Wednesday, January 2, 2019

வடக்கு மக்களுக்கு ரெஜினோல்ட் குரே தான் வேண்டுமாம்.

கிளிநொச்சி மாவட்டத்தில், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திற்கு மீண்டும் ரெஜினோல்ட் குரேவை, ஆளுநராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியே, இந்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

ஆளுநர் ரெஜினோல்ட் குரேவின் கோரிக்கைக்கு இணங்க, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண
பொருட்களை ஏற்றிய தொடரூந்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு வந்த போது, இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாண தொண்டராசிரியர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வடக்கு மாகாணத்திற்கு ரெஜினோல்ட் குரேவை மீண்டும் ஆளுநராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதிக்கான மனுவொன்றை, போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தனர்.















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com