Tuesday, November 22, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 04 - பிறேம்குமார்

ராஜிவ் கொல்லப்படுவதற்க்கு சரியாக 1 ஆண்டுக்கு முன்பு பேரறிவாளனும் இரும்பொறையும் இலங்கைக்கு சென்றனர் . முத்துராஜா அவர்களுக்கு சில மாதம் முன்பே சென்று விட்டான். இரும்பொறை என்னும் நபர் தி.க வை சேர்ந்த நபர். பேரறிவாளனும் தி.க வை சேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொரும்பாலான இந்தியர்கள் திராவிட கழத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எல்லாம் ஆமை கறி தராத பிரபாகரன் சீமானுக்கு மட்டும் ஆமை கறி தந்தது ஒர வஞ்சனை.

சரி நாம் மீண்டும் கொலை வழக்குக்கு வருவோம். இலங்கை சென்ற இந்த இருவரும் முத்துராஜாவுடன் 1990-ம் ஆண்டு அக்டோபரில் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பினர். இவர்கள் சென்னைக்கு வராமல் கோவைக்கு சென்றனர். பக்கியநாதனையும் கோவைக்கு வர வைத்த முத்துராஜா உளவு பிரிவு நிக்சனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். கோவையில் உளவு பிரிவு தளம் அமைக்கப்பட்டது.

1991-ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிக்சன், மற்றொரு இளைஞரை பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அவரும் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளைஞர்தான், ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முருகன்!

நிக்சன், பாக்கியநாதனிடம் முருகனை அழைத்து வந்ததற்கு காரணம் இருந்தது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்ததாக கூறப்பட்டு, 1991 ஜனவரியில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.(பத்மநாபா படுகொலை பற்றி இதில் எழுதும் பொழுது அதை கொஞ்சம் விரிவாக சொல்கிறேன்)

கவர்னர் ஆட்சி ஆரம்பித்தது.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், தமிழகத்தில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அறியப்பட்ட முத்துராஜாவை இந்திய உளவுப்பிரிவு கண்காணித்து வந்தது. இதனால், முருகனை தனது வீட்டில் முத்துராஜாவால் வைத்திருக்க முடியவிலலை. இதனால் முருகனை, இந்தியர் வீட்டில் உறவினர் என்று தங்க வைப்பதே பாதுகாப்பானது என்று நிக்சன் முடிவெடுத்தார். அதற்காகவே பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். விடுதலைப்புலிகள் மீது உச்ச அபிமானத்தில் இருந்த பாக்கியநாதன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

முருகன் என்னும் ஸ்ரிதரன் இவன் யாழ்பானத்தை சேர்ந்தவன் 1987 ல் விடுதலை புலியில் இணைந்தான். பொட்டாமான் ஆள்( இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ராஜிவ் காந்தியை கொல்ல அல்ல வரதராஜ பெருமாள் கதையை முடிக்க, இது பற்றி விரிவாக அடுத்து எழுதுகிறேன் )

பாக்கியநாதனுக்கு மட்டுமே இவன் புலி கூட்டம் என தெரியும். மற்றவர்களிடம் தான் இலங்கையில் இருந்து இங்கிலீஸ் கிளாஸ்க்காவும் வேலை தேடியும் இந்தியா வந்தாக குறிப்பிட்டான். பாக்கியநாதன் குடுப்பத்தில் உள்ளோரிடம் நட்பாக பழகினான். மறுபுறம் பேரறிவாளனுடன் சேர்ந்து தினசரி தூர்தர்சன் செய்திகளை VCR ல் ரெக்கார்டு செய்து இலங்கையில் தன் தலைமைக்கு அனுப்பினான். (ராஜிவ் படுகொலைக்கு பிறகு இந்த கேசட்டுகளை தன் நண்பன் வீட்டில் பேரறிவாளன் ஒழிய வைத்து அது கண்டு பிடித்து எடுக்கப்பட்டது )

மேலும் இயக்கத்துக்கான ஆட்களை ஒருங்கிணைப்பது உளவு தளத்தை பலப்படுத்துவது என பிசியாக இருந்தான். இந்த சூழ்நிலையில் தான் பாக்கியநாதன் அக்கா நளினி வீட்டுல் கோவிச்சி கொண்டு வெளியே இருப்பது தெரிய வந்தது. அவரை சமாதானப்படுத்த அவர் கம்பேனிக்கு சென்றான் அவன் அன்பான பேச்சு நளினிக்கு பிடித்து போனது, அடுத்த அடுத்த சந்திப்பு தொடர்ந்தது காதல் மலர்ந்தது . தான் விடுதலை புலிகள் இயக்கத்தில் செயல் படுவதையும் தெரிவித்தான். ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ் ( தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டோரில்ஒருவன் ) எல்லோரும்.

விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நண்பர்களும் தனித்தனியே தொடர்ந்து நளினியின் அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவருடனும் நளினிக்கு நட்பு ஏற்பட்டது. நெருக்கமானார்கள். நளினிக்கு மகிழ்ச்சிதான். முருகன் என்கிற நபர் அவரது வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவருக்குத் தன் குடும்பத்தாருடன் இருந்த கோபங்கள் குறைய ஆரம்பித்து, பழைய உறவுகள் பலப்படத் தொடங்கியிருந்தன. புதிதாகவும் பல நட்புகள் கிடைத்திருந்தன. அப்படி ஒருநாள் ஒருவரை அறிமுகப்படுத்தி இவர் தனக்கு மேலான இயக்க பொறுப்பாளர் என்றான் . அவன் பெயர் சிவராசன்.

சிவராசன் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியை சேர்ந்தவன் பாக்கியச்சந்திரன் என்பது தான் இவன் இயற்பெயர் இயக்கத்தில் ரகு எனவும் சிவராசன் எனவும் அழைக்கப்பட்டான். ஆரம்ப நாட்களில் டெலோ இயக்கத்தில் இருந்த இவன் பின் நாட்களில் விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இனைத்து கொண்டான். எதையும் மிகவும் நுட்ப்பமாக திட்டமிட்டு செயல் படுத்த கூடியவன். உதாரனமாக இவன் தங்கி இருந்த இடத்தை அதிகாரிகள் கைப்பற்றிய பொழுது அதில் ஸ்ரீபெரும் புதூருக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேருந்து செல்கிறது எந்த எந்த இடத்தில் அவை நிற்க்கும் என்பது முதற்கொண்டு அவன் குறித்து வைத்து இருந்தது தெரிந்தது.


அதே போல அதீத துனிச்சலுக்கு சொந்தகாரனாக இருந்து இருக்கிறான். இவனை ஒட்டு மொத்த இந்திய போலீசும் , ரானுவமும் தேடிய பொழுதும் பொட்டமானை தொடர்பு கொண்டு ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கும் மல்லிகை அலுவலகத்தை தாக்க அனுமதி கேட்டு இருக்கான். ராஜிவ் கொலைக்கு முன்பும் பல முறை தமிழ்நாட்டுக்கு இவன் வந்து உள்ளான் . இவன் போரில் கண்பாதிப்புக்கு உள்ளான பொழுது சிகிச்சைக்கு மதுரைக்கு வந்து உள்ளான்.

அதன் பிறகு EPRLF தோழர் பத்மநாபாவை கொலை செய்ய தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளான் .தோழர் பத்மநாபா பிரபாகரனுக்கு நேர் எதிர் கொள்கையை கொண்டவர் . பிரபாகதரன் சர்வாதிகாரத்தை விரும்புபவர். தோழர் பத்மநாபாவோ அனைத்திலும் ஜனநாயக்கத்தை விரும்புபவர். அதனாலேயே விடுதலை புலிகளோடு முரண்பட வேண்டி இருந்தது. ( தோழர் பத்மநாபா பற்றி தனி தொடரே எழுதலாம் )

விடுதலை புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தோழர் வரதராஜ பெருமாளும் இந்தியாவில் அடைக்கலம் கோரி தஞ்சம் அடைந்தனர். பத்மநாபாவை கொல்லும் திட்டம் சிவராசனிடமும் , டேவிட்டிடமும் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு உளவு வேலை பார்க்க 20 வயது இளைஞனை பிடித்தனர். அவன் பெயர் சுதந்திர ராஜா என்னும் சாந்தன் தற்பொழுது சிறையில் இருக்கும் 6 பேரில் இவனும் ஒருவன்.

தொடரும்...

No comments:

Post a Comment