Tuesday, January 8, 2019

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அங்கொடயில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த அசம்பாவிதம் சுமார் இரவு 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர் குறித்து எந்த தகவலும் இன்னும் அறியப்படவில்லையென பொலீசார் கூறுகின்றனர். அத்துடன் உயிரந்தவரின் சடலம் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com