Friday, May 28, 2010

வைகோ உள்பட ஆயிர‌க்கண‌க்கானோர் கைது .

நதி நீர் பிரச்சனை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையில் மறியல் செய்ய முயன்ற ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்சனைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளா அரசு பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

இதில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 500 பேரும் ஆனைக்கட்டியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 340 பேரும், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட 750 பேரும் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.

வலந்தாயமரத்தில் நடைபெ‌ற்ற ம‌றிய‌‌லி‌ல் தமிழ் தேசப் பொதுவுடமை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 150 பேரும், நடுப்புணியில் ம.தி.மு.க விவசாயி அணித் தலைவர் சூலூர் பொன்னுசாமி, மற்றும் உடுமலை 9-6 சோதனைச் சாவடியில் ஈரோடு நாடாளும‌ன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

1 comment:

  1. tamilnaddu tamils have to go to kerala because kerala malaiyali is the indian policy mekers today so karunaanithi now doing the ancian typof work he is now looking toward how can do somthing with kuspu

    ReplyDelete