Monday, April 22, 2019

மாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.

மாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த கைதுகளானது முஸ்லிம் சமூகத்தின்மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நோகடிப்பு என கூக்குரலிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்ளை விடுவிக்குமாறு அரசாங்கத்தையும் நிர்பந்தித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவனும் நேற்றைய குண்டுவெடிப்புக்களின் தற்கொலைதாரியாக உள்ளதாக தற்போது அறியமுடிகின்றது.

இவ்விடயத்தினை ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கபீர் ஹசிம், மாவனல்லை புத்தர் சிலை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தான் அரசாங்கத்தை வலியுறுத்தியாதாக அம்புலி மாமா கதை கூறியுள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com