of the coming into force of this agreement, if no final settlement has been reached and implemented by the end of the said period of five years.
An independent Election Commission, appointed by the ISGA, shall conduct free and fair elections in accordance with international democratic principles and standards under international observation.
4/ Human rights
The people of the north-east shall be accorded all rights as are provided under international human rights law. Every law, regulation, rule, order or decision of the ISGA shall conform to internationally accepted standards of human rights protection.
There shall be an independent human rights commission, appointed by the ISGA, which shall ensure the compliance with all such human rights obligations.
The commission will seek the assistance of international human rights bodies to facilitate the rapid establishment of an effective regime for protecting human rights.
The commission shall be entitled to receive petitions from any individual person, award compensation to any such affected person, and ensure that such person's rights are restored.
5/ Secularism
No religion shall be given the foremost place in the north-east.
6/ Prohibition against discrimination
The ISGA shall ensure that there is no discrimination on grounds of religion, race, caste, national or regional origin, age or gender in the north-east.
7/ Prevention of bribery and corruption
The ISGA shall ensure that no bribery or corruption is permitted in or under its administration.
8/ Protection of all communities
No law, regulation, rule, order or decision that confers a privilege or imposes a disability on any community, which is not conferred or imposed on any other community, shall be made concerning culture or religion.
9/ Jurisdiction of the ISGA
9.1 The ISGA shall have plenary power for the governance of the north-east including powers in relation to resettlement, rehabilitation, reconstruction, and development, including improvement and upgrading of existing services and facilities (hereinafter referred to as RRRD), raising revenue including imposition of taxes, revenue, levies and duties, law and order, and over land.
These powers shall include all powers and functions in relation to regional administration exercised by the GOSL in and for the north-east.
9.2 The detailed modalities for the exercise of such powers and the performance of such functions shall be subject to further discussion by the parties to this agreement.
10/ Separation of powers
Separate institutions for the administration of justice shall be established for the north-east, and judicial powers shall be vested in such institutions. The ISGA shall take appropriate measures to ensure the independence of the judges.
Subject to clauses 4 (human rights) and 22 (settlement of disputes), of this agreement, the institutions created under this clause shall have sole and exclusive jurisdiction to resolve all disputes concerning the interpretation and implementation of this agreement and any other disputes arising in or under this agreement or any provision thereof.
11/ Finance
The ISGA shall prepare an annual budget.
There shall be a financial commission consisting of members appointed by the ISGA. The members should have distinguished themselves or held high office in the fields of finance, administration or business.
This commission shall make recommendations as to the amount out of the consolidated fund to be allocated to the north-east. The GOSL shall make its good faith efforts to implement the recommendation.
The ISGA will, giving due consideration to an equitable distribution, determine the use of funds placed at its disposal. These funds shall include the North-east General Fund, the North-east Reconstruction Fund (NERF) and the Special Fund.
The GOSL agrees that any and all of its expenditures in or for the north-east shall be subject to the control of the ISGA.
11.1 North-east General Fund
The North-east General Fund shall be under the control of ISGA and shall consist of:
11.1a The proceeds of all grants and loans made by the GOSL to the ISGA and the proceeds of all other loans made to the ISGA
11.1b All allocations by the GOSL from agreements with states, institutions and/or other organisations earmarked in any such agreements for the north-east
11.1c All other receipts of the ISGA, other than the funds specified below.
11.2 North-east Reconstruction Fund
The NERF shall continue to exist in its present form except that control over it will be transferred to the ISGA.
All grants given for the reconstruction of the north-east will be received through the NERF. Utilisation of resources from NERF will be directly determined and supervised by the ISGA.
11.3 Special Fund
All loans and any grants which cannot be channelled through the NERF for the specific purpose of RRRD will be received into the Special Fund. As in the case of other funds, the ISGA shall control the Special Fund.
12/ Powers to borrow, receive aid and trade
The ISGA shall have powers to borrow internally and externally, provide guarantees and indemnities, receive aid directly, and engage in or regulate internal and external trade.
13/ Accounting and auditing of funds
13.1 The ISGA shall appoint an auditor general
13.2 All funds referred to in this agreement shall be operated, maintained and audited in accordance with internationally accepted accounting and auditing standards. The accounts will be audited by the auditor general. The auditing of all moneys received from international sources shall be subjected to approval by an internationally-reputed firm appointed by the ISGA.
