Tuesday, January 8, 2019

இறுதிப்போரில் பலியானவர்களை கணக்கிடுமாறு சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் இடப்பெற்ற இறுதிப்போரில் பெருந்தொகையானவர்கள் பலியாகியுள்ள நிலையில், பலியாகிவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுமாறு இரண்டு சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போரின்போது பலியானவர்களின் முழுமையான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. குறித்த துல்லியமான விபரங்களை உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அத்துடன், மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழுக்கள் ஆகியன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

2009 ஆண்டு நிறைவுக்குவந்த போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணிப்பிடல் முக்கியமானது என்று, உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்திற்கான நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அளவிடும் பணிகளை இலங்கை மற்றும் வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழுக்களின் புரதிநிதி பற்றிக் போல் தெரிவித்துள்ளார். இதில் தமிழர்கள் மாத்திரமன்னரி சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம் போன்றோரின் எண்ணிக்கையும் மதிப்பிடப்படும் என்று அவர் மேலும் கூறினார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com