Tuesday, November 12, 2019

சஜித் பிறேமதாஸ வை கொலைசெய்ய சதித்திட்டம்..

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை 13 ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் சஜித் பிறேமதாஸ மீது போலித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் முயல்வதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக செய்திகள் பரவிவருகின்றது.

இவ்வாறு அவரை வைத்தியசாலையில் அனுமதித்து அனுதாபவாக்குகளை பெற்றுக்கொள்வதே இச்சதித்திட்டத்தின் நோக்கம் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

அவ்வாறு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அதற்கான பொறுப்பை எதிராளிகள் மீது சுமத்தி , மக்களை கோத்தபாயவிற்கு எதிராக எவ்வாறு தூண்டுவது என மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க , ஹரேன் பெர்ணாந்து மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகதகவல்களை மேற்கோள்காட்டியே இவ்எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com