14/ District committees
14.1 In the effective exercise of its legislative and executive powers, the ISGA may create district committees to carry out administration in the districts, and delegate to such committees such powers as the ISGA may determine. The chairpersons of such committees shall be appointed by the ISGA from amongst its members in order to serve as a liaison between the ISGA and the committees.
14.2 The other members of the committees shall also be appointed by the ISGA, which shall have the powers to suspend or terminate any such appointment. In appointing such members, due consideration shall be given to ensure representation of all communities.
14.3 The committees will function directly under the ISGA.
14.4 The chief administrator of the ISGA shall appoint principal executive officers in the districts, who shall also function as the secretaries to the committees. The chief administrator shall have the powers to suspend or terminate any such appointment.
14.5 All activities and functions of the committees shall be co-ordinated through the respective secretaries to the committees.
14.6 Sub-committees may also be appointed to facilitate administration.
15/ Administration
As part of the exercise of its executive powers the ISGA shall have direction and control over any and all administrative structures and personnel in the north-east pertaining to the powers set out in Clause 9 of this agreement.
The ISGA may, at its discretion, create expert advisory committees in necessary areas. These areas will include but are not limited to economic affairs, financial affairs, judicial affairs, resettlement and rehabilitation affairs, development of infrastructure, and essential services.
16/ Administration of land
Since land is vital to the exercise of the powers set out in Clause 9 (jurisdiction of the ISGA), the ISGA shall have the power to alienate and determine the appropriate use of all land in the north-east that is not privately owned.
The ISGA shall appoint a special commission on administration of land to inquire into and report on the rights of dispossessed people over land and land subject to encroachment, notwithstanding the lapse of any time relating to prescription.
The ISGA shall determine the term of competencies of the special commission.
17/ Resettlement of Occupied Lands
The occupation of land by the armed forces of the GOSL, and the denial to the rightful civilian owners of unfettered access to such land, is a violation of the norms of international law.
Such land must be immediately vacated and restored to the possession of the previous owners. The GOSL must also compensate the owners for the past dispossession of their land.
The ISGA shall be responsible for the resettlement and rehabilitation of displaced civilians and refugees in such lands.
18/ Marine and offshore resources
The ISGA shall have control over the marine and offshore resources of the adjacent seas and the power to regulate access thereto.
19/ Natural Resources
The ISGA will have control over the natural resources in the north-east region.
Existing agreements relating to any such natural resources will continue in force. The GOSL shall ensure that all monies due under such agreements are paid to the ISGA.
Any future changes to such existing agreements should be made with the concurrence of the ISGA.
Future agreements shall be entered into with the ISGA.
20/ Water use
Upper riparian users of river systems have a duty to ensure that there is a fair, equitable and reasonable use of water resources by lower riparian users.
The GOSL and the ISGA shall ensure that this internationally recognised principle is followed in the use of water resources.
21/ Agreements and contracts
All future agreements concerning matters under the jurisdiction of the ISGA shall be made with the ISGA.
Existing agreements will continue, but the GOSL shall ensure that all proceeds under such agreements are paid to the ISGA.
Any changes to such existing agreements should be made with the concurrence of the ISGA.
22/ Settlement of disputes
Where a dispute arises between the parties to this agreement as to its interpretation or implementation, and it cannot be resolved by any other means acceptable to the parties including conciliation by the Royal Norwegian Government, there shall be an arbitration before a tribunal consisting of three members, two of whom shall be appointed by each party.
The third member, who shall be the chairperson of the tribunal, shall be appointed jointly by the parties concerned.
In the event of any disagreement over the appointment of the chairperson, the parties shall ask the president of the International Court of Justice to appoint the chairperson.
In the determination of any dispute the arbitrators shall ensure the parity of status of the LTTE and the GOSL and shall resolve disputes by reference only to the provisions of this agreement.
The decision of the arbitrators shall be final and conclusive and it shall be binding on the parties to the dispute.
23/ Operational period
This agreement shall continue until a new government for the north-east, pursuant to a permanent negotiated settlement, is established.
The parties will negotiate in good faith to reach such a settlement as early as possible.
Provided, however, that at the end of four years if no final agreement has been reached between the parties to this agreement, both parties shall engage in negotiations in good faith for the purpose of adding, clarifying, and strengthening the terms of this agreement.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com