Wednesday, January 23, 2019

இலங்கை மீண்டும் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலைகள் உருவாகியுள்ளன - திறைசேரி

இலங்கை, மீண்டும் சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தோன்றியுள்ளதாக, திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை, 1.5 மில்லியன் டொலர் நிதியினை சர்வதேச நாணய நிதியத்திற்குத் திரும்பச் செலுத்திய பின்னரே, இந்தப் புதிய கடனுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இருவர், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களின் விஜயம் அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் அளிக்கும் பாரிய கடன் தொகை, இந்த ஆண்டில் இலங்கைக்கு கிடைக்கும் ஏதுநிலைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

87 பில்லியன் ரூபா பெறுமதியான இந்தக் கடன் தொகையானது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த கடன் தொகையானது கடந்த ஆண்டே நாட்டிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்போது நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்ப நிலைமை காரணமாக, அது குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com