Saturday, October 26, 2019

கோத்தாவை தோற்கடிப்பதாக நினைத்து சஜித்திற்கு வாக்களித்து ஆகப்போவது ஒன்றுமில்லை! -அநுரகுமார

கோத்தபாய ராஜபக்ஷாவை தோற்கடிப்பதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பது முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காது என ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கூறுகிறார்.

அக்கறைப்பற்றில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று மாலை அக்கறைப்பற்றில் பேரணி இடம்பெற்றது.

அவர், அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,


'சிங்களத் தலைவர்கள் சிங்களப் பகுதிகளில் இனவாதத்தைத் தூண்டுகின்றார்கள். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் பகுதிகளில் இனவாதத்தைக் கக்குகின்றார்கள். இனவாதத்தை அழித்தொழிக்க சஜித்திற்கு வாக்களிக்குமாறு கூறுகிறார்கள். நான் சஜித்திற்கு ஒரு சவால் விடுக்கிறேன். அதுஎன்னவென்றால், கோத்தபாயவை எங்காவது விமர்சித்ததுண்டா? இனித்தான் விமர்சிப்பாரா?

நாங்கள் சம உரிமைகளுக்காக எழுந்துள்ளோம். ஒரு தாய்மக்கள் போன்ற நாட்டை உருவாக்குவோம்... எங்களுடன் சேருமாறு அனைவரையும் அழைக்கிறோம்.' எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com