Monday, January 21, 2019

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் - மன்னார் நகர சபையில் தீர்மானம்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க, மன்னார் நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய தினம் மன்னார் நகர சபையின் 11ஆவது அமர்வு மன்னார் நகர சபையின் ‘சபா’ மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

சபை அமர்வில், வீதி, கழிவு அகற்றல், வடிகான் புனரமைப்பு, குளம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களினால் முன்வைக்கப்பட்ட மன்னார் மது விற்பனை நிலையம் தொடர்பான முறைபாடுகளும், சபையின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதற்கமைய மன்னார் நகர சபையின் நிபந்தனைகளுக்கு அமைய குறித்த மது விற்பனை நிலைய செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும், அல்லது மது விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com