Thursday, January 3, 2019

வருட முடிவுக்குள் தடையவியல் பரிசோதனை நிறைவுபெறும்

2019 ம் ஆண்டுக்குள் முறி விநியோக மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் தடையவியல் பரிசோதனை நிறைவு செய்யப்படும் என, மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிணை முறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படும் தடையவியல் பரிசோதனைகளை துரிதமாக நிறைவுறுத்தும்படி முன்னதாக மத்திய வங்கியின் ஆளுநருக்கு அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய குறித்த தடையவியல் பரிசோதனை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com