Monday, January 21, 2019

அங்குணுகொலபெலஸ்ஸ கைதிகள் சித்திரவதை அறிக்கை தலதா அத்துகோரலவிடம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணை அறிக்கையை மூவரடங்கிய குழு விசாரணை செய்திருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில் சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் சம்பந்தமான CCTVகாட்சிகள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டிருந்தன

இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு குழுவின் அறிக்கை இன்று அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழு சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com