Friday, January 18, 2019

கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க நாம் தயார் - சுசில் பிரேமஜயந்த.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து பயணிக்கத் தமது தரப்பு தயராகவே உள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. இதனைக் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து செயல்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு, இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அழைப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒன்றிணைந்து செயற்பட, தமது தரப்பு இப்போதே தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

சாமானிய மக்களின் தேவைக்காகவும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து பயணிக்க தமது தரப்பு தயாராகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையாக செயற்பட்ட ஒரு தலைவர், மஹிந்த ராஜபக்ஷதான் என்பதை, தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் தான் வடக்கு மாகாணத் தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 1987 ஆம் ஆண்டுமுதல் இருந்தாலும், வடக்கு தேர்தலை நடத்த முடியாத நிலையே காணப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இதன் போது, நினைவூட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com