இனிவரும் காலங்களில், குடிநீர் போத்தல்களில், மாற்றம் ஏற்படும் - அஜித் மான்னப்பெரும.
தற்போது விற்பனைக்காக சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குடிநீர் போத்தல்களின் நிறத்தை எதிர்காலத்தில் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச் சூழல் பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும இதனை கூறினார்.
மக்களை ஈர்க்கும் வகையிலேயே குடிநீர் போத்தல்கள் நீல நிறத்தில் தயாரிக்கப்படுவதாக, அவர் கூறினார். அத்துடன் குடிநீர் போத்தல்கள் உக்குவதற்கு நீண்ட காலம் செல்வதால், சுற்றுச் சூழல் கடுமையாக பாதிப்படைவதாக அஜித் மான்னப்பெரும கூறினார்.
எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் போத்தல்களின் நிறத்தை, மாற்றியமைப்பதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.
0 comments :
Post a Comment