Thursday, January 24, 2019

எரிபொருளுக்கு போன்றே பால்மாவுக்கும் விலை சூத்திரம்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்கு விலைச்சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருளுக்கு போன்றே பால்மாவிற்கும் விலைச்சூத்திரம் ஒன்றை கொண்டு வருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பால்மாவின் விலைக்கு அமைவாக, நாட்டிலும் பால்மாவின் விலையில் மாற்றம் ஏற்படும் வகையில் இந்த விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அண்மையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் சில கோரிக்கை விடுத்திருந்தன. அதன்படி பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்து, இந்த பேச்சுவார்த்தையின் பலனாக பால்மாவுக்கான விலை சூத்திரம் அறுமுகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com