Sunday, January 13, 2019

அடுத்தவராம் தனியான காரியாலயத்தில் சந்திரிக்கா

புதிதாக கட்சிக் காரியாலயம் ஒன்றை அமைக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளதாக அதன் ஒருங்கமைப்பாளர் பண்டார அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்த புதிய கட்சிக் காரியாலயம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பண்டாரநாயக்க கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றது. இந்தக் கட்சி காரியாலயம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை ஆகிய உறுப்பினர்களின் பங்களிப்புடன் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சந்திரிகா கூறியுள்ளார்.

இந்த புதிய கட்சிக் காரியாலயத்துக்காக ராஜகிரிய பிரதேசத்தில் கட்டிடமொன்று கட்சி உறுப்பினர்களினால் பெறப்பட்டுள்ளதாகவும் சகல வசதிகளுடன் உள்ள இக்கட்சிக் காரியாலயம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது முக்கிய கேந்திர நிலையமாக செயற்படவுள்ளதாகவும் அக்கட்சியின் ஒருங்கமைப்பாளர் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி, D .A. ராஜபக்ஷவை முதன்மைப்படுத்திய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதால், S .W . பண்டார நாயக்கவின் சின்னங்கள் அழிக்கப்படுவதாகவும், மழுக்கடிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அண்மைய நாட்களில் குற்றம்ச்சாட்டுக்களை கூறி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com