Saturday, December 7, 2019

தலைமைத்துவம் சரிவர இயங்கினால் நாட்டு மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்!

நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் கிடைத்தால், நாட்டு மக்களும் சேர்ந்து சிறப்பாகச் செயலாற்றுவார்கள் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற புடைவைக் கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது, மிளகு போன்ற பொருட்களை இந்நாட்டுக்குக் கொண்டுவந்து மீண்டும் மீள்ஏற்றுமதி செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அதனால்தான் தேசிய மிளகு உற்பத்தியார்களின் மிளகின் விலை அடிமட்டத்திற்குச் சென்றுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நேற்று மிளகு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்தோம் எனக் கூறியது மட்டுந்தான் 40 ரூபாவிலிருந்த மிளகின் விலை 800 ரூபாவாக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தலைமைத்துவம் சரிவரக் கிடைத்தால், இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களும் உசார் நிலையில் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது எனவும் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com