Friday, January 18, 2019

இப்போதைய அரசாங்கம், உடையும் தருவாயிலுள்ள பல்லின் நிலையை கொண்டுள்ளது - கம்மன்பில

ஆட்சியில் உள்ள தற்போதைய அரசாங்கம், உடையும் தருவாயிலுள்ள பல்லை போன்று காணப்படுவதாக, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறினார். பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்கட்சியில் இருக்கும் போது பெரும்பான்மையை நிரூபித்துக்கொள்ள முடியுமாக இருந்தாலும், அரசாங்கத்துக்கு வந்த பின்னர், அதனை காண்பிக்க இதுவரை முடியாமல் தான் உள்ளதாக கூறினார். .

நிலைமை இப்படியே நீடித்தால், 2015 ஆம் ஆண்டு வெறுமனே 47 உறுப்பினர்களுடன் இருந்த பிரதமராகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பார் என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com