Monday, January 21, 2019

முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல், நீடிப்பு - கோட்டை நீதிமன்றம்.

முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய நாட்டவரான, மர்சிலி தோமஸ் ஆகியோர், இன்று கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இவ் இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் சுகயீனமடைந்துள்ள நாலக்க டி சில்வாவிற்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை, சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் வழங்க முடியும் என சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் இன்று அறிவித்துள்ளார்.

எனினும், மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய, திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com