Saturday, January 19, 2019

மனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதியும் செல்லலாம் - நீதிமன்றம்.

மன்னார் சதொச வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு, ஆய்விற்காக கொண்டு செல்லும் குழுவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றையதினம் இதற்கான அனுமதியை மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கியது. மன்னார் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு கார்பன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த மனித எச்சங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை ஆய்வுக் குழுவினர், அமெரிக்காவின் புளோரிடாவிற்கு கொண்டு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com