Saturday, March 23, 2019

என்னை விட கோத்தபாயவே பொருத்தமானவர். பசில் ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராவதற்கு தன்னை விட கோத்தபாய ராஜபச்சவே சிறப்பானவர் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லங்காதீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் :

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்கள் ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால் கோத்தபாய ராஜபக்சவினை களமிறக்குவதற்கு தமது குடும்பம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பொதுஜன பெரமுன வின் பங்காளிக்கட்சிகளின் உடன்பாடு அதற்கு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com