Monday, February 4, 2019

ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்ட சுதந்திர தின செய்தி

எமது பொது எதிரியாகிய வறுமையையும் ஊழலையும் ஒழிப்பதற்கு நாம் ஒன்றாகச் செயற்பட்டாலேயே தேசிய புத்தெழுச்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்லலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள 71 ஆவது சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சமூக மாற்றத்துக்கு வழியமைக்கக் கூடிய கலந்துரையாடலுக்கும், செயற்பாடுகளுக்கும் சிறந்ததோர் சந்தர்ப்பமாக தேசிய சுதந்திர தினத்தை மாற்றியமைப்போம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு கூறியுள்ளனர்.

இதனிடையே இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 8.00 மணி அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த வருட நிகழ்விலும் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பும், கலை,கலாசார நடனக்கலைஞர்களின் கலாசார நிகழ்வுகள் என கண்கவர் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகளின் சிறப்பு அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மற்றும் அவரது பாரியாரும் சிறப்பித்து வருகின்றார்கள்.

இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சகல உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், அரச அதிகாரிகள் மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் இரண்டாம் நிலை அதிகாரிகளும் கலந்து நிகழ்வை சிறப்பித்து வருகின்றார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com