ஓரிரு வாரத்துக்குள் அர்ஜுன் மஹேந்திரன் இலங்கையில் - ஜனாதிபதியின் வேண்டுகோள் சாத்தியமாகுமா?
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்புர் சுற்றுலாத் துறையினருடன் கலந்துரையாடியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் பிரகாரம், இன்னும் ஓரிரு வாரத்துக்குள் அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர முடியுமாக இருக்கும் எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம நம்பிக்கை வெளியிட்டார். இதனிடையே மத்திய வங்கி முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment