Saturday, November 10, 2012

இன்டப்போலில் தலைவராக முதன்முறையாக பெண் அதிகாரி நியமனம்

சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவராக முதன்முறையாகப் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பில் உலக நாடுகளைச் சேர்ந்த 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் கமிஷனராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிரிலி பாலஸ்டிராசி(வயது 58) என்ற பெண் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பதும், பல முக்கியமான வழக்குகளை சிறந்த முறையில் கையாண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஊத்தை சேது எனப்படுகின்ற நடராஜா சேதுரூபனையும் கைது செய்யவேண்டும்.

    ReplyDelete